படுகை நண்பா்களுக்கு வணக்கம்!
அண்மையில் உடுமலைப்பேட்டையில் நடந்த சாதிக் கொலை மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. வரும் புதிய வருடத்திலாவது இவைகள் குறையவேண்டும் என கூறி, தமிழ்தாயின் தலைமகளாம் சித்திரை மகளை வரவேற்போம்.
சித்திரை பெண்ணே நீயும் வா! வா !
சிறப்பை எங்களுக்கு அள்ளித் தந்திட வா! வா !
சண்டைகள் இங்கே ஓய்ந்திட, ஓய்ந்திட
சங்கடங்கள் இங்கே தீா்ந்திட, தீா்ந்திட,
சாதி எனும் கொடிய மிருகம் துரத்த,
சித்திரை பெண்ணே நீயும் வா! வா !
சிலம்பம் தனை கையில் ஏந்தியே வா! வா!
சீறிப்பாய்ந்திடு வெகு சீற்றத்துடன்,
சுழல் போல் சுற்றி அடித்து, அடித்து,
சூறையாடிடும் சூறைகாற்றுடனே, அவர்
செவியில் அறைந்து நீயும் சொல்லு, சகதி நிறைந்த
சோ்(று) அது என்று சத்தமிட்டுகொஞ்சம் நீயும் சொல்லு,
சைதன்யத்தில் என்றும் அமைதி நிலைக்க,
சொா்க்க பூமியாய் மாற்றிட வாராய்
சோலை வனமாய் ஆக்கிட வாராய்
செளபாக்யம் தனை தரணிக்கு கொடுக்க
சித்திரை பெண்ணே நீயும் வா! வா !
சிறப்பை எங்களுக்கு அள்ளித் தந்திட வா! வா !
சித்திரை பெண்ணே நீயும் வா! வா !
-
- Posts: 29
- Joined: Fri Sep 20, 2013 4:48 pm
- Cash on hand: Locked
-
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: சித்திரை பெண்ணே நீயும் வா! வா !
மன்மதனுக்கு விடைகொடுத்து
துர்முகியை வரவேற்கும்
தங்கள் வேண்டுதல் சூப்பர்