படைப்புகளைப் பதிவிட > POST REPLY என்ற பட்டனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், எப்பொழுதும் போல.. எது செய்தாலும் முதல் கிரிடிட் படுகைக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாய விதிமுறை. படங்கள் ஆனாலும் சரி...நகைச்சுவைத் துணுக்குகளாக இருந்தாலும் சரி அதில் உங்களுடைய சொந்த ஆக்கம் கொஞ்சம் இருக்க வேண்டும். அதனை முதல் முதலில் படுகையில் தான் பதிந்திருக்க வேண்டும். படங்கள் மற்றும் வீடியோ எனில் சொந்தமாக செய்து, ப்ளாக்கர்/யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டாலும் அதில் படுகை.காம் என்ற வார்த்தையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். படங்களைச் செய்து எந்தவிதமான படம் என்பதனை எழுத்தாகச் சொல்ல மறவாதீர்கள்.
1. சாந்தி
2. முத்துலெட்சுமியம்மா
3. பழனிச்சாமி
4. ரூக்மணி
5. மன்சூர்
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரூ.300/ வீதம் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.
போட்டிக்கான நிபந்தனைகள்:
1. போட்டியின் வெற்றியாளர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். (படுகை பரிசுப்போட்டி விதிமுறைகள் அடங்கும்)
2. குறைந்தது 10 சிறந்த சொந்த ஆக்கங்களை போட்டிக்காக செய்து பின்னூட்டமாக கொடுத்தவர்கள் மட்டுமே வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்படுவர். 15 க்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஆக்கங்களை செய்தால், அதில் சிறப்பாக செய்தவர்களில் 15 பேர் மட்டுமே வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுவர்.
3. இது மிக முக்கியமான நிபந்தனை. அனைவரும் தனது சொந்த ஆக்கத்தை மட்டுமே இங்கு பதிய வேண்டும். மற்றவர்களின் பதிப்பையோ, பிற தளங்களில் வெளியானவற்றையோ இங்கு பதியக்கூடாது. மீறி பதிந்தால் அவர் போட்டியின் வேட்பாளர் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார்.
4. போட்டியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மாற்றி அமைக்கும் அதிகாரம் போட்டி அமைப்பாளருக்கும், படுகை நிர்வாகத்திற்கும் உண்டு.
விளக்கமாக:
போட்டி தொடங்கிய நாள் : 1.1.2013
போட்டிக்காக நீங்கள் செய்யும் அனைத்து ஆக்கங்களையும் இன்று முதல் இப்பதிவின் பின்னூட்டப் பதிவாக கொடுத்து வரலாம்.
போட்டி நிறைவு நாள் : 30.1.2013
ஒருவர் எத்தனை கவிதைகள், கட்டுரைகள், இமேஜ்கள் மற்றும் வீடியோ என செய்யும் ஆக்கங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் 31 ஆம் தேதிக்குள் பின்னூட்டமாக கொடுத்திட வேண்டும்.
போட்டிக்கான ஓட்டெடுப்பு தொடங்கும் நாள் : 31.1.2013
மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 30 ஆம் தேதிக்கு முன்னர் 10 சிறந்த சொந்த ஆக்கத்தையாவது செய்திருக்க வேண்டும், அதற்கு பின்னர் கலந்து கொள்பவர்கள் ஓட்டெடிப்பில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மேலும், ஓட்டெடுப்பிற்கு சிறந்த ஆக்கங்களை கொடுக்கும் 15 நபர்களே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அதற்கும் மேலானவர்கள் 10க்கும் மேற்ப்பட்ட சிறந்த சொந்த ஆக்கத்தினை செய்திருந்தால் 15 நபர்கள் என்பதில் விதிமுறை தளர்வு இருக்கலாம். ஆனால், அர்த்தமற்ற மொக்கை பதிவுகள் போட்டிப் பதிவாய் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், வாக்கு அளிக்கும் உரிமை 100 பதிவுகளைக் கடந்து வாக்குரிமைப் பெற்ற Voters, Gold Members, Contributors மற்றும் படுகை முக்கிய அங்கத்தினர்களுக்கு மட்டுமே உண்டு.
போட்டி ஓட்டெடுப்பு நிறைவு நாள் : 15.2.2013
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மேலும் வாக்கெடுப்பு , இந்த தேதியின் 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம், அது நிர்வாகத்தின் உரிமை.
வெற்றியாளர் அறிவிப்பு : 16.2.2013
ஓட்டெடுப்பினை வெளிப்படையாக நடத்துவதன் மூலம், வெற்றியாளரை 15 ஆம் தேதியே அறிந்தாலும்.... கள்ள ஓட்டுக்கள் விழுந்திருக்கலாம் என்ற கருத்து ஏற்படின், வோட்டெடுப்பை மறுபரீசிலனைக்கு உட்படுத்திய பின்னர் சரியான வெற்றியாளரை அறிவிக்கவே ஒர் நாள் தாமத அறிவிப்பு.
போட்டியின் வெற்றியாளர்க்கு பரிசுப் பணம் மூன்று வங்கி வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்க்கு காசோலையாக பரிசுப் பணம் வழங்கப்படும். இந்தியாவுக்கு அப்பால் இருப்பவர்கள், சொந்த முயற்சியில் விரைவாகப் பெற்றுக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
=====================================================
போட்டி தொடங்கியாற்றி.. சீக்கிரமாக உங்களது படைப்புகளை அள்ளித் தெளியுங்கள்.