Page 1 of 1

ராஜாவின் கப்பல் பயணம்!

Posted: Mon Mar 12, 2012 4:44 pm
by rajathiraja
நமது ஹீரோ ராஜாவுடன் ஒரு குழுவினர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென ஒரு சிறுமி அதிலிருந்து தவறி விழுந்துவிட்டாள்.

‘எனக்கு நீச்சல் தெரியாது, நீச்சல் தெரிந்தவர்கள் யாராவது காப்பாற்றுங்கள’ என்று ஒரே கூக்குரல்..

திடீரென ராஜா கடலுக்குள் குதித்தான். அதற்குள் பாதுகாப்பு படையினர், படகுகள் மூலம் சென்று இருவரையும் மீட்டு மேல்தளத்திற்கு கொண்டு வந்து முதலுதவி அளித்தனர்.

குழந்தை காப்பாற்றப்பட்டதை எண்ணி கப்பலில் இருந்தவர்களெல்லாம் சந்தோசப்பட்டனர்.
‘ராஜா மட்டும் குதிக்கலைன்னா என் குழந்தை என்கிட்ட இருந்து போயிருக்குமே!’ என்று தழுதழுத்த குரலில் அதன் தாய் கூறினாள்.

‘இந்த தைரியம் யாருக்கு வரும். இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அரசின் சார்பாக பதக்கங்கள் வழங்குவர்கள்’ என்றார் இன்னொருவர்.

‘ராஜா ஈஸ் கிரேட்’ என்று இன்னொரு குரல்..

ஆளாளுக்கு பாராட்டு மழை குவிய, மயக்கத்திலிருந்த ராஜா மெதுவாக கண்திறந்தான்.
சுற்றும் முற்றும் அனைவரையும் பார்த்தான்.

மெதுவாக வாய் திறந்து கேட்டான்.

‘எவன்டா என்னை தள்ளி விட்டது!!!


Re: ராஜாவின் கப்பல் பயணம்!

Posted: Mon Mar 12, 2012 7:20 pm
by ramkumark5
ராஜாவ தள்ளி விட்டவங்க தான் கனிமொழியயும் தள்ளி விட்டிருப்பாங்களோ. கனிமொழி is also great.

Re: ராஜாவின் கப்பல் பயணம்!

Posted: Mon Mar 12, 2012 7:53 pm
by ஆதித்தன்
நாயகன் ராஜாவை யாரு தான் தள்ளிவிட்டிருப்பாங்க?
நண்பர்களா? இருக்காதே!
அப்படின்னா அந்த குழுவில் இருந்த கருப்பு ஆடாக இருக்குமோ?

Re: ராஜாவின் கப்பல் பயணம்!

Posted: Mon Mar 12, 2012 11:59 pm
by muthulakshmi123
ஆளாளுக்கு பாராட்டு மழை குவிய, மயக்கத்திலிருந்த ராஜா மெதுவாக கண்திறந்தான்.
சுற்றும் முற்றும் அனைவரையும் பார்த்தான்.

மெதுவாக வாய் திறந்து கேட்டான்.

யார் என்னை கப்பலுக்கு தூக்கி வந்தது என்றான்.. குதித்தவனுக்கு மேலே வரத்தெரியாதா/ என பந்தாவாக சப்தமிட்டான்...(மனதுக்குள் நல்ல வேளை காப்பாற்றி விட்டார்கள் நமக்கோ நீச்சல் தெரியாது..என்று கூறி க்கொண்டான்)

Re: ராஜாவின் கப்பல் பயணம்!

Posted: Thu Apr 05, 2012 10:55 pm
by sumayha
நெசமாலுமா ராஜா.....?
ஆளாளுக்கு பாராட்டு மழை குவிய, மயக்கத்திலிருந்த ராஜா மெதுவாக கண்திறந்தான்.
சுற்றும் முற்றும் அனைவரையும் பார்த்தான்.
தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனச்சுக் குதிச்சிருப்பான்...