இப்பதிவின் கடைசிப் பின்னூட்டத்தினைச் செய்யும் நபர்க்கு ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும்.
இப்பதிவு பரிசுத் தொகை வழங்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது.. பதிவிட்டு உற்சாகமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
வெற்றியாளர்க்கு எனது வாழ்த்துகள்.
அதிகப்பதிவினைச் செய்த, மன்சூர்அலி அவர்கள் வங்கி விவரம் கொடுத்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.(60 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்... அல்லது தவிர்க்கப்படும்).
அதிகப்பதிவு யார் செய்தது என்பதனை இரண்டாம் முறை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லாது, எனக்கு உதவி சற்குணம் அவர்களுக்கு சிறப்பு பரிசாக $5 வழங்கப்படுகிறது.. இதனை பெர்பக்ட் மணி அக்கவுண்ட் எண் PM இல் கொடுத்து பெற்றுக் கொள்ளவும்.
இத்தோடு, தளத்தின் ஆண்டு சிறப்பு பதிவராக மர்மயோகிக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது..
ஒருவர் எத்தனை பின்னூட்டம் (Post Reply) வேண்டும் என்றாலும் செய்யலாம். அதற்காக, அடுத்தடுத்து தானே பின்னூட்டமிடக்கூடாது. மற்றொருவர் பின்னூட்டப்பதிவு செய்தால், அடுத்து நீங்கள் மீண்டும் தங்களது பதிவு கடைசியாக வர பின்னூட்டம் செய்யலாம்.
கடைசியாக செய்யப்பட்ட பின்னூட்டப் பதிவுக்குப் பின், தொடர்ச்சியாக 30 நாட்களில் அடுத்ததாக ஒர் பின்னூட்டத்தினையும் பெறவில்லை என்றால், அது கடைசிப் பின்னூட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, கடைசி பின்னூட்டப் பதிவிட்ட நபர்க்கு பரிசுத் தொகை ரூ.ஆயிரம் வழங்கப்படும்.
போட்டி என்று வந்துவிட்டால், யார் விட்டுக் கொடுக்கிறார் என்பதல்ல, யார் வெல்கிறார் என்பதுதான் முக்கியம். ஆகையால், விடாது பின்னூட்டமிட்டு மற்றவர்களைச் சேர்வடையச் செய்து வெற்றிக் கனியினைப் பறித்துக் கொள்ளுங்கள்.
சரி .... உங்கள் ஆட்டத்தினைத் தொடருங்கள் .....
இப்பதிவு தொடர்ச்சியாக 30 நாட்கள் பின்னூட்டத்தினைப் பெறாவிட்டால், இப்பதிவுத்தொடர் தன் உயிர்மையை இழந்துவிட்டதாகக் கருதி, கடைசிப் பின்னூட்டப் பதிவு நபரினை வெற்றியாளராக, அடுத்த ஐந்து நாட்களுள் அறிவித்து பரிசுத்தொகை வழங்கப்படும்.