ஒரு கவளம் போதுமா?
போதும், அது கிடைத்தால் இஸ்ராயீலுடன் போராடிக் கொண்டிருக்கும் உயிரை ஒரு நாளைக்காவது இழுத்துப் பிடித்து நிறுத்தலாம்.
பஞ்சத்தின் கோரம் ஜாபீரைப் பிடுங்கித் தின்று கொண்டிருக்கிறது. அணு அணுவாக, தண்ணீர், அது எத்தனை நாளைக்கு ஒரு நோஞ்சான் நோயாளியின் உயிரை உடலில் வைத்துக் கொண்டிருக்கும்.
சூடான நீர்த்துளிகள் எனது குழி விழுந்த கண்களிலிருந்து துளிர்ந்தன. சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்ள முயன்றேன், முடியவில்லை. அழுதேன், ஆசை தீர அழுதேன். அழுவதால் என்ன ஆகிடப் போகிறது.
கணவனைக் கார் விபத்தொன்றில் இழந்த நான், கைக் குழந்தையுடனும் மூத்தவன் ஜாபீருடனும் இளையவன் நிஸாருடனும் ஒருவாறு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
கூலிவேலைதான், மாவிடிப்பேன். பாத்திரம் தேய்ப்பேன். சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கி வருவேன். எடுபிடி வேலை எல்லாம் செய்வேன்.
இரண்டொரு கவளம் கிடைக்கும், எனக்கும் என் குழந்தைகளுக்கும் அதுபோதும், இடைக்கிடையே வரும் விசேட தினங்களில் எஜமானிகள் உடுத்து ஒதுக்கிய பழஞ்சீலைகள், பழுப்பேறிய பட்டாடைகள், நூறு,இருநூறு ரூபாய்கள்... இப்படி ஏதாவது...
ஜாபீர் மீண்டும் முனகினான். நோயின் கோரத்தை விடப் பசியின் கோரம் அவனை வதைத்துக்கொண்டிருந்தது. குண்டூசி உடல் குண்டுத் தலை, பாசி படர்ந்த கண்கள், பசி நிறைந்த வயிறு, பார்க்கச் சகிக்கவில்லை. குமுறிக் குமுறி அழுவதா? கோவெனக் கதறுவதா? பயன்...?
கிடைக்கும் கூலி போதாது. கொழுத்த இடம், பெரிய இடம். இப்படியான இடங்களல் போய்ப் பாத்திரம் தோய்த்தாலாவது பலனுண்டு. வேளா வேளைக்குச் சோறும் வேண்டியவரை உதவியும் கிடைக்கும். ஆனால் வீட்டு எஜமானனின் ஒட்டுக்களையும் உரசல்களையும் சகித்துக் கொண்டால் போதும். அவ்வளவுதான். இன்னும் பல சலுகைகள் பெறலாம்.ஏன்? எஜமானின் பள்ளியறைப் பஞ்சனையில் கூடப் படுத்துப் புரளலாம். எதற்கும் துணிவு வேண்டும். துணிவுதான் எஜமானியின் செருப்படியை ஏற்றுக் கொள்ளும் துணிவல்ல. அது என்னிடம் நிறைய உண்டு. ஆனால் நான் சொல்லுவது வேறு துணிவு. மானத்தை இழக்கும் துணிவு. அந்தத் துணிவு எத்தனையோ பெண்களுக்கு வந்தாலும் எனக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறதே: என்ன செய்வது? வெட்கங்கெட்ட சீ இது! இந்த சிந்தனை வேண்டாம். ஆண்டவனே இந்தத் துணிவை மட்டும் எனக்குத்தராதே!
வியர்வையிலும் அழுக்கிலும் புழுங்கி நாறும் சேலை இடையைச் சுற்றியிருக்க அங்குமெங்கும் அழுக்கும் கரியும் படை படையாக அப்பியிருக்க... இந்தத் தோற்றத்திற்கே, இவர்களுக்கு இத்தனை வெறியென்றால் இன்னும் கொஞ்சம் மினுக்கி, மினுக்குவதென்ன சுத்தமாக உடை அணிந்திருந்தாலே போதும். சோரம் போய்விட வேண்டியதுதான். மாற்றிவிடுவார்கள். இல்லாவிட்டால் தந்தையும் மகனுமாகச் சேர்ந்து தவளையைக் குறிவைத்து பாம்பின் கொடூரத்துடன் கண்களின் வெறிபளிச்சிட என்னையே நோக்குவார்களா?
அட ஆண்டவனே! தன் மகன்தான் ஒரு விதவையைச் சுற்றி வட்டமிடுகிறானென்றாவது தந்தை கொஞ்சம் கூட வெட்கப்படவோ வேதனைப்படவோ வேண்டாமா சே... வெட்கக்கேடு.
எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபமா? தந்தைக்குத் தெரியாமல் மகனும் மகனுக்குத் தெரியாமல் தந்தையும் என்னைக் கசக்கி எறிய எடுத்த முயற்சிகள், எத்தனங்கள், பட்ட சிரமங்கள்.
எப்போதோ அவர்களது வீட்டை விட்டு ஓடியிருப்பேன். எஜமானி உம்மா... அந்த நோஞ்சான் நோயாளி மனுசியின் அரவணைப்புத்தான் என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆனால் அதுவும் வெகு விரைவிலேயே தகர்ந்து விட்டதே.
அச்சம்பவம் மட்டும் நடக்காதிருந்தால்...
மகன் பிதற்றினான். உடல் தணலாய்க் கொதித்தது.
உம்மா சோறு சோறு... று சோறு தாம்மா...
அதைத் தவிர வேறு வார்த்தைகள் வர வில்லை. அவன் வாயிலிருந்து.
மகன் ஒரு கவளமாவது உண்ண முடியாத நிலை. அதற்கெல்லாம் காரணம் அந்தச் சம்பவம்தான்,நாக்கூசுகிறது.
பெரிய மனிதர்கள் செய்யும் செயலா இது...?
பென்னம்பெரிய பங்களா வெறிச் சோடிவிடும் எஜமானி உம்மா வெளியே சென்றாலென்றால்... அன்றும் வெளியே சென்றிருந்தார்கள்.இரவுச் சாப்பாட்டிற்கான சகல சுமைகளும் என் தலையில்தான். அந்தப் பெரிய பங்களாவுக்குள் இருந்த நிசப்தத்தைக் கிழித்து கொண்டு அலறிய வானொலியிலிருந்து தந்தையோ, மகனோ வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இடியப்பத்திற்கு மா பிசைந்து கொண்டிருந்தேன். நெருப்புச்சுவாலை முகத்தை வேறு தீய்த்துக் கொண்டிருந்தது. வேலையில் மூழ்கிவிட்டேன்.
திடீரென்று...
சர்ப்பந் தீண்டியது போன்ற உணர்ச்சி. திட்டுக்கிட்டுத் திமிறியவாறு திரும்பினேன். அந்தப் பரப்பில்... என்னை அணைத்துக் கொள்ள முயன்ற எஜமானின் மகன் தள்ளுண்டான்.
''எஜமான்... இது என்ன வேலை? கொஞ்சமாவது வெட்கம் மானம் சீச்சீ ''
அது அவர்களுக்குப் பழக்கம் போலும். வெறி தலைக்கேற கழுதை போல சிரித்தான்.
என்தோற்றம். அழுக்குப் படர்ந்த என் நிலை. எனக்கே குமட்டியது. அவனுக்கோ.....
ஐந்நூறு ரூபாய் நோட்டொன்றை நீட்டினான்.ஏய் இந்தா பிடி...
குடித்திருக்கிறானோ...-?
என் உடம்பு ஏன் இப்படி நடுங்குகிறது. பலங்கொண்டு அவனை விலக்கித் தள்ளினேன். காறி உமிழ்ந்தேன். வெறிகொண்ட நாய் போல அவனது கையைக் கடித்தேன்.
''ஆ'' என்றலறினான். பின்பு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் நெருங்கினான், அடியுன்ட புலியைப் போல.
''அடியே! வேலைக்கார நாயே என்ன செய்றேன் பாரடி''
வாசலடியில் ஏதோ நொருங்கி விழும் ஓசை. தொடர்ந்து ஒரு கனைப்புக் குரல்.
''ஐயையோ வாப்பா வருவது போல இருக்கே என்ன செய்வேன்''
எஜமான் வாசலை நெருங்கிவிட்டார்.
''ஐயோ ஆண்டவனே என்னைக் காப்பாத்து''
பதறித்துடித்தபடி ஓடி ஒளிந்துக் கொண் டான்.
குசினிக் கதவைத் தள்ளித் திறந்தபடி வெறியுடன் என்னை நோக்கினார் எஜமான். முன்னெச்சரிக்கையுடன் கதவைப் பூட்டிக் கொண்டு என்னை நெருங்கினார் அவர்.
புலியிடமிருந்து தப்பியாகிவிட்டது, இனிக் கரடியுடன் போராட வேண்டுமே.
கண்களில் போதை வெறி, உடலின் தள்ளாட்டம் புரிந்தது இப்போது.
அப்பன் கொஞ்சம் தாராளம். அவன் ஆயிரம் ரூபாய்த் தாளை நீட்டினான். நான் அதைக் கிழித்து எறிந்தேன். வெகுண்டான் ''அடியே... ஒன்ற தொழிலே இதுதாண்டி, இன்டைக்கு மட்டும் என்னடி மவுசு''
மிருகத்தின் பிடியிலிருந்து நான் தப்புவதற்குப் பட்ட பாடு...
ஆகவே அப்படித்தான் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்திருக்காவிட்டால் என் கற்பு பரிதாபமாக அழிக்கப்பட்டிருக்கும்.
ஆகவேதான் அப்படிச் செய்தேன். அது ஒன்றே தான் வழி.
எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டை ஒன்றை எடுத்து எங்கெல்லாம் அவனின் அங்கங்கள் தட்டுப்படுகிறதோ அங்கெல்லாம் கொள்ளியால் பதித்து...
உடலைப் பொசுக்கி...
''ஐயோ... ஆண்டவனே உம்மா!'' என்ற அலறல்கள்.
கட்டிச் சதையின் கருகல் நாற்றம்...
எடுத்தேன் ஓட்டம், வேறு சிந்தனையென்ன தப்பித்தேன் பிழைத்தேன் என்று இருளில் விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன்.
நாட்கள் அழிந்துவிட்டன. எஜமானி உம்மாவைக் கூடப் போய்ப் பார்க்கவில்லை. அவளது நன்மைக்காகத்தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நான் வீட்டை விட்டு ஓடியதைப் பற்றி எஜமானி உம்மா மிகவும் வருந்தியிருப்பாள், கணவனைத் திட்டித் தீர்த்திருப்பாள்.
எஜமானின் நிலையென்ன? அங்கமெல்லாம் அழுகி புழுப்பிடித்து சேச்சே..சே அப்படியிருக்காது. அவர்களிடம் பணம் இருக்கிறதல்லவா?
இன்று அவர்கள் வீட்டில்தான் விருந்து.சே! அங்கே போவதா.
மகன் ஜாபீரின் புலம்பல் தீவிரமாக ஒலித்தது. கடைசியில் வற்றிப் போய்விடுமோ?
மனம் சஞ்சலமடைந்தது. துணிவு மெல்ல மெல்ல உடலை ஆட்கொண்டது.
இடத்தை விட்டு எழுந்தேன். மகனே, பயப்படாதே உனக்குச் சோறு கொண்டு வாரேன்.
விருந்து நடக்கும் வீட்டை நோக்கி விடு விடுவென நடந்தேன்.
பின்புற வழியாக வீட்டினுள் சென்றேன்.
ஒரே கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமும் கூத்தும் பாட்டும் அப்பப்பா சகிக்கவில்லை.
பெரிய ஹோலொன்றினுள் ஆண்களின் அட்டகாசம். மற்றொரு ஹோலில் மினி நங்கையர்களின் அட்டகாசம். பெரும்பெரும் சகனில் எல்லாம் நெய்ச் சோறு மிஞ்சிச் சீரழிந்து கிடந்தது... நிச்சயமாக அது வெளியே கொட்டப்படும்.
குசுனியை நெருங்கிவிட்டேன்.
''நில்லடி''
கடூரமான குரல், விக்கித்து நின்றேன். ''யாரது? எஜமானியம்மாவா. நம்பவே முடியவில்லை''
''எங்கடி வந்தே! பற வேச...'' காதில் நாராசம் பாச்சியது போல இருந்தது.
''உம்மா''
''வேச... கேடுகெட்ட தட்டுவாணி... தேவடியாள். என்ன உம்மான்னு சொல்ல உனக்கு வெட்கமா இல்லை. உன் நாக்கு அழுகிப் போகும்டி... போடி இங்கேயிருந்து...''
ஆண்டவனே... இது என்ன சோதனை... ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இப்படி ஒரு தண்டனையா?
அவள் வெறுப்புடன் என்னை நோக்கி முகத்தில் காறி உமிழ்ந்தாள்.
''ஏண்டி ஒன்னைத் தெரியும்டி... ரொம்ப நல்லவள்லுன்னு நெனச்சிருந்தேன். கடைசியிலே என் புருஷனையும் புள்ளயையும் வலை வீசிப் புடிச்சி எங்க வம்சத்திற்கே களங்கம் உண்டாக்கப் பாத்தியேடி... சீ என் முகத்திலே முளிக்காதே... போடி இங்கிருந்து...'' புரிந்தது... நன்றாகப் புரிந்தது. எஜமான் நல்ல கதை கட்டியிருக்கிறான்.
''வெளக்கு மாத்தால அடிச்சு வெரட்டுறதுக்கு முன்னாலே ஒடடி இங்கிருந்து''
நான் விறைந்துப் போய் நின்றேன்.
வர்க்கம் வர்க்கத்தோடுதானா?
(முற்றும்)
- Forex Board index Forex Online Home Business Website சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
-
- It is currently Wed May 01, 2024 5:25 am
- All times are UTC+05:30
வர்க்கம் (சிறுகதை)
படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
- mubee
- Posts: 531
- Joined: Tue Jul 09, 2013 6:04 pm
- Cash on hand: Locked
Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை