இந்திய அரசியல் உண்மைகள் - இந்தியா ஆங்கிலேயர்களின் அடிமை நாடு

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இந்திய அரசியல் உண்மைகள் - இந்தியா ஆங்கிலேயர்களின் அடிமை நாடு

Post by ஆதித்தன் » Wed Nov 16, 2016 10:09 am

உறவுகளே!!!
ஆபத்து கழுத்தினை குறிவைக்கிறது!!!

வணிகர்களுக்கு தீர்வாக ஸ்வாப் மிசின் கொடுத்த நேரத்தில் ஆன்லைனில் 20% - 50% ஆபர் என்று பொருள்களுக்கு தள்ளுபடி செய்வார்கள். பொருளுக்கு முதலாளியே வெள்ளையர்கள் தான், அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் விலையைக் காட்டிலும் குறைவாக ஆன்லைனில் விற்பார்கள். இதனை பல வருடங்களாகவே பெரிய தொகைக்கு வாங்கினால் டிஸ்கவுண்ட், கூடுதல் இலவசப் பொருள் என்று சிறுவணிகர்களுக்கும் பெரிய வணிகர்களுக்கும் விலை வித்தியாசத்தினை பொருள் தயாரிக்கும் கம்பெனி முதலாளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைய தீர்வு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் நஞ்சு.. ஆகையால் விழித்திருங்கள்.


உலக அரசியல் உண்மைகள் என்ற தலைப்பில், இந்தப் பதிவில் இந்திய அரசியல் உண்மைகளைப் பார்க்க இருக்கிறோம். அரசியல் தலைவர்கள் செய்த தவறுகளினால் இந்தியா தற்பொழுது பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. நாம் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு, நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.. இன்னும் 3 ஆண்டுகளே இருப்பதால் விரைவாக செயலில் இறங்கி நம்மையும் வருங்கால சந்ததியையும் காப்பாற்றுவதற்கு என்ன தவறு நடந்துவிட்டது, அதனை எவ்வாறு சரிசெய்யலாம் என்ற விவரம் பார்க்கலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பேசிய ஆவேச வசனம் எல்லோரும் அறிவீர்கள். வெள்ளையனை நோக்கி எதற்காக நாங்கள் கிஸ்தி, திரை, வரி, வட்டி கட்ட வேண்டும் என்று ஆவேசமாக ஜான்சன் துரை என்ற ஆங்கிலேயனிடம் கேட்பார். இதனைப்போன்று பல வசனங்கள் வீரபாண்டிய கட்டபொம்பன் திரைப்படத்தில் பார்க்கும் பொழுது எல்லாம் நமது இரத்தம் கொதிக்கும். தற்பொழுது இந்தியா ஆங்கிலேயர்களுக்கு வட்டியும், வரியும் தான் கட்டிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரியும் பொழுது எவ்வளவு கொதிக்கும் என்று நான் அறிவேன். இருந்தாலும் நிதானமாக புத்திசாலிகளுக்கு புத்திசாலித்தனமாகவே பதில் கொடுத்தல் வேண்டும் என்பதால், அதற்குத் தகுந்தவாறு நாம் காயினை நகர்த்தி ஆங்கிலேயர்கள் பிடியிலிருந்து வெளியேறுதல் வேண்டும்.. இல்லாவிட்டால், கடன் கொடுத்து முழுமையாக அடிமையாக்கிவிட்ட அவர்கள், நம்மை எப்படி வேண்டும் என்றாலும் ஆட்டிப்படைக்கலாம் என்று எண்ணிய திட்டப்படி, அவர்களது ஆசைக்கு நம்மை உயிர்பலி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். அவ்வாறு உயிர்பலி கொடுக்கவும் திட்டம் தீட்டி வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை, அதிலிருந்து நம்மை காத்து, நமது வருங்காலத்தினையும் காக்க ஆவண செய்தல் வேண்டும்.

மன்னர்கள், ஜமின்தார்கள், பண்ணையார்கள் என்று 500-க்கும் மேற்பட்ட சிற்றரசுகளால் ஆளப்பட்ட இந்த இந்தியா என்று சொல்லப்படும் நிலப்பரப்பினை ஆங்கிலேயர்கள் படித்த புத்திசாலிகளைக் கொண்டு, அகிம்சை என்ற சூழ்ச்சியினைப் பயன்படுத்தி உண்மையாக நாட்டுக்காகப் போராடியவர்களை இம்சையாளர் எனப் பிரித்தாண்டு, எல்லோரையும் கொன்றுவிட்டு, அகிம்சை அடிமைகளைக் கொண்டு இந்தியா என்ற நாட்டை உருவாக்கி நம்மை எல்லாம் நிழல் அரசு அமைத்து ஆண்டு வந்திருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

கர்ணன், பீஷ்மர் போன்ற சிறந்த வீரர்களைக் கொண்டிருந்தாலும் சகுனித்தனம் செய்தமையால், அவர்களை வஞ்சகத்தால் கண்ணன் வீழ்த்தியது போல, ஆங்கிலேயர்கள் நமது வீரர்களை அகிம்சை என்ற சகுனித்தனத்தால் வீழ்த்தி நாட்டினை கைப்பிடித்துக் கொண்டார்களே தவிர, அவர்களால் ஒர்போதும் போரினால் வென்றிருக்க முடியாது என்பதே அன்றைய காலத்தில் இந்தியாவின் எதிர்ப்பினால் ஏற்பட்ட உயிர் இழப்பு, ஹிட்லரின் தாக்கத்தால் உயிரிழப்பு, ஜப்பானின் தாக்குதலால் உயிரிழப்பு என்று ஆங்கிலேயர்கள் படை பின் தங்கியிருந்த காலம், நமது அகிம்சை அடிமைகள்... அன்றைய இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாக நமது வீரர்களை அனுப்பி பலியாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அகிம்சை போராட்டாம் என்று நம்மை பிரித்தாண்ட அந்த அடிமைகள், ஆங்கிலேயர்களைக் காக்க நமது வீரர்களின் உயிர்களை கொடுத்திருக்கிறார்கள்.

உள்நாட்டு சகுனிகள் ஆங்கிலேயர்களைக் காத்த காரணத்தினால் தான் பரிசாக உருவாக்கிய இந்தியாவினை தன் அடிமை நாடாக வைத்துக் கொண்டு அதில் உயர் பதவிகளைக் கொடுத்திருக்கிறார்கள், அதுவும் உண்மைகளை வெளியில் சொல்லாமல், மக்களுக்கு பொய்யான தகவல்களைச் சொல்லி, விடுதலை அடைந்துவிட்டோம் என்று கொண்டாட்டம்.

அன்றிலிருந்து இன்று வரை இந்திய மக்களை நிழலாக ஆண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்களே. கல்வி முதல் கத்தரிக்காய் வியாபரம் வரை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன செய்தல் வேண்டுமோ, அதனையே அன்றிலிருந்து இன்றுவரை நவீன வளர்ச்சி என்ற முறையில் ஒவ்வொன்றினையும் அறிமுகம் செய்து வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயன் மட்டுமல்ல, அன்றைய நமது பாட்டனுக்கு பூட்டனும் பல பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தான், எல்லாம் அவனது தேவைக்காகவே. எப்பொழுது ஒருவனுக்கு தேவையும் ஆசையும் எழும்புகிறதோ, அப்பொழுது அவன் அதனை நிஜமாக்கிக் கொள்கிறான். ஆங்கிலேயனுக்கு உலகை எல்லாம் தானே ஆள வேண்டும் என்பதே ஆசை. அதற்காக எல்லா சூழ்ச்சிகளையும் திட்டமிட்டே பல நூற்றாண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

உயர் கல்வி படிப்பினை நமக்கு அறிமுகம் செய்து வைத்ததும் அதற்காகவே, உயர் டெக்னாலாஜி வாழ்வு முறையினை நமக்கு கண்டுபிடித்து அறிமுகம் செய்து வைத்ததும் அதற்காகவே, ஆனால் பாருங்கள், எல்லாத்தையும் கண்டுபிடித்தது என்பது அவர்களிடம் பணத்திற்காக வேலை செய்பவர்களே.. எப்படி அன்று படித்த புத்திசாலிகளைக் கொண்டு சகுனித்தனமாக, நரித்தனமாக இந்தியா என்ற நாட்டினை உருவாக்கிக் கொண்டார்களோ, அதைப்போல் இன்றும் படித்த புத்திசாலிகளை கைக்கூலியாக வைத்தே உலக அரசியல் அனைத்தினையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் ஒரே இடத்திலிருந்து நிழல் தாதாகவும், தலைவராகவும்.

இன்று Make in India, Digital India என்று கூவும் திட்டமெல்லாம், ஆங்கிலேயர்கள் வகுத்துக் கொடுத்த திட்டங்கள், இதனை தெரிந்தே செய்யும் தலைவர்கள் சகுனிகள். 2020-இல் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்றுச் சொன்னால் தனக்கான சொந்தத் திறன் இருக்க வேண்டும், அதில் என்ன இருக்கிறது??? போர் தளவாடங்கள் கடனுக்கு வாங்கி வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள், உலக வர்த்தகம் என்றுச் சொல்லி, உள்ளூர் மக்கள் பணத்தினை எல்லாம் வாங்கி, புதிய டெக்னாலஜியில் பெரிய கம்பெனி தொடங்குகிறோம் என்றுச் சொல்லி மற்றொரு பெயரில் கடன் கொடுத்து, வெளிநாட்டில் பொருள் வாங்க என்று கொடுத்துவிடுகிறார்கள், பின் அந்தக் கம்பெனி திவால் என்று கடனை தள்ளுபடி செய்துவிடுகிறார்கள். பணத்தின் மதிப்பு எல்லாம் வெளிநாட்டுக்கு போயிடுச்சி, இங்கே வங்கியில் கணக்கு மட்டுமே இருக்கிறது... இது தெரியாத அப்பாவி பொதுமக்கள் தன் பணம் வங்கியில் ரொம்ப பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா, விசா கார்டு மாஸ்டர்கார்டு என்று ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வெளிநாட்டுக்கு பணம் வரி கட்டுவதுபோல கட்டிக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதிலிருந்தும் வரி ஆங்கிலேயர்களுக்கு செல்வதற்காகவே, அனைவருக்கும் வங்கிக்கணக்கு.

ஒர் நாடு வட்டியும் வரியும் அடுத்தவர்க்கு கட்டிக் கொண்டிருந்தால் எப்படி வல்லரசு ஆகும்.. ஆனால் அந்த நாட்டின் அடிமையே என்று சொல்லிவிட்டால், அதற்குத்தான் Make in India, Clean India. முதலாளிகள் வெளிநாட்டுக்காரர்கள், செய்து கொடுக்கும் தொழிலாளிகள் இந்தியர்கள். முதலாளி அவன் என்றால் நாடு அவனுடையதுதானே... முதலாளி வல்லரசு என்றால் அவன் நாடாகிய இந்தியா வல்லரசு தானே.. எப்படி யோசித்து மக்கள் மனதில் நரித்தனமாக உண்மையை உள்ளபடி சொல்லாமல் பொய் சொல்லி, வெளிநாட்டு முதலாளிகளை உருவாக்குகிறார்கள் பாருங்கள்.. Clean India என்றப் பெயரில் அன்றே அடிமை வேலை செய்தவரை இன்று துப்புரவு தொழிலாளி ஆக்கியிருக்கிறார்கள், ஆனால் உண்மையில் துப்புரவு தொழிலாளி ஆக்கியிருந்தால் கூட பரவாயில்லை, இந்திய நிலப்பரப்பு சுத்தமாகிக்யிருக்கும். ஆனால் India என்றப் பெயரை துப்புரவு செய்யும் தொழிலாளி அல்லவா இன்றைய அரசியல் தலைவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது முதலாளி அவன் என்றால் அவன் நாடு என்றப் பெயர் சரியாக அடையாளம் தெரிய வேண்டாமா? அதற்கு அவன் கொடுக்கும் அடையாளம் United. விரைவில் இந்தியா பெயர்க்கு முன் United என்ற வாசகத்தினைச் சேர்க்கப் போகிறோம், வல்லரசோடு சேர்க்கப்போகிறோம் என்பதே அன்றிலிருந்தே செயல்படுத்தப்பட்டிருக்கும் 2020 vision.

Digital India மட்டும் குறைந்தத் திட்டமா என்ன, எவ்வளவு பெரிய நவீன அட்வான்ஸ் டெக்னாலஜி திட்டம், மக்களை எவ்வளவு கவர்ந்த திட்டம். ஆனால் பாருங்க, எல்லாத்துக்குமே வெளிநாட்டுக்காரன் முதலாளி. பின்னே அவர்கள் நாட்டில் அவர்கள் முதலாளியாய் ஆக்காமல், உங்களையா ஆக்க முடியும் என்று இந்த சகுனிகள் கேட்டால் சொல்லாமல் சொல்வார்கள்.

ஒர் நாட்டின் முதுகெழும்பாய் இருப்பது விவசாயிகள், அவர்களை கைக்குள் கொண்டுவர என்னச் செய்ய வேண்டுமோ அதனைக் கதக்கச்சிதமாய் செய்து முடித்தேவிட்டார்கள்.. ஒன்று நீர் ஆதாரத்தினை பிரச்சனையாக்கியது, இரண்டாவது கடன் கொடுத்து சாகடித்தது.

அடுத்தக்கட்டமாக வெள்ளையனுக்கு இடஞ்சலாக இருப்பது வணிகர்கள். இவர்கள் தானே உழைக்கும் மக்களிடமிருந்து பணத்தினை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம் வேலையாளாக மாற்றிவிட்டால், பணம் நம் கைக்கு நேரடியாக வந்துவிடும், அடுத்து இவர்களை விவசாயிகளைப்போல் கொஞ்சம் கொஞ்சமாக கடன் கொடுத்து முழுமையாக அடிமையாக்கிவிடலாம் என்பதே, டிஜிட்டல் இந்தியா என்றத் திட்டத்தின் மூலம் அனைத்து பண வணிகமும் வங்கி வழியாகவே செயல்படுவது ஆகும். அதுமட்டுமில்லாமல், வங்கிகளின் பங்குகளை வெளிநாட்டுக்காரர்களே வாங்கி வைத்திருக்கிறார்கள். வங்கியின் இலாபத்தில் எல்லாம் வெள்ளையர்களுக்கு பங்குப்போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.. அத்தோடு நின்றால் பரவாயில்லை, மொதுமக்களின் பணத்தினை எல்லாம் பங்கு வர்த்தகத்தில் போடச்சொல்லி, ஒவ்வொரு ஆண்டும் 1.5 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள், இந்த வங்கி அடிமைகள். ஆனால் ஒர் போதும் வெளிநாட்டு முதலீடோ, அல்லது வெளிநாட்டு கம்பெனியோ நஷ்டமாக இந்த அரசு அல்லது வங்கள் நினைத்ததே கிடையாது, ஏனெனில் முதலாளிகள் அவர்கள் அல்லவா? ஆகையால் கிடைத்த அடிமை நம்மைத்தான் ஏமாற்றுகிறார்கள்.

தற்போதைய பிரச்சனையான பணம் கையிருப்பு இல்லை என்பதனை சரிகட்ட, இப்போது எல்லா பெரு வணிகர்களுக்கும் கிடைக்கும் POS என்ற பாயிண்ட் ஆப் சேல்ஸ் என்ற ஸ்வாப் மெசின் மூலம், கடைக்கு வரும் கஷ்டமரிடம் இருக்கு டெபிட் /ATM கார்டு வழியாக பணத்தினை வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்து வணிகம் செய்து கொள்ளலாம்.. அதாவது அவர்களுக்கு ஆரம்பக்கட்டத்தில் ஒர் வேலையாக தற்பொழுது மாற்றியிருக்கிறார்கள். இதனை கண் முன்னே காட்டி வணிகர்களின் பிரச்சனை தீர்த்தது போல கண்ணில் காட்டினாலும், பின்னால் பெரிய ஆப்பினை சகுனிகள் வைத்திருக்கிறார்கள் என்பதனை சிந்திக்க மறவாதீர்கள்.

வணிகர்களுக்கு தீர்வாக ஸ்வாப் மிசின் கொடுத்த நேரத்தில் ஆன்லைனில் 20% - 50% ஆபர் என்று பொருள்களுக்கு தள்ளுபடி செய்வார்கள். பொருளுக்கு முதலாளியே வெள்ளையர்கள் தான், அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் விலையைக் காட்டிலும் குறைவாக ஆன்லைனில் விற்பார்கள். இதனை பல வருடங்களாகவே பெரிய தொகைக்கு வாங்கினால் டிஸ்கவுண்ட், கூடுதல் இலவசப் பொருள் என்று சிறுவணிகர்களுக்கும் பெரிய வணிகர்களுக்கும் விலை வித்தியாசத்தினை பொருள் தயாரிக்கும் கம்பெனி முதலாளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைய தீர்வு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் நஞ்சு.. ஆகையால் விழித்திருங்கள்.

இப்போ எல்லாத்துக்கும் முதலாளி வெள்ளையர்கள் ஆகியாகிவிட்டது. அவன் வீட்டுக்கே சென்று டிஜிட்டல் வழியாக விற்பனை செய்யும் பொழுது வணிகர்கள் நீங்கள் எதற்கு?? டெலிவரி செய்யும் கூலியாட்கள் மட்டும் இருந்தால் போதாதா? ஆக, ஒர் சில வருடங்கள் பொருளின் விலைகளை ஆன்லைனில் வெட்டி விற்று வணிகர்கள் எல்லோரையும் முடித்துவிடுவார்கள்.

சட்டத்தின் மூலம் தடை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கவே நினைக்காதீர்கள், அவர்களது கைக்கூலிகளே இன்றைய அரசியல் தலைவர்கள். எவர்கள் எது செய்தாலும் நரித்தனமான சகுனி வேலையே. எல்லாம் வெள்ளையர்களுக்கு சாதகமாக முடியுமான, பொதுமக்களை ஏமாற்றுபவையாகவே இருக்கும்.

நீங்களே கொஞ்சம் யோசியுங்கள்.. கறுப்புப்பணம் எல்லாத்தையும் வெளிக்கொண்டு வருவேன் என்றுச் சொல்லி ரூ.500 & ரூ.1000 தடை செய்ததன் மூலம், கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து சேகரித்து வைத்த பொதுமக்கள் பணத்தினை மட்டும் தான் வீட்டிலிருந்து கொண்டுவந்து வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். அப்பாவி பொதுமக்கள் தான் வங்கியின் முன்னே வரிசையில் காலையிலிருந்து இரவு வரை நின்று கொண்டிருக்கிறார்கள். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் என்று அவர்கள் நினைக்கும் எவராது வந்து நிற்கிறார்களா?? அல்லது அரசு உளவுத்துறை மூலம், கறுப்புப்பண முதலைகளை மட்டும் சரியாக பொறிவைத்து பிடிக்க முடியாதா என்ன?? இதனைக்கூட சிந்திக்கத் தெரியாத பொதுமக்கள், அரசு சிறந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று அவர்களை ஏமாற்றுவதற்காகவே கூலி கொடுத்து வைத்திருக்கிற மீடியா சொல்வதனை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்லைனில் கருத்துகள் பார்த்தால், அரசு ஏதோ சிறந்த நடவடிக்கை எடுத்திருப்பது போல 85% மக்கள் சொல்வதாக மீடியா சொல்கிறது. ஆனால் உள்ளூர் நிலவரத்தினைப் பார்த்தால் மக்கள் எல்லாம் திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மீடியா சொல்வதனைப் பார்த்துவிட்டு, கூட்டத்தோடு கூட்டமா போனால் நல்லது என்று பங்கு மார்க்கெட்டில் சொல்வார்கள், அதைப்போல் மக்கள் கூட்டத்தில் ஐக்கியமாகிக் கொள்வோம் என்று பலர்.. ஆமா நல்ல திட்டம் போல எல்லாரும் சொல்றாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. நடந்த உண்மை தெரியாமல்.

நடந்த உண்மை என்னவெனில், வங்கிகள் மக்கள் போட்ட பணத்தினை எல்லாம் பெரிய கம்பெனிகளுக்கு 500 கோடி, ஆயிரம் கோடி என்று கடன் கொடுத்து வரவில்லை. கடன் வாங்கிய பெரிய கம்பெனிகள் எல்லாம் வெளிநாட்டவர்களோடு பங்குதாரர்கள். அவர்களுக்கான பங்கினைச் சரியாக கம்பெனிக்கான வசதிகளை நிறுவுதல் என்றுச் சொல்லி சரியாக பணத்தினை வெளிநாட்டுக்கு கொடுத்தாச்சி... மிச்சம் இருக்கிறது மதிப்பில்லாத பொருள்.. உங்களுக்கே தெரியும்.. ரூ.45000 என்று போன் வாங்கினால் கூட, 2 மாதம் கழித்தால் திரும்ப விற்க போனால் ரூ.20000 என்று ஆகிவிடும். யாரும் திரும்ப வாங்கிக்கிட்டு கொடுத்த காசினை தரப்போறதே கிடையாது.. அது தொழில் முறை சட்டம். அதுவே அந்தப் பொருள் திரும்ப உபயோகத்திற்கு ஆகது என்றால் ஐந்து பைசாக்குக்கூட திரும்ப வாங்கமாட்டார்கள், வேண்டாம் என்றால் தூறப்போடு, இங்கு வராதே என்பதுதான் பொதுவான வழக்கு. இது வங்கியில் வெளிநாட்டில் படித்துவிட்டு வேலை செய்யும் புத்திசாலிக்குத் தெரியாதா என்ன??? எல்லாம் தெரியும், தெரிந்தே தான் ரூ.500 கோடி ... ரூ.1000 கோடி என்று பிறர்க்கு உபயோகமே இல்லாதப் பொருளை வாங்குவதற்கு கடன் கொடுக்கிறது, பின் அவர்கள் இந்தத் தொழில் செய்ய முடியவில்லை என்றுச் சொல்லி கம்பெனியை இழுத்து முடிவிட்டால்.. பிறர்க்கு உபயோகமில்லா பொருளை சொற்பத்திற்கு ஏலமிட்டுவிட்டு, கடனை தள்ளுபடி செய்துவிடுகின்றனர். அப்போ, இங்கே இலாபம் அடைந்தவர்கள் என்பது கமிஷன் வாங்கியவர்களும், பொருளை கொடுத்த வெள்ளைக்காரனும், இருவர்க்குமாய் கம்பெனி தொடங்கிய முதலாளி ஆகிய மூவர். ஆண்டியாய்ப் போனது, வங்கியை நம்பி பணத்தினைப் போட்ட பொதுமக்கள்.

இப்படி வங்கியில் வராக்கடன் மட்டும் 5 இலட்சம் கோடி. அரசு நிறைய தொழில்களை மக்களை ஏமாற்றும் போலித்திட்டங்கள் என்று தடை செய்யும், அப்படியான பெரிய போலித்திட்டத்தினை வங்கி + அரசு + முதலாளி(வெள்ளைக்காரன்) ஆகிய மூவரும் சேர்ந்து பினாமி பெயரில் கம்பெனி தொடங்கி பொதுமக்களின் பணத்தினை கொள்ளையடிக்கிறார்கள். பங்குச் சந்தைகளின் வழியாகவும் பொதுமக்களின் பணத்தினை கொள்ளையடித்து வெளிநாட்டுக்கு அனுப்புவதும் இந்த வங்கிகளே அதற்கு துணையாக இருப்பது சகுனி அரசு என்பதனை முன்பும் சொல்லிவிட்டேன்.

கடன் கொடுத்து திவால் ஆன வங்கிகளை சரிப்படுத்தவே பொதுமக்களை அக்கவுண்ட் ஒபன் செய்யச் சொல்லி இருக்கிறப் பணத்தினைப் போடுங்கோ... 500ரூ. 1000ரூ என்று டெபாசிட் செய்ய வைத்தது. அதுமட்டுமா, அவர்கள்தான் புத்திசாலிகள் ஆச்சே.. இந்த பொதுமக்கள் தான் தினம் தினம் உழைக்கிறார்களே, இவர்களுக்குத்தான் தினம் புதுப்பணம் வருதே போட்டப் பணத்தினை எடுக்கவாப்போறாங்க .. என்னைக்கோ நடக்க இருக்கிற ஒர் நிகழ்வினை(கல்யாணம் & பிற) ஆடம்பரமாகச் செய்யத்தானே சேர்த்து வைக்கிறான்.. அதுக்குள்ள என்ன செய்யணுமோ செய்துக்கலாம் என்பதுதான் அந்த புத்திசாலிகள் திட்டம். இதே திட்டத்தில் தான் தங்கத்தினை கேட்டார்கள், நீங்கள் கொடுத்திருக்கிறீர்களோ இல்லையோ, கோயில்களில் இருந்த தங்கத்தினை எல்லாம் சும்மாதானே இருக்கு எங்ககிட்ட கொடுங்க என்று வாங்கி வைத்துவிட்டார்கள். அவங்க கைக்குப் போனப்பின் அவர்களது, அவங்க என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள், ஏமாற்றவும் செய்வார்கள்.

வங்கியும் சரி, அரசும் சரி, மீடியாவும் சரி வெளிநாட்டு கைக்கூலிகள் என்பதனை ஒர் போதும் மறவாதீர்கள்.

இப்படியான நரித்தனமான திட்டங்களை பொதுமக்கள் வேண்டும் என்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் வணிகர்கள் நாளை நடக்க இருக்கிறதே இன்றே சிந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளைக்காரன் உங்களை இல்லாமல் செய்வது என்பதனை முறியடிக்க எவராலும் முடியாது.

ஆன்லைன் மூலம் விலை குறைவாக கிடைக்கிறது என்பதால் பொதுமக்கள் வணிகர்களாகிய உங்களை எதிர்க்கவே செய்வார்கள், வெள்ளையார்களை வரவேற்கவே செய்வார்கள். இதுதான் உண்மை, ஏனெனில் அவர்களுக்கு உண்மையாக சகுனி செய்யும் நரித்தனத்தினை அறியவும் சிந்திக்கவும் அறிவு கிடையாது.

கெளரவர்களை வெல்ல கண்ணன் வஞ்சகத்தின் மூலம் தான் பாண்டவர்களுக்கு உதவி செய்தான். இன்றும் நாம் சகுனிகளை வெல்ல, வஞ்சகமாகவே போராடி வெல்ல வேண்டும்.

பொதுமக்கள் வங்கிகளைப் பயன்படுத்த எப்படியும் ஒர் வருடம் ஆகும். ஆனால் அதற்குள், நல்ல நிலையில் வங்கிக் கணக்கூடன் இருக்கும் வணிகர்களாகிய நீங்கள் வங்கிக்கணக்கில் சேமிப்பாக இருக்கும் தொகை எல்லாம் எடுத்து நிலமாக மாற்றுங்கள். அன்றாட சூழற்சிக்கு மேல் பணத்தினையும் கையில் வைக்கவே வைக்காதீர்கள். ஏனெனில் இன்று வந்திருக்கும் ரூ.2000 என்பது ரூ.20-க்கோ...40க்கோ பேப்பரில் அச்சடிக்கப்பட்ட ஒன்று. இது முடிந்தது என்றால் நாளைக்கு இன்னும் கொஞ்சம் அச்சடிப்பார்கள்... ஆனால் நிலம் என்பது ஒர் அளவு.. அதனை அச்சடிச்சி அச்சடிச்சி கொடுக்க முடியாது. நிலம் வைத்திருப்பவனே உண்மையான முதலாளி, ஆள்பவன், நிலமே உயிர் படைப்பது, உயிர்களை காப்பது. ஆகையால், வங்கியில் பணத்தினை எடுத்துவிட்டு, ஏதோ இன்றைய சூழலில் வர்த்தகத்தின் மூலம் எவ்வளவு பணத்தினை ஆட்டயைப்போட்டு நிலமாக்க முடியுமோ அதற்காக இன்றைய நிலவரத்திற்கு ஏற்ப வங்கிக் கணக்கினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. ஆனால் ஒர் பொழுதும் குறைந்தப்பற்ற தொகைக்கும் மேல் பணம் வைக்காதீர்கள். வங்கியில் பணம் இருக்கக்கூடாது. வங்கிகள் திவால் ஆக வேண்டும். அதுவே நம்மை காக்கும் திட்டம். அதுமட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு வங்கிகள் செய்து கொள்ளைகளை எல்லாம் வெளியில் சொல்வதோடு, வங்கிக்கணக்கினை மூட வழிவகை செய்யுங்கள்.

தற்போதைய ரூபாய் முறையினை ஒழித்துவிட்டு, நிலத்தினை மையமாக வைத்து புதிய ரூபாய் மதிப்பினை உருவாக்கிக் கொள்ளலாம். ஆகையால் தான் சொல்கிறேன், நிலத்தினை கையகப்படுத்துங்கள். அதுவே உலக ஜீவன்களின் ஆதாரம், பணம் அல்ல.

எந்தப் பணத்திற்காக வேலை செய்து புதிய புதிய கண்டுபிடிப்புகள் என்று வந்தமைக்குள் நாம் அடிமைப்பட்டமோ, அவை அனைத்தினையும் நமக்கும் கண்டுபிடித்து தனியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இன்றும் சீனாவில் பேஸ்புக் & கூகுளுக்கு தடை நீடிக்கிறது. அப்படியிருக்கையில் நமக்கான டெக்னாலஜி வசதிகளை நாம் தனியாக உருவாக்கிட வேண்டும்.

மின்சாரம் & நீர் ஆதாரம் அனைத்தினையும் இப்பொழுதே அரசினை நம்பாமல், அவர்களை கணக்கிலே கொள்ளாமல் தனியாக நிறுவுங்கள்.. அதுவும் முதலில் மின்சாரம் + குடிநீர் ஆதாரங்களை உடனே இப்போதைய பணத்தினை வைத்து பொருள்களை வாங்கி தாயார் செய்யுங்கள். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றுச் சொன்னால், எவனோ ஒருவன் தனக்கு உபயோகமில்லாப் பொருளை, நம்மை மேலும் கடனாளி ஆக்க, இங்கக் கொண்டு வந்து வைத்து நிறுவிக்கொண்டிருக்கும் அவசியமற்ற, ஆபத்தினை விளைவிக்கக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தினை எதிர்த்தால் மின்சாரம் தடையாகிவிடும்... கூடங்குளம் இருந்தால் தான் மின்சாரம் என்பார்கள்.... இன்றளவிலும் கூடங்குளத்திலிருந்து சரியாக மின்சாரம் தயாரிக்க ஆரம்பிக்கவில்லை ஆனால் இப்போ பிரச்சனை இல்லை. சாராயக்கடை மூடுங்கள் என்றால், கள்ளச்சாரயம் வந்திரும்.. அதனை தடுக்கத் தெரியாது.. கேட்காவிட்டால் கள்ளச்சாராயம் பற்றிய பேச்சு மீடியாவில் இருக்காது. ஆக, நம்மை முடக்க என்னென்ன செய்வார்களோ அத்தனையும் செய்வார்கள், அத்தனைக்கும் கொடி பிடிக்காமலே சுயமாக குடும்பம் குடும்பமாய் ஒன்றிணைந்து தயார் ஆக வேண்டும்.

குடிநீர் ஆதாரத்தினை தெளிவாக வலுப்படுத்துங்கள். உணவுப் பொருள் ஆதாரத்தினை வலுப்படுத்துங்கள்... இப்படி அங்கும் இங்குமாய் இருக்கும் அனைத்து வணிகர்களும் ஒன்றிணைந்து அரசினைப் புறக்கணித்து பழைய பிரிவினையாக மக்கள் அளவில் மாறிப்போய், பின் நமக்கான பாதுகாப்பு அம்சத்தினை உலகளவில் ஒர்குடைக்குள் நிறுவுவோம்.

இத்தனையும் எனக்கு அருளிய அப்பன் ஈசன் பொன்னம்பல நாதர்க்கு நன்றி.

இவண், நாடே ஆளாதவன் நாடன் என்றுச் சொல்லிக்க விருப்பமே இல்லாத செல்வ ஆதித்தன்.கு (படுக்கப்பத்து)
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”