சந்தோசங்களின் சரணாலயம் - எனது பள்ளி
எனது பள்ளி 1 முதல் 5 வரை அரசினர் உயர்பள்ளி ,காளிங்கராயன் பாளையம்.இப்பொழுது அந்த வழியாக செல்லும் போது மனதில் ஒரு இனிமையான ஞாபகம் வந்து செல்லும்.
1 வாது படிக்கும் போது கண்ணாடி ஆசிரியை பாடங்களை சொல்லி கொடுப்பார் .அன்பானவர் ,அவர் திட்டியதாக ஞாபகமே இல்லை.
2 வது படிக்கும் போது பழனி ஆசிரியர்..அவர் கண்டிப்பானவர் ..
3 வது படிக்கும் போது இமானுவேல் ஆசிரியர்..இவர் மிகவும் இனிமையானவர். ..
4 வது படிக்கும் போது நாகராஜ் ஆசிரியர் ..இவரே 5வது படிக்கும் பொதும் ஆசிரியர் .
படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டும் சொல்லிக் கொடுத்தார்
அதன் பிறகு அரசினர் மேல்நிலைப் பள்ளி ,சித்தோடு .வாழ்வின் மற்றொரு பரிணாமம் .
6 வது முதல் 10 வது படிக்கும் வரை ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர் .
இங்குதான் கிரிக்கெட் விளையாட்டை முறையாக கற்றது .
பேச்சுப்போட்டி-லும் பங்கு பெற்றது இங்குதான்.6 வதில் ஆரமித்து 10வது வரை அனைத்து பேச்சு போட்டி-லும் பங்கு பேற்று இருக்கிறேன்
இங்கு நானும் எனது நண்பர்களும் நட்ட செடி நட்பின் அடையாளமாக இன்னும் இங்கு இருக்கிறது மரமாக .
இங்கு பத்தாவது படிக்கும் போது டியூஷன்காக நாகமாணிக்கம் ஆசிரியரிடம் சென்றோம் ,எங்கள் பள்ளி ஒருசாரர் மட்டுமே படிக்கும் பள்ளி.அதாவது ஆண்கள் மேல்நிலை பள்ளி ,டியூஷனில் மட்டுமே இருசாரர்.அதனால் டியூஷன் செல்வதில் மிகவும் ஆர்வம்.
ஏன் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை .
எப்படியோ அடிச்சு புடிச்சு 10 வதில் வெற்றி பெற்றுவிட்டேன்