திருமணமாகி மூன்று வருடத்தில் கோகிலாவுக்கு ஒருநாள் கூட இப்படி ஆனதில்லையே?Athithan wrote: கோகிலா மயங்கி விழுந்தாள்...
கோகிலா ... கோகிலா..
அருகிலிருந்த கண்ணன், செய்வதறியாது மயங்கிய மனைவியினைத் தாங்கிக் கொண்டு... கோகிலா கோகிலா.. என கன்னங்களை ஆட்டினான்...
பணம் கிடைக்காத கவலையில் அவளுக்கு இப்படி ஆகிவிட்டதே! என கண்கலங்கிய கண்ணன்,
அவளை மெதுவாக படுக்க வைத்து விட்டு ஆட்டோவுக்கு போண் பண்ணினான்.
ஐந்தே நிமிடத்தில் ஆட்டோ வாசலில் வந்து நின்றது.
'ஏம்ப்பா! முத்துலட்சுமி ஆஸ்திரிக்கு போ! சீக்கிரமா போ!'
என ஆட்டோ டிரைவருக்கு கட்டளையிட்டான் கண்ணன்.
தெருவில் விரைந்தது ஆட்டோ.
அருகிலேயே ஒரு போலீஸ் ஜீப் தொடர்ந்து வர மீண்டும் குழம்பினான் கண்ணன்.