பேரம் பேசி வாங்கு - பங்கு வர்த்தகம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
பேரம் பேசி வாங்கு - பங்கு வர்த்தகம்
நமது முன்னோர்களின் நல்ல பழக்க வழக்கங்களில் ஒன்று பேரம் பேசி பொருளை வாங்குவது. ஆனால் இன்றைய நாகரீக உலகம் பேரம் பேசி வாங்குபவர்களை ஏதோ குற்றம் செய்பவர்களைப் போல பார்ப்பது என்பது ஒர் திட்டமிட்டச் சதிச் செயலாகவே நான் ஒர் கோணத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இன்றைய ஆன்லைன் தளங்களில் பேரம் பேசி வாங்க முடியாது. ஆகையால் பலர் ஆன்லைனில் வாங்கும் மனோநிலைக்கு இன்னும் வரவில்லை என்பதனை அறிந்து கொண்டே, இத்தகைய தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.
முதியவர்களிடம் பேரம் பேசாமல் வாங்குங்கள் என்றுச் சொல்லி பழக்கப்படுத்துபவர்கள், அந்த முதியவர்களுக்கான உதவியினை செய்வது என்பது நியாயம். ஆனால், பொருளின் தரத்திற்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்யும் பேரத்தினை ஏன் குற்றம் சுமத்துகிறார்கள்??
பேரம் பேசி வாங்கத் தெரியாதவர்களே பலவற்றில் ஏமாற்றத்தினை சந்திக்கிறார்கள்.
பங்கு வர்த்தகத்தில் தகுந்த விலையில் வாங்கி விற்க பெண்டிங் ஆர்டர் வசதி இருந்தும் அதற்கான கால அவகாசத்தினை பொறுத்துக் கொள்ள முடியாமல் நட்டமடையும் நபர்களையும் பார்க்கும் பொழுது இத்தகைய செயலையும் சொல்லிடலாம் என்பதற்காகவே இப்பதிவு.
மார்க்கெட் பொறுத்தவரை பொருளின் தரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப தகுந்த விலையில் மட்டும் வாங்கினால் மட்டுமே இலாபகரமாக இருக்கும்.
2017-ஆம் ஆண்டிற்கான வருவாயாக நான் எதிர்நோக்கி இருப்பது மை ட்ராபிக் ராயல்ட்டி பங்குகளின் விலை ஏற்றத்தினைத்தான். அதற்காக நான் அப்பங்குகளை வாங்க விலை எதிர்நோக்குவது 0.003
0.003 என்ற விலையில் 1 மில்லியன் பங்குகளை வாங்குவதற்கான பிட்டிங் செய்துள்ளேன்.
1 மில்லியன் பங்குகளை இரட்டிப்பு விலையில் விற்றால் இந்த ஆண்டிற்கான வருவாய் உறுதியாகிவிடும்.
தற்போதைய விலை 0.004 என்ற நிலையில் இருக்கும் பொழுது, 0.003 விலையில் 1 மில்லியன் பிட்டிங் செய்திருப்பது என்பது கிடைக்குமா? அவ்வாறு கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற யோசனை வரலாம்.
ஆனால், மார்க்கெட் 0.002 என்ற விலையிலிருந்துதான் ஏற்றம் பெற ஆரம்பித்து 0.008 வரை சென்று திரும்பியுள்ளது.
பலர் 0.002 - 0.0025 என்ற விலையில் பங்குகளை வாங்கி இலாபம் பார்த்திருக்கிறார்கள்.
அவர்கள் வாங்கிய விலையைக் காட்டிலும் கூடுதல் விலையாகத்தான் 0.003 என்ற நிலையில் நான் பிட் செய்துள்ளேன்.
0.003 என்ற விலைக்காக நான் 15 நாட்களாக காத்திருக்கிறேன்.... கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதைப்போல் விலைச் சரிவிற்கான சிந்தனையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும், செயல்பாட்டிலும் காட்டிக் கொள்ள வேண்டும்.
தகுந்த விலையில் வாங்கினால் மட்டுமே இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதால், முடிந்த வரை வாங்குவதில் இலக்கினை சரியாக திட்டுமிட்டுக் கொள்ள வேண்டும்.
வர்த்தகத்தில் எப்பொழுதுமே நட்டத்தினை அடைவது தினசரி வர்த்தகரும், அவசரத்தேவையில் மாட்டிக் கொள்பவர்களும்தான்.
5000 டாலர் இன்ஸ்வஸ்ட் செய்திருக்கிற ஒருவர் தனது பணத்தேவையில் மாட்டிக் கொண்டார் என்றுச் சொன்னால், இன்றைய விலையில் விற்றால் மார்க்கெட் 0.003-க்கு கீழ் சென்றுவிடும்.
சிலர் உடனே இலாபம் பார்க்கும் ஆசையில் இன்வஸ்ட் செய்திருந்தால், அவரும் 2 மாதம் ஆகியும் விலை மாற்றம் அடையாவிட்டால், கிடைக்கும் விலையில் விற்றுவிட்டு வெளியேறுவார்கள்.
மார்க்கெட் தனது விலைக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கீழ்பக்கம் நோக்கியே சரிவில் இருக்கும் வகையில் தினசரி வர்த்தகர்க்கு அப்பால் ஆகும் வர்த்தகங்களில் கொஞ்சம் வாங்கி, அப்படியே விற்பனைக்கு வைப்பது என விலையினை அதே நிலையில் வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே உறுதியாக சரியும்.
நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உறுதியாக செயல்படுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இலாபத்தினை சம்பாதிக்க முடியும் என்பதால், அதனை புரிந்து செயலில் இருக்கும் வர்த்தகர்களே இலாபம் சம்பாதிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மை ட்ராபிக் வேல்யூ அண்ட் பிட்காயின் ஆகிய இரண்டினை நம்பியதில், பிட்காயின் இலாபத்தினையும், மை ட்ராபிக் கைப் பணத்தினையும் கொடுத்தது.
இந்த ஆண்டில் மைட் ராபிக் வேல்யூ தற்போதைய சூழலில் வாங்குவதற்கு ஏதுவான விலையினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதைப்போல் மற்ற வாய்ப்பினையும் எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
2017-ஆம் ஆண்டில் மீதம் 8 மாதங்கள் இருப்பதால்... அதற்குள் ஒர் வாய்ப்பு கிடைத்தாலும் எனக்கான அடிப்படை வருவாயினை ஈட்டிவிடலாம்.
கொக்கைப்போல் காத்திருப்பவர்க்கே மார்க்கெட் அள்ளிக் கொடுக்கும் என்பதால்... காத்திருக்கிறேன், 0.003 என்ற விலைக்காக... நீங்களும் ஆயத்தமாகுங்கள், வாங்கி இலாபம் பார்க்கலாம்.