பாரிஸ்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு மீது போர் பிரகடனத்தை பிரான்ஸ் அறிவித்துள்ளது. தன்னுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துமாறு அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
சமீபத்தில் பாரிசில் பல்வேறு இடங்களில் புகுந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், அப்பாவி மக்கள் 129 பேர் இறந்தனர். இதற்குப் பழிக்குப்பழி வாங்குவோம் என பிரான்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நகரமான ரக்கா மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இந்நிலையில் இன்று பிரான்ஸ் பார்லிமென்டில் அந்நாட்டு அதிபர் ஹாலண்டே பேசியதாவது:
ஐ.எஸ்., மீது பிரான்ஸ் போர் பிரகடனம் செய்கிறது. இந்த தாக்குதலை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்த வேண்டும். எங்கள் தாக்குதலில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைய வேண்டும். ஐ.எஸ்.,யை பூண்டோடு ஒழிக்காமல் பிரான்ஸ் விடாது. அவர்கள் மீதான தாக்குதலில் ஈவு, இரக்கத்திற்கு இடமில்லை என்றார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஐ.எஸ்., முகாம்கள் மீது பிரான்ஸ் படைகள் அடுத்த தாக்குதலை தொடர்ந்துள்ளன.
====================================================
அறிவிக்கப்பட்டுள்ள போர் பிரகடனம்... விரைவில் பாரக்ஸ் மார்க்கெட்டிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.
ஆகையால் விரைவில் ஆயில் விலை மேலும் விலை குறையும்.... குறைவுக்குப் பின் உடனே மேல் எழும்ப ஆரம்பிக்கும்.
வாய்ப்பினை எதிர்நோக்கி முதலீட்டினை இப்பொழுதே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிரான்ஸ் போர் பிரகடனம்: அமெரிக்கா, ரஷ்யாவுக்கும் அழைப்பு
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked