என் உயிரே!
ஏன் வந்தாய்?
காணும் பொழுதெல்லாம்
கண்ணீரை பரிசளித்தவளே
ஏன் வந்தாய்?
வாழ்தல் ஏனென்று
வரவேற்று நிற்கையிலே
வலிகூறி மறுத்தவளே
ஏன் வந்தாய்?
நலம் காண வந்தாயோ
நான் படும்பாடு காண வந்தாயோ!
ஏன் வந்தாய்?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: ஏன் வந்தாய்?
அப்படி என்ன விரக்தி உங்களுக்கு????
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: ஏன் வந்தாய்?
காணும் பொழுதெல்லாம் கண்ணீரைப் பரிசளித்தவள், வந்தால் என்ன? போனல் தான் என்ன?காணும் பொழுதெல்லாம்
கண்ணீரை பரிசளித்தவளே
ஏன் வந்தாய்?
கண்டவுடனே மனதைக் கலகலப்பாக்கும் கன்னியைப் பற்றி மட்டுமே கவலைப் படுங்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஏன் வந்தாய்?
கால்ramkumark5 wrote:அப்படி என்ன விரக்தி உங்களுக்கு????
இங்கே
ஊன்றினால் சரியும்
அங்கே
ஊன்றினால் உடையும் - என்ற
இரண்டும் கெட்டான் நிலை
சற்று மறந்து
ஒர் நிமிடத்தில் முடித்திடலாம்
எட்டி எடுத்திடலா மென...
எட்ட எட்டாது போகவே...
ஒர் பக்கம் அழுத்தம்
கொடுக்க சரிந்தது கிரேடு..
வெடித்தது பாட்டில்கள் ...
சீறியது இரத்தம்!!!
விசாரித்தது நலம்!
இப்ப வலிக்கிறதுனால ஏன் வந்தாய் என்ற கேள்வி!
அம்முட்டுத்தான் வேற ஒன்னும் இல்ல... சின்னதே சின்னதான காயம்...
மன்னித்துவிடு!umajana1950 wrote:காணும் பொழுதெல்லாம் கண்ணீரைப் பரிசளித்தவள், வந்தால் என்ன? போனல் தான் என்ன?காணும் பொழுதெல்லாம்
கண்ணீரை பரிசளித்தவளே
ஏன் வந்தாய்?
கண்டவுடனே மனதைக் கலகலப்பாக்கும் கன்னியைப் பற்றி மட்டுமே கவலைப் படுங்கள்.
இரத்தத்தின் இரத்தமாக
உயிர் கொடுத்தவள்
அவள் அல்லவா!
அக்குருதியை
அவளென்று குறியாமல்
எப்படி தவிர்ப்பேன்!