அன்னையர் தின வாழ்த்து

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

அன்னையர் தின வாழ்த்து

Post by Aruntha » Sun May 13, 2012 9:57 am

Image
மாதங்கள் பத்தில்
அன்போடு எம்மை
கருவிலே சுமந்து
ஆயுளுக்கும் நம்மை
மனதிலே சுமந்து
கனவுகள் பல கண்டு
கற்பனைகளோடு நம்மை வளர்த்து
நானிலம் போற்றிட
நற் குழந்தைகளாக்கிட
நாள் தோறும் இங்கு
நமக்காய் வாழ்கின்ற
நம் இனிய அன்னைக்கு
வாழ்த்து கூறிட
இன்று மட்டும் தான்
ஒதுக்கப்பட்டு உள்ளதா?
அனுதினமும் அவளை
அன்பாக போற்றிடுவோம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: அன்னையர் தின வாழ்த்து

Post by umajana1950 » Sun May 13, 2012 3:13 pm

Image
ஆண்டவன் நேரில் வர முடியாதென்று
அன்னையைப் படைத்தான்.
ஆண்டவனை நம்பாதவர்கள் கூட
அன்னையை நம்புவார்கள்- ஏனெனில்
அன்னையின் பேரன்பை அனுதினமும்
அனைவரும் பார்ப்பதால்......

எனது இதயங்கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Post Reply

Return to “கவிதை ஓடை”