கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

Post by umajana1950 » Wed Mar 07, 2012 10:54 pm

கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்
எரியும் நெருப்பாகி
கரிய புகையாகி
கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்

சாம்பல் கூட இல்லை எனைச்
சொந்தம் கொண்டாடிட
கண நேரத்தில் நான்
காற்றாகிப் போனேன்
இது தானோ வாழ்க்கை;
இதுவே தான் வாழ்க்கை.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

Post by Aruntha » Wed Mar 07, 2012 11:11 pm

ஆஹா நீங்களும் வந்ததும் காணாம போநது பத்தியா சொல்றீங்க. என்ன தான் பண்ணுறது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 2:00 am

மனிதன் என்பவன் கடவுள் ஆகலாம்
கடவுள் ஆகிவிட்டால் துகளிலும் வாழலாம்.
அதுதானே வாழும் வாழ்க்கை!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கண நேரத்தில் நான் காற்றாகிப் போனேன்!

Post by muthulakshmi123 » Thu Mar 08, 2012 10:58 pm

வாழ்க்கை என்பது இது தான் எனவே, பாரதியார் கூறிய படி,வாழ முயலுவோம்...நண்பர்களே

சென்றதினி மீளாது மூடரே நீர்

சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்

இன்று புதியதாய் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

நின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்
Post Reply

Return to “கவிதை ஓடை”