thamilselvi wrote: Athithan wrote:
பொங்குங்க பொங்குங்க.. திருந்த பொங்குங்க! தப்பில்லை.
திருத்த பொங்குக தப்பில்லை என்றால் அதில் ஒரு அர்த்தமிருக்கிறது. திருந்த பொங்குங்க என்றால் பெண்கள் எல்லோரும் தவறு செய்பவர்கள் அல்லவே......இனம் இனத்தைச்சேரும் என்பார்கள் நடுநிலையில் நின்று பேச வேண்டிய நீங்கள் ஒரு ஆணாய் நின்று ஆண் இனத்தைச்சார்ந்துவிட்டீர்கள்.....
தவளை தன் வாயால் கெடும் என்பார்கள், அதைப்போல இருக்கிறது உங்கள் சொல்.
நான் பெண்களையும் ஒர் மனித இனமாகத்தான் பார்க்கிறேனேத் தவிர, உங்களைப் போல்...அதுக்குள்ளும் ஆண் பெண் என பிரித்துப் பார்க்கவில்லை.
பொங்குங்க பொங்குங்க.. திருந்த பொங்குங்க! தப்பில்லை
ஆம், இதற்கு அர்த்தம் உண்டு, ஆனால் நீங்கள் நினைப்பது போல் அல்ல.
மக்கள் எழுச்சிகள் எப்பொழுதும் வெற்றியில் தான் முடியும், ஆகையால் தவறுக்கு எதிராக பொங்குகிறீர்கள் என்பதனை வரவேற்று பொங்குங்க பொங்குங்க என உற்சாகம் ஊட்டினேன்... ஆனால், அக்கிளர்ச்சி தவறுக்கு உறுதுணையாக இருந்திடக்கூடாது என்பதற்காக திருந்த பொங்குங்க! என்றேன். அதாவது, வெகுண்டெழுவது, ந்ற்செயலுக்காக இருக்க வேண்டும் என்பதனை வரவேற்றேன்... அதில் தவறே இல்லை என தப்பில்லை எனக் கூறி உறுதிபடுத்தினேன்.
ஆண்கள் எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என நான் சொல்லவில்லை. அந்த ஒழுக்கம் கெட்ட ஆண்களின் செயல்களையும் ஒர் ஆண் உரிமை என கருதி, பெண்கள் தனக்கும் வேண்டும் என பெண்ணுரிமையில் கேட்பதைத்தான் ஏன்? என கேட்பது மட்டுமே என் வழக்கம். தவறான பெண்களைத் தவிர, பெண்கள் என பொதுவாக எடுத்துக் கொண்டால் மதிக்கும் பண்புடையவன்.
என்னடா... கொஞ்ச நாளா சண்டை இல்லாமல் இருக்காங்களே எனப் பார்த்தேன்?.. ஆரம்பிச்சிட்டீங்களா உங்க கோபத்தை ...
தமிழ்ச் செல்வியிடமிருந்து என்னை யாராவது காப்பாற்ற மாட்டீர்களா????