சம்சாரம் அது மின்சாரம்.

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

சம்சாரம் அது மின்சாரம்.

Post by umajana1950 » Sat Mar 17, 2012 5:27 am

சம்சாரம் அது மின்சாரம்னு
சந்தடி சாக்கில் சொன்னாங்க
அதனால் தானோ என்னவோ
அடிக்கடி போய் விடுகிறாள்
அவள் அம்மா வீட்டுக்கு
எப்போது வரும் எப்போது போகும்
என்று தெரியாத மின்சாரம் போல!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by ஆதித்தன் » Sat Mar 17, 2012 6:55 am

படித்ததும் சிரிப்பு சிரிப்பா வருது... ரொம்ப பாவம் அவங்க :ays: :ays: :ays:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by mnsmani » Sat Mar 17, 2012 9:51 am

உமாஜனாவுக்கு என்னாச்சு, எப்போதும் மின்சாரத்துடன் மல்லுகட்டுகிறார். கவலை படாதிங்க, ஜூலைலேருந்து படிபடியா மின்வெட்டு குறையும்னு பேசிக்கிறாங்க.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by umajana1950 » Sat Mar 17, 2012 10:16 am

உமாஜனாவுக்கு என்னாச்சு, எப்போதும் மின்சாரத்துடன் மல்லுகட்டுகிறார். கவலை படாதிங்க, ஜூலைலேருந்து படிபடியா மின்வெட்டு குறையும்னு பேசிக்கிறாங்க.
கொசுக்கடியும், இருட்டும் தமிழ்நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டுமா கரண்டு கட்?.....உங்களுக்கும் சேர்த்துத்தான் நான் அங்கலாய்ந்து கொண்டிருக்கிறேன்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by nadhi » Sat Mar 17, 2012 11:19 am

சம்சாரம் அது மின்சாரம்னு
இதை தப்பா ஏங்க பார்க்கீறீங்க நல்லதா நினைங்க பெண்கள் மீன்சாரம் போன்று மீன்சாரம் எப்படிஎல்லா வேலைகளையும் செய்கிறது.அதுப்போல் பெண்கள். வீட்டு வேலை பணம் சம்பாதிக்கும் வேலை குழந்தைகளை பார்க்கும் கணவனுக்கு அன்பான மனைவியா தோழியா கஷ்டங்களிலும் சந்தோசத்திலும் கூடவே இருப்பவள்.கணவன் மார்கள் எதைசெய்தாலும் பொறுத்துகொள்பவள். இந்த மாதிரி பல விஷியங்கள் சொல்ல முடியும். நீங்கள் 100 காரணங்கள் என்றால் நாங்க101 மேல் கூட சொல்முடியும்.
:non: :non: :non: :non: :non: :non: :non: :non:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by umajana1950 » Sat Mar 17, 2012 4:38 pm

கணவன் மார்கள் எதைசெய்தாலும் பொறுத்துகொள்பவள்.
நதி, நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்.
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by nadhi » Sat Mar 17, 2012 8:23 pm

உங்கள் வீட்டில் இப்படில்லை நினைக்கீறேன்
கணவன் மார்கள் எதைசெய்தாலும் பொறுத்துகொள்பவள்.
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by thamilselvi » Sat Mar 17, 2012 8:55 pm

கணவன்மார்கள் எதைசெ்யதாலும் பொறுத்துக்கொள்வதெல்லாம் இல்லை, இப்பொழுது பெண்கள் பொங்கி எழ ஆரம்பித்துவிட்டார்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by ஆதித்தன் » Sat Mar 17, 2012 10:26 pm

thamilselvi wrote:கணவன்மார்கள் எதைசெ்யதாலும் பொறுத்துக்கொள்வதெல்லாம் இல்லை, இப்பொழுது பெண்கள் பொங்கி எழ ஆரம்பித்துவிட்டார்கள்.
பொங்குங்க பொங்குங்க.. திருந்த பொங்குங்க! தப்பில்லை. :ro:
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

Re: சம்சாரம் அது மின்சாரம்.

Post by thamilselvi » Sun Mar 18, 2012 9:44 am

thamilselvi wrote:
கணவன்மார்கள் எதைசெ்யதாலும் பொறுத்துக்கொள்வதெல்லாம் இல்லை, இப்பொழுது பெண்கள் பொங்கி எழ ஆரம்பித்துவிட்டார்கள்.

Athithan wrote:
பொங்குங்க பொங்குங்க.. திருந்த பொங்குங்க! தப்பில்லை.

திருத்த பொங்குக தப்பில்லை என்றால் அதில் ஒரு அர்த்தமிருக்கிறது. திருந்த பொங்குங்க என்றால் பெண்கள் எல்லோரும் தவறு செய்பவர்கள் அல்லவே......இனம் இனத்தைச்சேரும் என்பார்கள் நடுநிலையில் நின்று பேச வேண்டிய நீங்கள் ஒரு ஆணாய் நின்று ஆண் இனத்தைச்சார்ந்துவிட்டீர்கள்.....
Post Reply

Return to “கவிதை ஓடை”