வயக்காடு நுனிதானே வாய்க்கு சுவைதானே

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

வயக்காடு நுனிதானே வாய்க்கு சுவைதானே

Post by ஆதித்தன் » Fri Jan 13, 2023 9:57 pm

விளையாட்டாய் ஏதுமில்லை
விதிக்கே சொல்லுமில்லை

வாய் பேசவேயில்லை
வளையலும் சத்தமில்லை

கண்களோ பார்க்கவேயில்லை
கால்கள் தயங்குது

கடிகாரம் ஓடுது
கட்டுகள் தளருது

சொல்ல ஏதுமில்லை
சொல்லுக்குள் அர்த்தமில்லை
வயக்காடு நுனிதானே
வாய்க்கு சுவைதானே

பச்சையும் மஞ்சளாச்சு
பசுவுக்கோ சுவையாச்சு

அடிய விட்டவுரம்
மடிக்கு தாலாட்டுது
மறுநாத்து கேட்குது
மாலைக்கு மயங்குது
Post Reply

Return to “கவிதை ஓடை”