[youtube]https://www.youtube.com/watch?v=9c7XG_kZVvo[/youtube]
பார்வைக்குள் நின்று
பாவைக்குள் ஒன்றின்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
கண்ணுக்குள்ள பார்க்கிறான்
கண்மணியே ஆடுது
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
இரண்டு இருக்குது
இல்ல ஒன்றிங்கிறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
இல்ல இல்லங்கிறான்
இருப்பதையும் காட்டுறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
வருவதில்ல சொல்லுறான்
வழிநடுவே காக்கிறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
பார்க்கல பார்த்தான்
பார்த்தா பார்க்கல
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
கவித எழுதுறான்
காகிதத்த கிழிக்கிறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
சொல்லு சொல்லுங்கிறான்
சொல்லிட மறக்கிறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
அத்தனையும் கொடுக்கிறான்
அர்த்தம் நினைக்கிலான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
மறுபூவை பார்க்கிலான்
மறுப்பையும் அறியிலான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
எதுவும் தெரியல
ஏமாற்றமும் புரியல
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
தனித்திருந்து பேசுறான்
தன்னையே இழக்கிறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
மாறுபட்டதை பார்க்கிறான்
மாய்ந்தே போகிறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
வாழுறான் வாழுறான்
வாழ்க்கைகாட்சி காட்டுறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
இருப்புநிலை அறியமாட்டான்
இல்லாததை மறக்கமாட்டான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
வாழுறான் வாழுறான்
வாழ்க்கைகாட்சி காட்டுறான்
பைத்தியம் - அய்யா
பைத்தியம்
சிரிக்கும் நேரம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
Re: சிரிக்கும் நேரம்
SUPER
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல்ல அழுகிறேன் அழுகிறேன் அழுகை வரல்ல
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல்ல அழுகிறேன் அழுகிறேன் அழுகை வரல்ல
-
- Cash on hand: Locked
Re: சிரிக்கும் நேரம்
கவிதை அருமை. ஆனால் சிரிப்புக் கவிதை போல் இல்லாமல் தத்துவக் கவிதை போல் அல்லவா உள்ளது.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: சிரிக்கும் நேரம்
satkunan wrote:SUPER
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரல்ல அழுகிறேன் அழுகிறேன் அழுகை வரல்ல
வராதத விடுங்க சார்
வர்றத செய்யுங்க சார்
============================
மற்றவங்க சிரிக்கும் பொழுதுதான் சார், புரியும்.... பைத்தியம்வெங்கட் wrote:கவிதை அருமை. ஆனால் சிரிப்புக் கவிதை போல் இல்லாமல் தத்துவக் கவிதை போல் அல்லவா உள்ளது.
=====================