Page 1 of 1

அழகு....!!!

Posted: Tue Mar 13, 2012 1:40 pm
by RJanaki
Image

நடையின் அழகை
நடந்து பார்த்தேன்!
பேச்சின் அழகை
பேசிப் பார்த்தேன்!
எழத்தின் அழகை
எழதிப் பார்த்தேன்!
அன்பின் அழகை
அனுபவித்துப் பார்த்தேன்!

.....இப்படி எல்லாம் பார்த்த
என்னால் உறக்கத்தின்
அழகை உணர்த்து பார்க்க
முடியவில்லை!
என்னால் மட்டுமல்ல
எல்லோராலும் தான்!

Re: அழகு....!!!

Posted: Tue Mar 13, 2012 3:27 pm
by rajathiraja
உணர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் உறங்கும் போது வீடியோ எடுத்து வச்சுக்கங்க. அந்த அழகையும் பார்க்கலாம்.

அது எப்படி அக்கா! பிழை இல்லாமல் எழுதி இருக்கீங்க?
இந்த கவிதையில் ஒரே ஒரு எழுத்து பிழை தான் இருந்தது.
ஜானகி அக்காவா இதுன்னு என்னால ஆச்சரியம் தாங்க முடியலை.

அப்போ உங்களால் பிழை இல்லாமல் அழகாக எழுத முடியும். ஆனால் அவசரத்தில் எதையாவது தட்டி விட்டுட்டு ஓடிடுறீங்க.. அப்படித்தானே!

அதனால இனி டைப் பண்ணி முடிச்சதும் ஒரு தடவை போய் பாருங்க. அடிக்கடி எழுதும் போது அது தானாகவே மாறிடும்.

என்ன பண்றது? அக்காவுக்கு தம்பி பாடம் கத்து கொடுக்க வேண்டி இருக்கு! :wal:

என்னோட அக்கா அழகாக எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தில் தான் இதை சொல்லி இருக்கேன். இதுக்கும் துப்பாக்கி எடுத்துட்டு வந்துடாதீங்க!
:grain:

Re: அழகு....!!!

Posted: Tue Mar 13, 2012 9:32 pm
by muthulakshmi123
ஜானகி அருமை உங்கள் கவிதை தொடருங்கள்

ராஜா எப்போதிருந்து கமெண்ட்ஸ் ராஜாவிலிருந்து ஆசிரியர் ராஜாவாக மாறினார்...கமெண்ட் எழுதி எழுதி சோர்ந்து விட்டாரா?? புதிய பத்வி மாற்றமா/ எது எப்படியோ வாழ்த்துக்கள் ராஜா..

Re: அழகு....!!!

Posted: Thu Mar 15, 2012 9:06 am
by RJanaki
அது எப்படி அக்கா! பிழை இல்லாமல் எழுதி இருக்கீங்க?
இந்த கவிதையில் ஒரே ஒரு எழுத்து பிழை தான் இருந்தது.
ஜானகி அக்காவா இதுன்னு என்னால ஆச்சரியம் தாங்க முடியலை.
ராஜா பாரட்டுக்கு நன்றி,இதில் என்ன ஆச்சிரியம் இருக்கு.
நானும் தமிழ் நாட்டில் தான் பிறந்தேன் படிப்பு எல்லாம்.

நான் வாழம் சூழ்நிலையில் தமிழ் மனம் விட்டு கூட பேசுவதற்கு யாரும் கிடையாது.அப்படி கிடைந்தாலும் அவர்கள் ஹிந்தி,ஆங்கிலம் தான் பேசுவர்கள்.படிப்பதற்கு புக்கும் கிடையாது, தற்தமயம் புனே வந்தால் தமிழ் நியுஸ் பேப்பர் கிடைக்கறது.

Re: அழகு....!!!

Posted: Thu Mar 15, 2012 3:04 pm
by muthulakshmi123
RJanaki wrote:
அது எப்படி அக்கா! பிழை இல்லாமல் எழுதி இருக்கீங்க?
இந்த கவிதையில் ஒரே ஒரு எழுத்து பிழை தான் இருந்தது.
ஜானகி அக்காவா இதுன்னு என்னால ஆச்சரியம் தாங்க முடியலை.
ராஜா பாரட்டுக்கு நன்றி,இதில் என்ன ஆச்சிரியம் இருக்கு.
நானும் தமிழ் நாட்டில் தான் பிறந்தேன் படிப்பு எல்லாம்.

நான் வாழம் சூழ்நிலையில் தமிழ் மனம் விட்டு கூட பேசுவதற்கு யாரும் கிடையாது.அப்படி கிடைந்தாலும் அவர்கள் ஹிந்தி,ஆங்கிலம் தான் பேசுவர்கள்.படிப்பதற்கு புக்கும் கிடையாது, தற்தமயம் புனே வந்தால் தமிழ் நியுஸ் பேப்பர் கிடைக்கறது.


என்ன புக் விரும்பி படிப்பீர்கள் ஜானகி

Re: அழகு....!!!

Posted: Thu Mar 15, 2012 7:15 pm
by nadhi
janaki madam உங்கள் கவிதை அற்புதம். உறக்கம் எல்லாத்துக்கும் பிடிக்கும் அந்த உறக்கத்திக் அழகு கவிதையாக கொடுத்து நல்லாயிருக்கு உங்கள் கவிதை இன்னும் அதிகம் எதிர்பார்கிறேன்.raja sir மாதிரி நான் பிழை பார்பதில்லை.அதில் இருக்கும் அழகுத்தான் பார்ப்பேன்.
:azh: :azh: :azh: :azh: :azh: :azh: :azh: :azh: :azh:

Re: அழகு....!!!

Posted: Thu Mar 15, 2012 7:29 pm
by muthulakshmi123
nadhi wrote:janaki madam உங்கள் கவிதை அற்புதம். உறக்கம் எல்லாத்துக்கும் பிடிக்கும் அந்த உறக்கத்திக் அழகு கவிதையாக கொடுத்து நல்லாயிருக்கு உங்கள் கவிதை இன்னும் அதிகம் எதிர்பார்கிறேன்.raja sir மாதிரி நான் பிழை பார்பதில்லை.அதில் இருக்கும் அழகுத்தான் பார்ப்பேன்.
:azh: :azh: :azh: :azh: :azh: :azh: :azh: :azh: :azh:
அழகு அழகு பார்க்கிறதோ

Re: அழகு....!!!

Posted: Sat Mar 17, 2012 6:06 pm
by RJanaki
நதியா முத்துலட்சுமி உங்கள் பாராட்டுக்கு நன்றி,

நதியா உங்கள் எதிர்பார்ப்பை செய்ய முயற்சி செய்கிறேன் நன்றி. :thanks: :thanks: :thanks: