தமிழுக்கு தாயிக்கு நன்றி.

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

தமிழுக்கு தாயிக்கு நன்றி.

Post by மன்சூர்அலி » Mon Dec 15, 2014 12:00 pm

தமிழ் மொழி பேசத்தான்
தாகித்து போனது உள்ளம்
தமிழ் மொழியை கேட்கத்தான்
தவித்து போனது இதயம்.

கடல் தாண்டி இருந்ததால்
காணவில்லை என் மொழி
கவலை பட்டேன் நானும்
காண வேண்டும் தமிழ் மொழியை..

பேச வேண்டும் என் மொழியை
எழுத வேண்டும் என் மொழியில்
என எனக்குள் ஓர் போர் கொடி
கண்டேன் படுகை.காம்யை.

என் தமிழ் தாய் இங்கேயும் உலா
வருகிறாள். உலக தமிழர்களை
மகிழ்விக்க என நினைக்கும் போது
நன்றி சொல்கிறது தமிழ் உள்ளங்கள்...
Post Reply

Return to “கவிதை ஓடை”