Page 1 of 1

" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..!

Posted: Wed Nov 26, 2014 9:59 pm
by JAYAKUMARI
நிஜம் நிஜமாகிறது
**************

அவள்
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.

உறங்குமுன்...
" கர்த்தரே காப்பாற்றும் " என்றாள்.

அவள்
காதல் திருமணம் செய்தாள்.
மதமாற்றம் செய்தாள்.
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.

உறங்குமுன்...

" முருகா காப்பாற்றும் " என்றாள்.



கலைத்தபோது
சலித்துக்கொண்டாள்.

" ஹூம்..
எதைக்கும்பிட்டாலும்
வேலை செய்தால்தான்
சாப்பிட முடிகிறது "

***************