" தெய்வம் "

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
JAYAKUMARI
Posts: 6
Joined: Wed Sep 03, 2014 3:58 pm
Cash on hand: Locked

" தெய்வம் "

Post by JAYAKUMARI » Mon Nov 24, 2014 11:08 pm

தெய்வம்
----------

அவள்
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.

உறங்குமுன்...
" கர்த்தரே காப்பாற்றும் " என்றாள்.

அவள்
காதல் திருமணம் செய்தாள்.
மதமாற்றம் செய்தாள்.
வேலைக்குச் சென்றாள்.
உழைத்தாள்.
சாப்பிட்டாள்.

உறங்குமுன்...

" முருகா காப்பாற்றும் " என்றாள்.

கண்கண்ட தெய்வம் என்ற
அவள் கணவனும்
ஒருநாள்
சாலைவிபத்தில்
சட்டென்று செத்துப்போனான்.

இப்போது...

அவள்
வேலைக்குச் செல்கிறாள்.
உழைக்கிறாள்.
சாப்பிடுகிறாள்.

உறங்குமுன்...

காலையில் வேலைக்கு
சீக்கிரம் எழுந்திட
கடிகாரத்தில்
அலாரம் வைக்கிறாள்.


*********
[/color]
Post Reply

Return to “கவிதை ஓடை”