வாழ்த்தி விட்டேன் நான்!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

வாழ்த்தி விட்டேன் நான்!!

Post by மன்சூர்அலி » Mon Nov 24, 2014 11:09 am

:ros: வாழ்த்தி விட்டேன் நான்!! :ros:

ஏழு வருஷம் காதலிச்சு
எழுதினேன் கடிதம் உனக்கு
எதிர் பார்ப்புகளுடன்.. ஏக்கங்கள்
எண்ணங்களாய் எழுதியே காண்பித்தேன்..

மணவறை காணலாம்
மாங்கள்யம் வாங்கலாம்
மங்களமாய் வாழலாம்
மனதார சேரலாம்..

எழுதினாய் நீயும் எனக்கு..உன்
எண்ணத்தை எழுத்தின் மூலம்
எப்படியாவது மறந்து விடு
என்னை என்று..

மாமன் மகன் இருக்கிறான்
மணந்து கொள்கிறேன் என்று
மறக்க முடியவில்லை..
மன்னிக்கவும் முடியவில்லை..

மாறிவிட்டாய் நீ இன்று
மாற மாட்டேன் நான் என்றும்
மறக்க மாட்டேன் உன்னை நான்
மறந்து விடு என்னை நீ..

மனதார காதலித்தேன் உன்னை
மானத்தோடு வாழ்வேன் கண்ணே
மணந்து கொள் நீ. உன் மாமன் மகனை
மனசார வாழ்த்துகிறேன் உன்னை... நான்..
Post Reply

Return to “கவிதை ஓடை”