விவசாயின் கண்ணீர்!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

விவசாயின் கண்ணீர்!

Post by மன்சூர்அலி » Sun Nov 23, 2014 1:35 pm

விவசாயின் கண்ணீர்!

தண்ணீர் இல்லை எங்களுக்கு
தாகத்திற்கும் எங்கள் வயல்களுக்கு
கண்ணீர் சிந்துகிறோம்..நாங்கள்
தண்ணீருக்காக ஏங்கி தவிக்கிறோம்.

நீர் வழி சாலை அமைத்தால்
நிம்மதி அடைவோம் நாங்கள்
நீருக்காக ஏங்கும் எங்களுக்கு..துணை
நிற்போர் யாரும் இல்லை..

நதி இணை மையம் உண்டு..ஆகவே
நிம்மதி அடைவதுண்டு. நாங்கள்..
நம்பிக்கை அதிகம் உண்டு
கண்டிப்பாய் நதி நீர் சாலை அமைப்பார்கள் என்று..

விவசாயம் வளர்ச்சி பெற
விலை நிலம் உயிர் பெற
விண்ணப்பிக்கிறோம் நாங்கள் இன்று
வாழ்வு கொடுங்கள் எங்களுக்கு..

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நதி நீர் சாலை அமைத்திட
ஒன்று படுவோம்..நாம் இன்று
விவசாயம் உயிர் பெற..உயர் பெற...
Post Reply

Return to “கவிதை ஓடை”