Page 1 of 1

எல்லோருக்கும் பொதுவானவர். தவறு ஏது?

Posted: Sat Apr 23, 2016 9:16 pm
by kumarsvm
திரு செல்வ ஆதித்தன் தளத்திற்கு எல்லோருக்கும் பொதுவானவர்.தவறுகள் வருவது சகஐம்.மீணடும் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லலாம்.தட்டச்சு செய்யும்போது ர் போட வேண்டிய இடத்தில் ன் ஆகி இருந்ததை கவனிக்கவில்லை.அதற்கு திரு.டைட் யோகி அதை தொடர்ந்து திருவாளர் வெங்கட்ராமன் அவர்களும் சுதி கூட்டி தாளம் போடுகிறார்கள் . வெங்கட்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துக்கொண்டிருப்பவன்.போனது போகட்டும்.இருவருடைய அஞ்சல் மட்டும் தொடர்ந்து தளத்தில் தக்க வைக்க என்ன காரணம்.? என்னுடைய அஞ்சலையும் அனுமதித்து மூடியிருக்கலாம்.அல்லது தளத்திலிருந்து நீக்கியிருக்கலாம்.மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.நான் புதியவன்.தளம் மூடப்பட்டு இருந்ததால் இங்கே பதிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.நான் தவறாவன் என்று உங்கள் மனது நினைத்து இருந்தால் இக்கணம் என்னுடைய உறுப்பினர் சேர்க்கையிலிருந்து விலகி கொள்கிறேன்.நன்றிகள் பல.

Re: எல்லோருக்கும் பொதுவானவர். தவறு ஏது?

Posted: Sat Apr 23, 2016 10:17 pm
by வெங்கட்
தவறானவா் என்பவா் யாருமில்லை. அறியாமல் செய்பவா் என்றுதான் கொள்வேன்.

அதேபோல் நமது தவறு சுட்டிக்காட்டப்படும்போது மனம் வருந்தவேண்டியதுமில்லை.

நடந்ததை அலசுவதைவிடுத்து நடக்கப்போகின்றவற்றில் கவனம் வையுங்கள். அதுபோதும்.

என்ன சுதிகூட்டினேன் என்பது புாியவில்லை. புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

Re: எல்லோருக்கும் பொதுவானவர். தவறு ஏது?

Posted: Sun Apr 24, 2016 9:07 am
by kumarsvm
தவளும் குழந்தையிடம் மூத்த உறுப்பினா் மன்னிப்பு கேட்பதை அவை ஏற்றுகொள்ளுமா.படுகையில் பல அரங்கங்கள் .பார்க்காத இடத்தை பார்வையிடும் போது புதியவனான எனக்கு சந்தேகம், சந்தோசம் ஏற்படக்கூடாதா? கூட்டிய சுதி என்ன? கொஞ்ச நேரம் கழித்து தொடர்கிறேன்.