நீங்களும் ஆகலாம் அரசு அதிகாரி

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

நீங்களும் ஆகலாம் அரசு அதிகாரி

Post by பிரம்மதேவன் » Fri Nov 20, 2015 7:38 pm

உங்களது அரசு வேலை கனவை நினைவாக்க புதிய பகுதி
இன்றயை நிலையில் பெரும்பாலோனோர் தமக்கு அரசு வேலை வேண்டும் என்ற கனவில் உள்ளனர். ஆனால் TNPSC, TRB, TET, POLICE, RAILWAY போன்ற அனைத்து அரசு வேலைகளுக்கும் போட்டித் தேர்வு கட்டாயம் என்றாகிவிட்டது. போட்டி நிறைந்த உலகில் வெறும் கனவு மட்டுமே போதாது. சரியான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
TNPSC, TRB, TET, POLICE, RAILWAY போன்ற போட்டித் தேர்வுகளுக்கு நமது அடிப்படை கல்வியான 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்த பாடங்களையும், சிறிது நாட்டு நடப்பு, தெரிந்திருந்தால் போதும். ஆனால் நாம் படித்த பாடங்கள் அனைத்தும் நினைவிலும் இருப்பதில்லை. நாம் படித்த பழைய புத்தகங்களும் நம்மிடம் இருப்பதில்லை. தேவையான Materials எளதில் கிடைப்பதுமில்லை. அதை சேகரிக்க நமக்கு பொறுமையும் இல்லை, நேரமும் இல்லை.
TNPSC, TRB, TET, POLICE, RAILWAY போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான Material-களையும், பயிற்சியையும் இனிவரும் பதிவுகளின் மூலமாக தரவிருக்கிறேன்.
நமது படுகை சார்பில் தொகுத்தளிக்கப்படவுள்ள பகுதிகள் TNPSC, TRB, TET, POLICE, RAILWAY போன்ற தேர்வுகளுகு தயாராகிக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 100% வெற்றியே நமது இலக்காக இருக்க வேண்டும். இனிவரும் அனைத்து பதிவுகளையும் முழு சிந்தணையோடு படித்தால் வெற்றி உறுதி.
நமது படுகை சார்பில் தொகுத்தளிக்கப்படவுள்ள பகுதிகள் TNPSC, TRB, TET, POLICE, RAILWAY போன்ற தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 100% வெற்றியே நமது இலக்காக இருக்க வேண்டும். இனிவரும் அனைத்து பதிவுகளையும் முழு சிந்தணையோடு படித்தால் வெற்றி உறுதி.
தற்பொழுது TNPSC மூலமாக VAO காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவித்துள்ளார்கள். தேர்வு பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள link-ல் செல்லவும்
தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவரும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

TNPSC (VAO) COMPLETE STUDY MATERIAL

Post by பிரம்மதேவன் » Sun Nov 22, 2015 12:15 pm

TNPSC வெளியிட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 813. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசிநாள் : 14.12.2015. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 14.02.2016.


TNPSC அறிவித்திருக்கும் VAO தேர்விற்கு விண்ணப்பிக்கவும், நம்மை தயார் படுத்தவும் தேவையான நேரம் இருப்பதால் நமது பயிற்சியை VAO தேர்விற்கே தொடங்கலாம்.

Image
வாருங்கள் நாமும் 813-ல்
ஒருவராகலாம்.


இதுவரை VAO தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
எந்த ஒரு தேர்வுக்கு தயாராவதாக இருந்தாலும் அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்திருந்தால் தான் முறையான பயிற்சியை மேற்கொண்டு வெற்றி பெற முடியும். VAO தேர்விற்கு எப்படி தயாராக வேண்டும்? எந்த பாடப்பகுதிகளைப் படிக்க வேண்டும் அந்த பாடத்திட்டம் பற்றிய முழுமையான பயிற்சியையும் வழங்கும் விதத்தில் இத்தொடர் அமைந்திருக்கும்.

VAO தேர்விற்கான பாடத்திட்டம் :
VAO தேர்விற்கு அவர்கள் கொடுக்கும் 3.00 மணி நேரத்தில் 200 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். அந்த 200 வினாக்கள் பின்வரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பொதுத்தமிழ்/ஆங்கிலம் - 80 வினாக்கள்,
பொது அறிவு - 75 வினாக்கள்,
கிராம நிர்வாக நடைமுறைகள் - 25 வினாக்கள்,
திறனறித் தேர்வு - 20 வினாக்கள்.
மொத்த வினாக்கள் - 200

மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வெரு வினாவிற்கும் 1½ மதிப்பெண் வீதம் (200x1½) = 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தெரிவிற்கு தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண் : 90.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதாகும். புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் படி கணிதம் மற்றும் அறிவியலில் கேட்கப்படும் வினாக்கள் குறைக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலரின் பணிகளும் கடமைகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய பாடத்திற்கு 25 மதிப்பெண் கொடுப்பதாலும் தமிழை தெளிவாகப் படிக்கும் பட்சத்திலும் இத்தேர்வில் வெற்றியை நோக்கிச் செல்ல எளிதாக இருக்கும். இப்போட்டி நிறைந்ந உலகத்தில் தமிழில் 80 வினாக்கள் சரியாகும் பட்சத்தி்ல் VAO வேலை கிடைக்கும் வாய்ப்பினை நெருங்க முடியும். ஆகவே TNPSC(VAO) தேர்விற்கான பொதுத்தமிழ் தொகுப்பினை விரிவான விளக்கத்துடன் படுகை இனிவரும் பதிவுகளில் வழங்க உள்ளது இந்த MATERIAL-ஐ நன்கு பயன்படுத்தி அரசு வேலைக்குச் செல்ல வாழ்த்துக்கள். பொதுத் தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்.
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

TNPSC-VAO STUDY MATERIAL

Post by பிரம்மதேவன் » Fri Nov 27, 2015 7:06 pm

VAO தேர்வில் பொதுத்தமிழ் பாடத்திட்டமானது பின்வருமாறு அமைந்துள்ளது.

Image

Image

Image

Image
Last edited by பிரம்மதேவன் on Sun Nov 29, 2015 6:01 pm, edited 2 times in total.
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

VAO STUDY MATERIAL

Post by பிரம்மதேவன் » Sun Nov 29, 2015 1:17 pm

பொதுத்தமிழ் பகுதியில் அதிக மதிப்பெண் பெற முதலில் இலக்கணத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இலக்கணம் - ஒரு அறிமுகம்
இலக்கணம் ஒரு மொழியை பிழையின்றி எழுதவும் பேசவும் பயன்படுகிறது. இலக்கணத்தை 5 வகையாகப் பிரிப்பர்.

1. எழுத்திலக்கணம்
2. சொல்லிலக்கணம்
3. பொருளிலக்கணம்
4. யாப்பிலக்கணம்
5. அணியிலக்கணம்

முதலெழுத்துக்கள்
மொழியில் முதலாவதாக வரக்கூடியதும், தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் உடையதுமாகிய எழுத்துக்களை முதலெழுத்து என்கிறோம். உயிர் எழுத்து 12ம் மெய் எழுத்து 18ம் ஆகிய 30 எழுத்துக்களை முதலெழுத்து என்கிறோம். இது பிற எழுத்துக்கள் தோன்றக் காரணமாக உள்ளது.
சார்பெழுத்துக்கள்
முதலெழுத்துக்களைச் சார்ந்து வருவதும் தனித்து இயங்க ஆற்றல் இல்லாத எழுத்துக்களையும் சார்பெழுத்து என்கிறோம்.

உயிரெழுத்துக்கள்
தமிழ் மொழி்க்கு உயிராய் இருக்கக்கூடிய எழுத்துக்களை உயிரெழுத்துக்கள் என்கிறோம்.அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ

மெய்யெழுத்துக்கள்
தமிழ் மொழி்க்கு உடலாய் இருக்கக்கூடிய எழுத்துக்களை மெய்யெழுத்துக்கள் என்கிறோம்.
க்.ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்

சார்பெழுத்துக்கள்
தம்முடைய பிறப்பிற்கும், ஒலிப்பிற்கும் முதலெழுத்துக்களைச் சார்ந்து தனித்து இயங்கும் ஆற்றலின்றி வருவது சார்பெழுத்துக்கள் ஆகும்.சார்பெழுத்து 10 வகைப்படும். அவை.
1.உயிர்மெய்,
2. ஆய்தம்,
3. உயிரளபெடை
4. ஒறறளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்.
8. ஔகாரக்குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்.


உயிர்மெய் எழுத்துக்கள்
உடலோடு உயிர் வந்து இணைந்தால் அது உயிர்மெய்யெழுத்து எனப்படும்.
க்+அ=க, க்+ஆ=கா
க்+இ=கி, க்+ஈ=கீ
க்+உ=கு, க்+ஊ=கூ
க்+எ=கெ, க்+ஏ=கே
க்+ஒ=கொ, க்+ஓ=கோ
க்+ஐ=கை , க்+ஔ=கௌ


ஆய்தஎழுத்து
உயிரெழுத்திலும், மெய்யெழுத்திலும் வராத ஓர் எழுத்து ஆய்தஎழுத்து ஆகும் மூன்று புள்ளிகளை இட்டது போல இருக்கும்.
உதாரணம் எஃகு இது தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளதால் இது தனிநிலை என்ற பொருளும் உள்ளது.

உயிர் 12, மெய் 18, ஆகவே 12x18 = 216 உயிர்மெய் எழுத்துக்களாகும்.

உயிரெழுத்து - 12
மெய்யெழுத்து - 18
உயிர்மெய் - 12x18= 216
ஆய்த எழுத்து - 1
மொத்தம் - 247
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

VAO STUDY MATERIAL

Post by பிரம்மதேவன் » Mon Nov 30, 2015 1:30 pm

இலக்கணம் தொடர்ச்சி...


அளபெடை
அளபெடை என்றால் 'நீட்டித்து ஒலித்தல்' என்று பொருள். அருகில் இருப்பவரைக் கூப்பிட்டால் முருகன் என்போம். அதேபோல அவன் தூரத்தில் இருந்தால் முருகாாா என்று ஒலியை நீட்டித்து கொண்டே போகிறோம் அல்லவா அதற்கு பெயர்தான் அளபெடுத்தல் எனப்படும். உயிர் எழுத்துக்கள் அளபெடு்த்தால் உயிரளபெடை எனப்படும்.ஒற்றெழுத்துக்கள் அளபெடு்த்தால் ஒற்றளபெடை என அளபெடை இருவகைப்படும்.

உயிரளபெடை
உயிர் நெட்டெழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஐ,ஔ இவை சொல்லின் முதலிலோ அல்லது இறுதியிலோ நின்று தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மாத்திரை அளவிலிருந்து நீட்டித்து ஒலிக்குமானால் அது உயிரளபெடை எனப்படும்.இது
1. செய்யுளிசை அளபெடை
2. இன்னிசை அளபெடை,
3. சொல்லிசை அளபெடை
என மூன்று வகைப்படும்.
உயிர் நெட்டெழுத்துக்கள் அளபெடுக்கும் போது அவற்றுக்கு இணையான எழுத்துக்கள் தோன்றும். அவை
ஆ-அ, ஈ-இ, ஊ-உ,ஏ-எ,ஐ-இ,ஓ-ஒ, ஔ-உ
உதாரணம் : ஓஒதல்-முதலில் அளபெடுத்துள்ளது.
கொடுப்பதூஉம்-நடுவில் அளபெடுத்துள்ளது.
டாஅ-கடைசியில் அளபெடுத்துள்ளது.

1. செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசை நிறைவு செய்வதற்காக செல்லின் முதல், இடை, கடை மூவிடத்தும் அளபெடுத்து வரும்.
(1) "இ" எனும் உயிரெழுத்து தவிர எனைய உயிரெழுத்து அச்சொல்லில் இருக்கும்.
(2) சொல்லைப் பார்க்கின் அது ஈரசைச் சீராக இருக்கும்.
(உ-ம்) "ஓஒதல் வேண்டும்", "உழாஅர் உழவர்", "படாஅ பறை"

2. இன்னிசை அளபெடை:
செய்யுளில் செவிக்கு இனிய ஓசை தரும்பொருட்டு குற்றெழுத்து நெடிலாகி அளபெடுப்பது இன்னிசையளபெடையாகும்.
(1) அளபெடுக்குஞ் சொல்லில் "உ" எனும் உயிரெழுத்து இருக்கும்.
(2) அச்சொல் மூவசைச் சீராக இருக்கும்.
(உ-ம்)"கெடுப்பதூஉம் கெட்டார்க்கு"என்ற தொடரில் "து" எனும் குறில் "தூ" என நெடிலாகி அளபெடுத்துள்ளது.

3. சொல்லிசை அளபெடை:
செய்யுளில் ஓசை குன்றாதபோது, ஒருசொல் மற்றொரு சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை எனப்படும்.
(1)"இ" எனும் உயிரெழுத்தில் முடிந்தாலது சொல்லிசை அளபெடையே.
(2) உயிரெழுத்தை நீக்கிச் சொல்லைப் பார்த்தால், அது ஓரசைச் சீராக இருக்கும்.
(உ-ம்) "உரன் நசைஇ[/color] உள்ளம் துணையாக" என்னும் தொடரில் "நசை" எனும் சொல்லில் "சைஇ" என்று வினையெச்சமாக வந்து அளபெடுத்துள்ளது.

ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லிலுள்ள மெய்யெழுத்துகள் அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பது ஒற்றளபெடை எனப்படும்.
(உ-ம்)
"இலங்ங்கு வெண்பிறை" - (இடையில் வந்தது)
"கலங்ங்கு நெஞ்சம்" - (இடையில் வந்தது)
"விடங்ங் கலந்தானை" - (இறுதியில் வந்தது)
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

VAO STUDY MATERIAL

Post by பிரம்மதேவன் » Mon Dec 07, 2015 7:35 pm

இலக்கணம் தொடர்ச்சி...


குற்றியலுகரம்
உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) எனப்படும்.
அதற்குச் சில வரையறைகள் உண்டு.
1. வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.

2. இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு

3. தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. எடுத்துக்காட்டு: அது, பசு, வடு, அறு
முதலியவை.
குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2.ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

என்பவை ஆகும்.

நெடில் தொடர்க் குற்றியலுகரம்
தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
எடுத்துக்காட்டு: பாகு, மூசு , பாடு, காது, ஆறு

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு ,து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்எனப்படும்.
எடுத்துக்காட்டு: அஃது (அது என்பது பொருள்)
கஃசு (பழங்காலத்து நாணயம் ஒன்று)

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
நெடில் எழுத்துகள், நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால் உயிர்மெய் எழுத்துகளில் உள்ள குறில் எழுத்துகள் மட்டும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும். எனவே, இது, குறில்தொடர்க் குற்றியலுகரம் என்றும் அழைக்கப்படும்.
உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டு: வரகு,தவிசு , முரடு,வயது ,கிணறு

வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம்எனப்படும்.
எடுத்துக்காட்டு: பாக்கு,கச்சு,பட்டு,பத்து,மூப்பு,காற்று

மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம்எனப்படும்.
எடுத்துக்காட்டு: சங்கு,பஞ்சு,நண்டு,பந்து,பாம்பு,கன்று

இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம்எனப்படும்.
எடுத்துக்காட்டு: மூழ்கு,செய்து,மார்பு,பல்கு

முற்றியலுகரம்
கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகள் தனிக் குறிலை அடுத்து வந்தால் ஓசை குறைவதில்லை
நகு, பசு, தடு, எது, மறு
கு, சு, டு, து, பு, று ஆகிய வல்லின மெய்யுடன் கூடிய உகர எழுத்துகள் வந்தாலும், முதல் எழுத்து, குறில் எழுத்தாக இருப்பதால், இவை குற்றியலுகரம் அல்ல
மெல்லின, இடையின மெய்களோடு சேர்ந்த உகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்போது குறைந்து ஒலிப்பதில்லை.
அணு, தனு, உறுமு, குழுமு, தும்மு, பளு,
எரு, ஏவு இரவு, நிறைவு, உறவு, விரிவு
ஓய்வு, பிறழ்வு, நிகழ்வு,வலு, ஏழு, உழு, துள்ளு

மேலே காட்டப்பட்டுள்ள சொற்களின் இறுதியில் மெல்லின, இடையின மெய் எழுத்துகள் உகரத்துடன் சேர்ந்து வந்துள்ளன. அவை குறைந்து ஒலிப்பதில்லை. எனவே அவை குற்றியலுகரம் அல்ல. ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்காமல் முழு அளவில் ஒலிக்குமாயின் முற்றியலுகரம் எனப்படும். மேலே காட்டியுள்ள சொற்களில் உள்ள உகரங்கள் எல்லாம் முற்றியலுகரங்கள் ஆகும். ஒரு சொல்லின் இறுதியில் வரும் உகரம் முற்றியலுகரமாகவோ குற்றியலுகரமாகவோ இருக்கும்.
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

Re: நீங்களும் ஆகலாம் அரசு அதிகாரி

Post by பிரம்மதேவன் » Mon Dec 14, 2015 7:27 pm

VAO தேர்விற்கு விண்ணப்பிக்க காலத்தை 31.12.2015 வரை நீட்டித்துள்ளார்கள். விண்ணப்பி்க்க தவறியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
பிரம்மதேவன்
Posts: 118
Joined: Thu Oct 30, 2014 6:24 pm
Cash on hand: Locked

VAO STUDY MATERIAL

Post by பிரம்மதேவன் » Wed Dec 16, 2015 5:58 pm

GK QUESTIONS

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது?
திமிங்கிலம்

2) உலகில் உயரமான விலங்கு எது?
ஒட்டகச்சிவிங்கி

3) உலகில் மிக உயரமான மலை எது?
இமயமலை

4) உலகிலேயே மிக நீளமான நதி எது?
அமேசான்(6.750 கிலோ மீட்டர்)

5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?
நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி
(11.522மீட்டர்)

7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
லண்டன்

8)உலகிலேயே பெரிய பாலைவனம் யாது?
சஹாராப்பாலைவனம்

9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?
வாடிகன்

10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது?
பசுபிக் சமுத்திரம்

11) உலகிலேயே பெரிய தீவு எது?
கிரீன்லாந்து

12) உலகிலேயே பெரிய கண்டம் எது?
ஆசியாக்கண்டம்

13) உலகிலேயே சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா

14) உலகிலேயே பெரிய நாடு எது?
கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)

15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது?
இந்தோனேஷியா

16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது?
சிரபூஞ்சி

17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது?
சுப்பீரியர் ஏரி

18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது?
365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 நொடிகள்

19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது?
எவரெஸ்ட்

20) உலகிலேயே பெரிய எரிமலை யாது?
லஸ்கார்(சிலி) 5.990 மீட்டர்

21) உலகிலேயே மிக நீளமான மலை எது?
அந்தீஸ்மலை

22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது?
தென்சீனக்கடல்

23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன்
(ரஷ்யா-ஈரான்)

24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979 மீட்டர்

25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது?
சீனா

26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது?
வாடிகன்

27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?
காரக்புர்

28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?
பைக்கால் ஏரி

29) உலகிலேயே மிக நீளமான குகை எது?
மாமத் குகை

30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது?
நேபாளம்

31) உலகிலேயே மிகப்பெரிய பூ எது?
ரவல்சியாஆர்ணல்டி

32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது?
அலாஸ்கா

33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்?
தொலமி

34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது?
நேச்சர்

35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது?
பிலிப்பைன்ஸ்

36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது?
ஆஸ்திரேலியா

37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது?
டிடிக்காகா

38) உலகில் மிக உயரமான அணை எது?
போல்டர் அணை

39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது?
சீனா

40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது?
இந்தியா

41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
மாண்டரின்(சீனா)

42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?
பைபிள்

43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?
நெதர்லாந்து

44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது?
சவுதி அரேபியா

45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது?
இந்தோனோசியா

46)உலகில் மிக உயரமான அணை யாது?
போல்டர் அணை
Post Reply

Return to “உதவிக் களம்”