Tamil Online Job Site from Tamil Nadu - படுகை.காம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Tamil Online Job Site from Tamil Nadu - படுகை.காம்

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 6:33 am

ஆன்லைன் வேலை மூலம் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் :
பணம் இன்று நமது வாழ்க்கையில் ஒன்றி போன ஒன்று . அது இல்லாமல் நாம் வாழ்வது என்பது ஒரு கேள்வி குறிதான்.

எல்லோரும் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் வாழ்கிறோம் , அதிலும் பலர் இணைய தளம் முலமாக வீட்டில் இருந்தே சம்பாதிக்க விரும்புகிறார்கள். தினமும் பலர் இனையதள வேலை பற்றி தேடியும் வருகிறார்கள் .

நீங்கள் இனையதள வேலை தேடுபவரா ...
உண்மையான ஆன்லைன் ஜாப் பணிகளை செய்து
இலட்சம் இலட்சமாய் கோடி கோடியாய்
சுயமாய் சம்பாதிக்கலாம்

படுகை.காம் வழங்கும் பணி வாய்ப்பு, கோல்டு உறுப்பினர் கட்டணம் மற்றும் வருவாய் உறுதி ஆகியவற்றைப் பற்றிய முழுமையான விளக்கப்பதிவு. ஆகையால் நிதானமாக சில மணி நேரங்களை செலவிட்டு, ஒர் முறைக்கு இருமுறை படித்து தெளிவுறுங்கள்.



கோல்டு உறுப்பினர்களுக்கான கட்டணம் ரூ.1500 ஏன்?

படுகை.காம் மூலம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால் முதன்மையாய் நிற்பது கோல்டு உறுப்பினர்களை பெறுவது தான். ஆனால், ரூபாய் 1500 கட்ட வேண்டும் என்பதால் இணைப்பது என்பது எல்லோர்க்கும் கடினம் தான்.

அதைவிட மிக முக்கியமானது, ஆன்லைன் ஜாப் என்றாலே ஏமாற்று எனச் சொல்லும் பொழுது, அந்த ஆன்லைன் ஜாப்புக்கே ஆயிரம் கட்டணம் கேட்டால்?

இலவசமாகவே பல பல முன்னணி தளங்கள் இவ்வேலை வாய்ப்பினை வழங்கும் பொழுது, ஆயிரம் ++ கட்டணம் கேட்டால்?

கண்டிப்பாக எவரும் ரூ.ஆயிரத்தி ஐநூறு செலுத்தி சேரமாட்டார்கள். ஏன், என்னை அழைத்தால் கூட சேரமாட்டேன். பணத்தினை பெற ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்வோம், அதுதான் உண்மை.

ஆனால், படுகையில் நீங்கள் செய்யும் பணி என்ன என உணர்ந்து கொண்டால், ரூ. ஆயிரத்தி ஐநூறு கட்டணம் என சொன்னவுடன் பலவித பேச்சுக்கும் கேள்விக்கும் உங்களால் சரியான பதில் கொடுக்க முடியும். அப்பணத்தினால் பெற இருக்கும் பலனையும் தெரிவிக்க முடியும்.

ஆகையால், நாம் ஒவ்வொருவரும் நான் இந்த பணியினைச் செய்கிறேன்.. நான் இந்த பணியினை உங்களுக்காகச் செய்கிறேன் என்ற ஒர் உறுதிப்பாடினைக் கொள்ள வேண்டும். அவ்வாறக நாம் ஒர் பணியினைச் செய்தால் தான், அதற்கான வருவாயினைப் பார்க்க முடிக்க முடியும்.

அந்த வகையில், தமிழ் ஆன்லைன் ஜாப்- எனக் கூறி படுகை கோல்டு மெம்பர் ஆவதற்காக ரூபாய் ஆயிரத்தி ஐநூறு கேட்கும் படுகை, தன் பணியினை மிகச் சிறப்பாக செய்திருக்கிறது. அதிலும், படுகை பணிக்கு அவர் கொடுக்கும் ரூபாய் 1500 என்பது மிக மிகக் குறைவு என்றும், இதற்கும் குறைவாக ஒர் நபரிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்ற ஒர் தெளிவும் இருக்கிறது.

இணையத்தில் $80.00 கொடுத்து வாங்கி படிக்கும் - Online Job Ebook- அளவிற்கான படைப்புகளை படுகை பயிற்சி பணி வாயிலாக கொடுத்திருப்பது மட்டுமின்றி, பல விளக்க பதிவுகளையும் அவ்வப் பொழுது கொடுத்துக் கொண்டும்... கேட்கும் கேள்விகளுக்கான விளக்கத்தையும் கொடுத்துக் கொண்டும் வருகிறேன்.

எனவே படுகை.காம் ஆன்லைன் ஜாப்க்கு ஒருவர் ஆயிரத்தி ஐநூறு கட்டணம் செலுத்துகிறார் என்றால், அவருக்கு படுகை அப்பணத்தின் மதிப்பைக் காட்டிலும் பலமடங்கு பலன் கொடுக்கும் ஒர் வழிகாட்டியாய், கற்ற, அனுபவித்த, உழைப்பின் பதிவுகள் மூலம் பயனாய் இருக்கிறது. அதற்கும் மேல், ரூபாய் ஆயிரத்திற்கு அனுபவிப்பது பிற உறுப்பினர்களின் பணியின் பலனையும்தான் என்பது தெரியுமா?

என்னைப் பொறுத்த வரைக்கும் இணைய வேலை தேடுபவர்களுக்கு இது ஒர் பயிற்சிக் களம் & உழைக்கும் இடம்.

ஆன்லைன் ஜாப் எனத் தேடும் அனைவருக்கும் படுகை ஆன்லைன் ஜாப் சம்பந்தமான கட்டுரைகள் மிகவும் உபயோகமானதாகவும், அவர்களை தினம் ஆயிரம் சம்பாதிக்கவும் தயார் செய்யும் என்பதில் முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

உதாரணத்திற்கு ஒர் கணக்கு ஆசிரியரை எடுத்துக் கொண்டால், அவருக்கு அனைத்து மாணவர்களையும் 100% மார்க் எடுக்க வைக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்குமே தவிர, பேதம் இருக்காது.

100/100 மார்க் எடுக்க வேண்டும் என்றால், மாணவர்களும் ஆசிரியர் சொல்லிய முறைகளை பின்பற்றி சரியாக செயல்பட்டால் தான் முடியும். அதற்காக, ஆசிரியர் என்னதான் முட்டி மோதி கஷ்டப்பட்டு, அவர்களுக்கு விளங்கக் கற்றுக் கொடுத்தாலும்... எல்லோராலும் 100 மார்க் வாங்க முடிவதில்லை. இதற்கு ஆசிரியர் மட்டும் குற்றவாளி அல்ல, ஆண்டவனும் தான். ஆம், ஆண்டவன் புறத்தில் மட்டும் மாறுதலை காட்டவில்லை. அகத்திலும் அறிவிலும் தான் ஒவ்வொருவருக்கும் இடையே மாறுதலை கொடுத்துவிட்டான். ஆகையால் ஒருவருக்கு ஒருவர் சமநிலை ஆக முடியாது. ஆனால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பெறாவிட்டால் உலகில் சமநிலை வாழ்வு இல்லாது போய்விடும். இதற்காகத்தான் ஆண் பெண் என்ற இரு பாலினத்தை உருவாக்கினானோ!!

இங்கு நான் ஒருவருக்கு ஒருவர் சமநிலை அடைய முடியாது என்றுதான் சொன்னேனே தவிர, ஒருவர் தினம் ஆயிரம் சம்பாதிப்பதை போன்று மற்றொருவர் தினம் ஆயிரம் சம்பாதிக்க முடியாது என்ற கருத்தினை சொல்லவில்லை.

ஆகையால், நான் செய்யும் பணிக்கு மட்டும் கட்டணம் இல்லை. மற்றவர்களது பணிக்கும் அந்த கட்டணம் தகும்.

என்னைப் போன்று, படுகை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் வகையில், கோல்டு உறுப்பினர் கண்டனத்திற்கு கொடுக்கும் பணத்திற்கு பலனாகத்தான் இருக்கிறார்கள் என்பதும் நிதர்சன உண்மை. ஆகவே, உங்கள் வாயிலாக இணையும் கோல்டு உறுப்பினர் கமிஷன் தொகை, என்பது உங்கள் பணிக்கான வருவாய்

இப்பொழுது, நீங்கள் என்ன பணியினை செய்கிறீர்கள், அந்த பணி வருவாய் கொடுக்கும் ஒர் உண்மையான பணி தானா? என்பதனைப் பார்ப்போம்

கணக்கு ஆசிரியர், கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பல ஆயிரம் சம்பாதிக்கிறார், ஆங்கில ஆசிரியர் ஆங்கிலம் சம்பந்தமான பாடம் எடுத்து சம்பாதிக்கிறார், அறிவியல் ஆசிரியர் அறிவியல் சம்பந்தமாக, இப்படி ஒவ்வொருவரும் அவர் அவருக்கான பிடித்த துறையின் வாயிலாக பல ஆயிரம் சம்பாதிக்கிறார்கள்.

அதற்காக, ஆசிரியராக இருந்தால் தான் சம்பாதிக்க முடியும் என்றில்லை. கதை, திரைக்கதை, நாடக வசனம் என எழுதுபவர் சம்பாதிக்கிறார்கள்.

கார்ட்டூன் படங்கள் வரைவதை ஒர் பணியாகச் செய்துசம்பாதிக்கிறார்கள், நகைச்சுவை துணுக்குகள் எழுதுவதையும் பணியாகச் செய்து சம்பாதித்து வருகிறார்கள்.

கவிதைகள் எத்தனையோ பேர் எழுதுகிறார்கள், அதில் சிலர் புத்தகமாக வெளியிடுவதும் உண்டு... சில பத்திரிகைகள் கவிதைக்கு வெகுமானம் கொடுத்து வரவேற்க, அதற்கு அனுப்புவதும் உண்டு. ஒர் சிலர், திரைப்டங்களுக்கு கவிதை/பாடல் எழுதி கொடுப்பதும் உண்டு... தங்களது கவிதைகள், புத்தகமாக வெளிவர.. சினிமாவில் வெளிவர என இலட்சங்கள் சம்பாதிப்பவர்களை கண்கூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எடுத்துக்காட்டு : கவிஞர். வைரமுத்து


கதைகள், இதுவும் ஒர் வருவாய் பணி தான். பாருங்களேன் ... புத்தகம் என்றாலே கதை ... சினிமா என்றாலும் கதை ... டிவி என்றாலும் கதை. இப்படி முக்கிய காரணியாக இருக்கும் கதையினை பலர் எழுதுகிறார்கள்.... இதனால் அவர்களுக்கு பணம் கிடைக்குமா கிடைக்காதா?

குமுதம், ராணி, குங்குமம், ஆனந்த விகடன் என பல பல புத்தகங்கள் கட்டணத்துடன் தான் வெளிவருகின்றன. ஆகையால், நாமும் அந்த அளவிற்கு நம் ஆக்கத்தின் தகுதியை வளர்த்துக் கொண்டால் தான், பணி செய்கிறோம் எனச் சொல்ல முடியும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கட்டுரைகள்/செய்திகள் ... பலரும் செய்திகளை படிக்கத்தான் ஆர்வமாய் நாளிதழ் வாங்குகிறோம். ஆனால், அந்த செய்தியினை எழுதியவர்கள்-சேகரித்தவர்கள்.. எல்லோருமே வருவாய்க்காகத்தான் செய்கிறார்கள், சம்பளம் வாங்குகிறார்கள் (விதிவிலக்கு இருக்கலாம்) என்பது நமக்குத் தெரியாதா?

ரேடியோவில், பாடல்களை வெறுமனே ஒலிபரப்பு செய்யாமல், ஏன் ஒருவரை சம்பளம் கொடுத்து பிறர் கருத்துக்களை கேட்க வைத்து, பின் பாடலை ஒலிபரப்பு செய்கிறார்கள்? . அப்படியானால், பாடலைப் பற்றிய சேதியையும், தன் புது கருத்தையும் ஒருவர் சொல்வது தானே அந்த பணத்திற்கான மதிப்பு! ஆகையால், யூடியுப்பில் இருந்து பாடல்களை வெறுமனே காப்பி செய்து பதிவைக் கொடுப்பதைக் காட்டிலும், தன் கருத்துக்களையும் புதிய சேதியையும் எழுதி பதிவதன் மூலம் அதுவும் ஒர் பணியாய் மாறுகிறது.

மேலும் அன்புடன் பேசி, பிறர் படைப்புகளைப் பாராட்டி வாழ்த்துவதும், தன் கருத்தினை சுவையாய் பின்னூட்டப் பதிவாய் பதிவதும் அவர்களை மேலும் மேலும் படைப்பினைக் கொடுக்க தூண்டும் காரணிகள். ஆகையால், இதுவும் ஒர் பணப்பலன் கொடுக்கும் பணியாய் கண்டிப்பாக அமையும். அதற்கு சிறந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து நல்ல பதிவுகளுக்கு மட்டும் நல்ல கருத்துடன் பின்னூட்டம் கொடுக்க வேண்டும். இதன் வாயிலாக ஒர் விளம்பரத்தினை எளிதாக அடைந்து நாம் பலன் அடைகிறோம். அதனையும் பின் விளக்கமாக சொல்கிறேன்.

கணிணி பழுது பார்த்தல் சம்பந்தமான டிப்ஸ், மொபைல் பழுது பார்த்தல், ஒர் வீட்டிற்கான கட்டட வடிவமைப்பு போன்ற டிப்ஸ் கொடுத்தல், விவசாய கட்டுரை எழுதுதல், சமூக அக்கறையான கட்டுரை வரைதல், நம் அனுபவத்தில் ஏற்படும் பல்வேறு டிப்ஸ்களை பிறருக்கு சொல்லுதல், அதாவது பாஸ்போர்ட் எடுக்க உதவி, வங்கி கணக்கு தொடங்க டிப்ஸ், சேர்மார்கெட்டிங்க் பண்ண டிப்ஸ், வாகனம் வாங்க டிப்ஸ் என்பன போன்றவையும் பணி தான். அவ்வாறான கட்டுரைகள் வாரம் வாரம் நாளிதழிலும், புத்தகங்களிலும் வந்து வாசகர்களை கவர்ந்திழுப்பதனை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

மேலும்,
பேஷன் போட்டோஸ், இயற்கை அழகு போட்டோஸ், விலங்குகளின் புதுமை போட்டோ என நாம் எடுத்து அப்டேட் செய்வது, என நாம் ஆப்லைனில் ஒருவர் பணி எனச் செய்து வருவாய் பார்க்கும் அனைத்து செயல்பாடுகளையும் நம் படுகை.காம்-ல் ஒர் பணியாய் செய்து வருவாய் பார்க்க முடியும் என்பது தான் உண்மை. ஆகையால், உங்கள் துறை எதுவென சொன்னால் எவ்வாறு செய்யலாம் என்ற ஒர் டிப்ஸ் உடனடியாக கிடைக்கும்.

பொருள்களை விற்பனை செய்யவும் கூட நம் படுகையை சிறப்பாக பயன்படுத்தலாம், மேலும் வெப் டிசைனிங்க், போட்டோ எடிட்டிங்க், விடியோ எடிட்டிங்க், போன்ற டெக்னிக்கல் தொழிலில் இருப்பவர்களும் முயற்சித்தால் பலன் அடைய முடியும். அதற்கு முதலில் தங்கள் திறமைகளை முழுமையாகவும் .. புதிய முயற்சி மற்றும் பிறரிலிருந்து தாங்கள் எத்தனை சிறப்பாக செய்வீர்கள் என்பதனை சின்ன சின்ன படைப்புகள் மூலம் செய்து காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான், உங்கள் திறமை பார்த்து ஆர்டர் கிடைக்கும்.


இப்பொழுது உங்களுக்கு நாம் இங்கே என்ன என்ன பணிகளெல்லாம் செய்யது பணமாக சம்பாதிக்கலாம் என்ற ஒர் தெளிவு கிடைக்கும். ஆம், இவ்வாறாக நாம் செய்யும் பணிகள் மூலம் எத்தனையோ பேர் வருவாய் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகையால், நாம் செய்யும் பணி பிறருக்கு என்ன பலன் கொடுக்கும் என்ற கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் பலன் இல்லாமலா, ஒவ்வொருவரும் செய்து, பணமும் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்?

குமுதம், ராணி, குங்குமம், ஆனந்த விகடன் என பல பல புத்தகத்தின் எழுத்தாளர்கள், செய்தித்தாள் ஆசிரியர்கள், வானொலி ஆர்.ஜே., தொலைக்காட்சி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர், செய்தி சேகரிப்பவர்கள், பத்திரிக்கை கட்டுரை எழுத்தாளர்கள், செய்தித்தாள்களுக்கு படங்களை எடுத்து அனுப்புபவர் என ஒவ்வொருவரும் செய்யும் பணியின் நேர்த்தியினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், நாமும் அந்த அளவிற்கு நம் ஆக்கத்தின் தகுதியை வளர்த்துக் கொண்டால் தான் பணி செய்கிறோம் எனச் சொல்ல முடியும் என்பதனையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


இப்பொழுது நாம் பணி செய்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆகையால், ஒருவர் படுகையில் கோல்டு உறுப்பினர் ஆவதற்கு கொடுக்கும் ஆயுள் கட்டணமான ரூபாய் 1500 என்பது அவர் படுகையினால் பெற இருக்கும் பலனுக்கு மிக மிகக் குறைவே! இதனை நாம் அனைவரும் சேர்ந்து குறைவான கட்டணம் என்பதனை "அணு அளவிலும் குறைவான கட்டணம்" என்று சொல்லும் அளவிற்கு நம் பணியினை செய்ய வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் பணத்தினை சம்பாதிக்க ஏதேனும் ஒர் பணியினை தேர்ந்தெடுத்து செய்கின்றனர். அப்படி ஒரே பணியினை செய்வோர்க்கு இடையிலும் கிடைக்கும் வருவாயில் வித்தியாசம் உண்டு என்பதனை நம் நிகழ் வாழ்க்கையில் கண்கூடாகக் கண்டுகொண்டுதான் வருகிறோம்.

குறிப்பாக சொன்னால், இரு பள்ளி ஆசிரியர்களை எடுத்துக் கொண்டால் கூட, ஒருவர் மாலையில் ஏதேனும் கூடுதல் பணி செய்து(tuition) கூடுதல் வருவாய் ஈட்டலாம், மற்றொருவருக்கு அதில் நாட்டம் இல்லாமல் விட்டுவிடலாம். அதே நேரத்தில் M.Sc.,B.Ed முடித்த ஒர் நபர் ஆசிரியர் பணிகூட கிடைக்காமல், தன் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லை என, வருவாயே இல்லாமல் இருக்கலாம். இங்கு, மூன்று பேர்க்கும் உள்ள தகுதி ஒன்று தான், ஆனால் அவர்களது முயற்சி மற்றும் உழைப்பால் தங்களுக்குத் தகுந்த பணத்தின் வருவாய் மாறுபடுகிறது.

அதைப்போன்று, படுகையில் இருக்கும் ஒர் நபர் என்ன சம்பாதிக்கிறாரோ, அதைத்தான் நம்மாளும் சம்பாதிக்க முடியும் என்பதில்லை. அவர் சிறப்பாக பணியினைச் செய்யவில்லை என்பதுதான் உண்மை. ஆகையால், இந்த பணியினைச் செய்தால் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதனை தெரிந்து, அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என முயற்சித்து செயல்பட வேண்டும்.

அந்த வகையில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆன்லைன் ஜாப்- online job என்ற முறையில் தினம் ஆயிரம் அல்ல, தினம் இலட்ச ரூபாய் கூட சம்பாதிக்க முடியும். ஆம், கோடான கோடி மக்களை ஒர் பெட்டிக்குள் இணைக்கும் இணைய நபர்களைக் கொண்டு, தினம் தினம் இலட்ச ரூபாய் சம்பாதிக்க முடியும் என்பது நிஜம். தமிழ் ஆன்லைன் ஜாப் வாயிலாகக் கூட தினம் 1,00,000 என்பது சாத்தியம் தான். ஆனால் அதற்கு ஏற்ற உழைப்பினை நாம் கொடுத்திருக்கிறோமா? என்பதுதான் கேள்விக்குறியே! தவிர, முடியாது என்பது இல்லை.

கோடி கோடியாய் சம்பாதிப்பதற்கு நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் என்பது தான் மிக மிக முக்கியம்.


இதுவரை கோல்டு உறுப்பினர் செலுத்தும் கட்டணத்திற்கு, நாம் என்னனென்ன பணிகளை எல்லாம் செய்து வருகிறோம் என்பவனவற்றைப் பார்த்தோம். அடுத்து, நாம் செய்யும் பணிக்கான வருவாய் எவ்வாறு வருகிறது என்பதனையும் பார்த்திடலாம்.


நீங்கள் பணியினை செய்கிறீர்கள் என்பதனை நான் நன்றாக அறிவேன். ஆனால், உங்கள் பணிக்கான வருவாயை நிர்ணயிப்பதில் படுகை.காம் மட்டும் அல்ல, இதைப் போன்ற பணியினை ஆன்லைனில் வழங்கும் தளங்கள் அனைத்துமே சிரமம் கொள்கின்றன என்பதுதான் உண்மை.

ஒர் பதிவிற்கு ஒர் ரூபாய் என்ற திட்டத்தை செயல்படுத்த முனையும் பொழுது, அர்த்தமற்ற பூஜ்ஜிய மதிப்புடைய ஒர் பதிவிற்கு 1 ரூபாய் கொடுக்க முடியுமா? அதே நேரத்தில் 100 ரூபாய்க்கும் மேலான மதிப்புடைய ஒர் கட்டுரைக்கு 1 ரூபாய் என்றால் ஏற்றுக் கொள்வார்களா?
குறிப்பாக சொன்னால், எனது இந்த ஒரே ஒர் பதிவின் மூலம் ரூ.1000 சம்பாதிப்பேன் என்பது உறுதி. ஆம், எனது இந்த ஒர் விளக்கப் பதிவினை படிக்கும் நபர்களில் குறைந்தது 2 பேர் கண்டிப்பாக கோல்டு மெம்பர் ஆவார்கள். அதற்காக இந்த ஒரே ஒர் பதிவினை 1000 நபர்களிடம் கொண்டு செல்லும் திறமையும் என்னிடம் இருக்கிறது.
ஆகையால், படுகை வழங்கும் ஒர் பதிவிற்கு ஒர் ரூபாய் என்ற பதிவு பலன் ஊக்கத்தொகை என்பது ஒர் தூண்டுதல் மட்டுமே. உண்மையில் அதிகம் அதிகமாய் நீங்கள் சம்பாதிக்க இருப்பது உங்கள் திறமையின் வாயிலாகத்தான். அதற்கான வசதிகள் அனைத்தையும் படுகை ஒவ்வொன்றாக செய்து கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

அதாவது, எனது இந்த ஒர் பதிவின் மூலம் ரூ.1000/- சம்பாதிப்பேன் என்று சொன்னால், நான் ஒன்றும் இன்று முளைத்த காளான் அல்ல, திடீரென வந்து ஒர் பதிவினைச் செய்து ஆயிரம் சம்பாதிக்க. இப்பதிவு, என் ஐந்து வருட கற்றல் மற்றும் அனுபவத்தின் வாயிலாக வந்தது. அதுமட்டும் அல்லாமல், எனது இந்த பதிவின் மதிப்பு 1000 ரூபாய் என்பதனை உறுதிப்படுத்த நான் படுகையில் 3 வருடம் உழைத்து 16000 பதிவுகளைச் செய்திருக்கிறேன். அதுமட்டும் அல்லாமல், ஆன்லைன் ஜாப் என்ற இக்கட்டுரைக்கு தாங்கலாய் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறேன், அவற்றில் பல இன்றும் கூகுள் இண்டக்ஸ் வாயிலாக எனக்கு வாசகர்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதனால் தான், என்னால் இந்த ஆயிரத்தை சம்பாதிக்க முடிகிறது. ஏன் அதைவிட அதிகமாகக் கூட இருக்கலாம்.

இங்கு நீங்கள் கொஞ்சம் தெளிவாக கவனிக்க வேண்டும், எனக்கு பலன் கொடுப்பது வெறும் 100 பதிவுகள் என்று சொன்னால், மீதம் இருக்கும் 16000 பதிவுகளின் மூலம் பலன் இல்லையா??? என்ற கேள்வி வர வேண்டும். ஆம், அந்த மீதம் உள்ள 16000 பதிவுகளினால் மட்டும் என்னால் 10 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது. எனது 100 சிறப்பு ஆன்லைன் ஜாப் கட்டுரையே என்னை சம்பாதிக்க வைக்கும், அதனை உறுதி செய்யத்தான் 16,000 பதிவுகளைச் செய்திருக்கிறேன்.

படுகை ஆன்லைன் ஜாப் பற்றிய 100 கட்டுரைகள் என்பது எனது தனிப்பட்ட திறமை, அதனை பணமாக மாற்ற, அப்பதிவுகளை பிறர் படிக்க எடுத்துச் செல்ல வேண்டும், அப்பொழுதுதான், அவை பணமாக மாற இருக்கிறது. இதற்காகவே, நான் ஒவ்வொருவரது பதிவினிலும் பின்னூட்டம் கொடுத்து வருகிறேன். அதிலும், சிறப்பாக செய்யப்படும் அனைத்து டாபிக்கிலும் என் கையெழுத்து பகுதியில் இருக்கும் விளம்பரம் இருக்குமாயின், அந்த சிறந்த டாபிக் அதாவது, கட்டுரையோ, கவிதையோ, கதையோ, கணிணி சம்பந்த டிப்ஸோ, பேங்கிங் பற்றிய டிப்ஸோ, சிறந்த ஜோக்ஸ் தொகுப்போ ... என பார்த்து பார்த்தும்.. மேலும், படைப்பாளரை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களை உற்சாகப்படுத்தவும் நான் பின்னூட்டம் கொடுக்கிறேன். இந்த பின்னூட்ட பதிவு பண மதிப்புக்கு உரியது அல்ல. ஆனால், என் விளம்பரத்தைப் பார்ப்பதற்கு அது வாய்ப்பாக அமைகிறது. ஆகையால், கதை படிக்க வந்தவர்... கவிதை படிக்க வந்தவர் என ஏதேனும் பிறரது படைப்பினை பார்க்க வந்தவர் என் விளம்பரத்தினைப் பார்த்து... என் பதிவுகள் பக்கம் திரும்புவார்... அவ்வாறாக என் பதிவு பக்கம் திரும்புபவர்கள்.. என் பயிற்சி பணிகளும் விளக்க கட்டுரைகளும் படித்து பிடித்து நம்பிக்கை ஏற்படுமாயின் மட்டுமே கோல்டன் மெம்பராக ஆவதற்கான வாய்ப்பினைக் கொடுக்கிறோம். 1500 ரூபாய் கட்டினால் தான் இவை என எதனையும் மறைத்து வைத்து ஏமாற்றவில்லை.

இதைப் போன்று, நாம் செய்யும் காப்பி பேஸ்ட் பதிவுகளும் பண மதிப்புக்கு உரியது அல்ல. மேல் சொன்ன முறைப்படி நம் கையொப்ப விளம்பரத்திற்கு ஒர் தாங்கலாய் நிற்கலாம். ஆனால், அதற்கு முன்னர் நம் சொந்த திறமைகளை கொண்டு நம் படைப்புகளைக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி அல்லாமல், வெறுமனே காப்பி பேஸ்ட் மட்டும் செய்து கொண்டிருக்கும் பொழுது என்ன பலன்? பின்னாளில், பதிப்பு காப்புரிமை என்ற பெயரில் நமக்கு கலங்கம் தான் ஏற்படும். ஆகையால், காப்பி பேஸ்ட் என்ற முறையில் பண மதிப்பற்ற வீணான பதிவுகளைச் செய்வதைக் காட்டிலும், பிறருக்கு பின்னூட்டம் கொடுத்து ஊக்கமளிப்பது மிகவும் சிறப்பானது.

இவ்வாறாக நான் 16000 க்கும் மேற்பட்ட பதிவுகளின் வாயிலாக மட்டுமே, என்னால் சம்பாதிக்க முடிகிறது... ஆரம்பத்தில் என்னாலும் ஏதும் சம்பாதிக்க முடியவே இல்லை. குறிப்பாக சொன்னால், என் பதிவினைப் படிக்க நபர்களே இல்லை என்ற நிலை தான் இருந்தது. அதற்காக மனம் தளர்ந்துவிடாமல், தொடர்ச்சியான முயற்சியின் மூலம் ஒர் வருடத்தினை கடந்த பின்னர் தான், என் பதிவுகள் மூலம் சம்பாதிக்க ஆரம்பித்தேன். அதுவும் படுகை பெயரினைக் காட்டி அல்ல. ஏனென்றால் 1 வருடமாக எல்லோர்க்கும் பரிட்சயம் ஆனாலும் படுகையை நம்ப யாரும் தயாராக இல்லை. ஆகையால், இணையத்தின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கூகுள் பெயரில் என் பண வருவாயினை தொடங்க ஆரம்பித்தேன். ஆம், கூகுள் அட்சன்ஸ் ஐடி கிரியேட் செய்ய முடியாதவர்களுக்கு, நான் கிரியேட் செய்து கொடுத்து பணத்தினை பெற்றுக் கொண்டேன்.

இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, கூகுள் ஐடி கிரியேட் செய்வது என்பதற்கும் .. படுகையில் பதிவு செய்வதற்கும் சம்பந்தமே இல்லை. அதாவது கணிணி பழுது பார்த்தல் மற்றும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து கொடுப்பவர்க்கும், நம் படுகையில் பதிவிட்டு சம்பாதிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், உண்மை என்னவெனில் நான் படுகையில் பதிவிட்டு கூகுள் அட்சன்ஸ் பற்றிய விளக்க கட்டுரைகள் கொடுத்ததன் வாயிலாகத்தான் என்னிடம் கூகுள் ஐடி கேட்டு வந்தனர். அதுவும், பாகிஸ்தான், சிங்கப்பூர், சவுதி, ஸ்ரீலங்கா... மற்றும் இந்தியா முழுக்க என எங்கிருந்து எல்லாமோ அழைப்புவிடுத்தனர். இதற்கான என் அடிப்படை உழைப்பு 1 & 1/2 வருடம்.

இதைப்போன்று, நீங்கள் வெப் டிசைனிங்க்.. கணிணி சாப்ட்வேர் இன்ஸ்டாலிங்க் (இங்கிருந்து கொண்டே டீம் வீவர் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவர்க்கும் நாம் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து கொடுக்க முடியும்), ஃபோட்டோ எடிட்டிங்க், விடியோ எடிட்டிங்க்.. என பல இணைய பணிகளைச் செய்து கொடுக்க முடியும். அதற்கு நீங்கள் உங்கள் திறமைகளைப் பற்றிய கட்டுரைகளை கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், சென்னை என்றால் அப்பகுதியில் உள்ள மக்கள் மட்டும் என்றில்லாமல் .. உலகின் எந்த மூலையில் உள்ள மக்கள் வாயிலாகவும் உங்களால் பிசினஸ் செய்ய முடியும். அதாவது, ஒர் ஊரில் இலட்ச மக்கள் இருக்கிறார்கள் என்றால்... அதிலிருந்து உங்களுக்கு தினம் 100 கஷ்டமர் என்றால் கோடான கோடி மக்களை இணைத்திருக்கும் இணையத்தில் உங்கள் பிசினசை விரித்தால், எத்தனை கஷ்டமர்களை கவரலாம் என நினைத்துப்பாருங்கள்.

இதைப்போன்று கதை மற்றும் கவிதை எழுதி வரும் நாமும் சம்பாதிக்க இருக்கிறோம். ஆம், அடுத்தக்கட்ட முயற்சியாக நம் சிறந்த கவிதை கதைகளை தேர்ந்தெடுத்து புத்தகமாகவும் அச்சடித்து விற்பனை செய்யலாம் என்ற ஒர் திட்டமும் என்னிடம் இருக்கிறது. அதற்கான முழு காப்புரிமையும் அந்த அந்த ஆசிரியர்களே, படுகை உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அதனை பணமாக மாற்ற துணையாக இருக்கும்.

ஆகையால், நீங்கள் தான் உங்கள் திறமைகளைக் கொண்டு சிறப்பாக சின்ன சின்ன துளிகளாக ஒவ்வொரு பதிவுகளாக சேர்த்து பெரும் வெள்ளமாக பணம் தரும் பதிவுகளாக மாற்ற வேண்டும்.

3 வருடங்களைத் தாண்டிய படுகை.காம் பலரது நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கிறது. ஆகையால், உங்களால் படுகை கோல்டு மெம்பர்சிப் கமிஷன் வாயிலாகவும் எளிதாக சம்பாதிக்க முடியும்.

படுகை கோல்டன் கட்டணம் என்பது ஒர் முறை மட்டுமே. அதுவும் மிகவும் குறைந்த கட்டணம் தான். ஆனால், தங்கள் வாழ்நாளில் படுகை மூலம் நீங்கள் சம்பாதிக்க இருக்கும் பணத்தின் மதிப்போ மிக மிக உயர்வானது. ஆகையால், தங்கள் உழைப்பை வீணாக வலைப்பூக்களிலும், பேஸ்புக் ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களிலும் செலவிடுவதற்குப் பதில் நம் படுகையில் கொஞ்சம் பயனுள்ளபடி போக்கினால், பணமாக... இணையத்திற்கான மாத மாதம் கட்டணத்தையாவது சம்பாதிக்கலாம் அல்லவா! அதுவே நாளை பெரும் தொகையாக மாறும் அல்லவா!

ஆகையால், ஏதோ செய்கிறோம் என்றில்லாமல் ... எப்படி செய்து சம்பாதிக்கலாம் என்ற திட்டத்துடன் பதிவிட ஆரம்பியுங்கள், உறுதியுடனும் விடா முயற்சியுடனும் செய்யுங்கள்.. கண்டிப்பாக தினம் தினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
:thanks:
நன்றி
செல்வ ஆதித்தன்.கு
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”