ஒர் பதிவிற்கு ரூபாய் 5.00/=
தமிழில் ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரைகள் எழுதி பணம் சம்பாதிக்கலாம்
தமிழ் மொழியில் ஆன்லைன் ஜாப் செய்து, வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வைக்கும் முயற்சியில் படுகை முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே, படுகையில் செய்யப்படும் பதிவுகளுக்கு ரூபாய் ஒன்று வீதம் தன் விருப்ப ஊக்கத்தொகை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது உறுதியான வருவாய்க்காக, உங்களுக்கான பணியாக Article Writing Job என்னும் பணியினை தமிழில் எழுத வழிவகைச் செய்து, அதற்காக நீங்கள் எழுதும் கட்டுரைகளை தலா ரூ.5.00 வீதம் கொடுத்துப் பெற்றுக் கொள்கிறோம் என்பதனை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
விதிமுறைகள்:
கட்டுரைகள் "online job" என்ற Keyword-ல் தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
கட்டுரைகள் 50 வரிக்கும் குறைவில்லாமல், ஆன்லைன் ஜாப் சம்பந்தப்பட்டதாகவும், அர்த்தத்துடன், தெளிவுடனும், பிழையின்றியும் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதுவும் உங்கள் சொந்த கட்டுரையாக இருக்க வேண்டும், வேறு எந்த தளத்திலும் பதிவிட்டிருத்தல் கூடாது மற்றும் உங்கள் சொந்த தளத்திலும் இங்கு பதிவிடும் கட்டுரைகளைப் பதிவிடக்கூடாது.
நீங்கள் Article writing job-க்கிற்காக எழுதும் இக்கட்டுரைகளை, தமிழ் ஆன்லைன் ஜாப் கட்டுரைகள் - ஒர் பதிவிற்கு ரூ.5.00/= என்ற துணைக்களத்தில் தான் பதிந்திட வேண்டும்.
அவ்வாறு நீங்கள் பதியும் பதிவுகள்,(டாபிக் ஆனாலும் சரி, பின்னூட்டப் பதிவாக இருந்தாலும் சரி) சரிபார்க்கப்பட்டு Approval வழங்கியப் பின்னரே பிரசுரிக்கப்படும். அக்களத்தில் வெளியிடப்பட்ட அனைத்து பதிவுகளுக்கும் தலா ரூ.5.00 வீதம் வழங்கப்படும்.
எழுதிய கட்டுரைகளுக்கான பணத்தினைப் பெற, குறைந்தப்பற்றம் 200 கட்டுரைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதாவது, ரூ.1000/= வந்தவுடன் பணக்கோரிக்கை வைத்தால் அடுத்த மாதத்தில் உங்களுக்கான தொகை காசோலை வாயிலாகவோ! இந்தியா என்றால், பேங்க் ட்ரான்ஸ்பர் வாயிலாகவோ அளிக்கப்படும். இந்திய காசோலையை அனுமதிக்காத வெளிநாட்டு வங்கிக் கணக்கைக் கொண்டவர்கள், தானாகவே முன்வந்து தொகையினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
[/color]
நாள் : 30-ஏப்ரல்-2012
குறிப்பு: விதிமுறையை மாற்றியமைக்கவும், புதியவனவற்றை புகுத்தவும் நிர்வாகத்திற்கு அனுமதியுண்டு. ஆகையால் அவ்வப்பொழுது புதிய மாற்றத்தை இவ்விடம் வந்து பார்த்துக் கொள்ளவும்.
இவண்
படுகை ஆதித்தன்