படிப்பு:
●●●●
★ ஒரு மனிதன் அறிவை சிறந்த முறையில் பயன்படுத்தி நாகரீகமாக வாழ வழி வகுப்பது படிப்பு மட்டுமே. படிப்பு என்பது ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவை. இந்த படிப்பு அவனது வாழ்நாளில் அழியாத செல்வமாக திகழ்கிறது. அரசர் வாழ்ந்த காலங்களில் கல்வியை கற்றுகொள்ள குருகுலத்திற்கு சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து கற்றார்கள்.
★அந்த காலக்கட்டத்தில் படிக்க புத்தகம், நோட் எதுவும் கிடையாது. எல்லாம் செயல்முறையில் கற்றார்கள். ஓலைச்சுவடிகளை பயன்படுத்தினார்கள். அந்த காலகட்டத்தில் படிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது நாகரீகம் வளர வளர internet, book, calculator ஆகியவற்றை பயன்படுத்தி எளிமையாக படிக்க முடிகிறது. தெரியாத கேள்விகளுக்கு internet மூலமாக உடனுக்குடன் பதில்களை தெரிந்துகொள்ள முடிவதோடு நேரமும் விரயம் ஆவது குறைகிறது.
★மனிதன் இன்று ஒரு கணக்கு போட வேண்டும் என்றால் கூட calculator ஐ தேடுகிறான். இதனால் அவனது சிந்திக்கும் திறன் குறைகிறது.
கல்வி என்பது ஒரு மனிதனின் நிழல் போல பின் தொடர்ந்து வரும். ஒருவனின் பெயரின் பின்னால் அவன் வைத்திருக்கும் பணத்தை யாரும் குறிப்பிடுவதில்லை.
★அவன் என்ன படித்திருக்கிறான் என்பதை தான் பார்கிறார்கள். பெயரின் பின்னால் BE,B.com,MA இப்படி படித்த பட்ட பெயரை போட்டு கொண்டால் தான் பெருமை என்று நினைக்கிறான். படிப்பினால் நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து புதிய புதிய technology மூலமாக வேலையை பணி சுமையை குறைக்க முடிவதோடு விரைவாக நேரமும் மிச்சம் ஆகிறது. கல்வி குறைவாக இருந்த காலத்தில். ஒரு தகவலை தன் உறவினருக்கு தெரிவிக்க புறா , தபால் ஆகியவற்றை பயன்படுத்தி செய்தியை தெரிவிக்க வேண்டும்.
★ இதனால் நேரமும் வேலையும் அதிகம் ஆகிறது. அறிவியல் நாகரீகம் வளர்த்து மக்கள் அனைவரும் தொலைபேசி ,கணினி , மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் பரிமாற்றப்படுகிறது.
இப்போது படிக்கும் மாணவர்கள் விடிய விடிய படிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி கண் விழித்து படித்துவிட்டு காலையில் தேர்வு எழுத செல்லும் போது படித்தது அனைத்தும் மறந்துவிடும்.
★இதற்கு காரணம் விருப்பம் இல்லாமல் படித்ததே காரணம். ஆசிரியர்கள் வற்புறுத்தி படிக்க வைப்பதே காரணம். படி படி னு சொன்ன எப்படி படிப்பு ஏறும்!!!!. அன்பாக சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு புரியும். அதை விட்டுவிட்டு மாணவர்களை அடிப்பதாலோ திட்டுவதாலோ படிக்க வைத்துவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனம்.
★படிக்கும் குழந்தைகளை படி படி என்று வற்புறுத்த கூடாது. இதனால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஒரு சில குழந்தைகளுக்கு நினைவு திறன் குறைவாக இருக்கும். அவர்கள் எவ்வளவு தான் படித்தாலும் நினைவு இருக்காது. படித்தது எல்லாம் மறந்து போகும். இப்படி இருக்கும் குழந்தைகள் அறிவு வளர்ச்சி இல்லை என்று சொல்லிவிட முடியாது.
★நினைவு திறனை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழியை கண்டுபிடித்துவிட்டால் படிப்பு என்பது எளிமையாகிவிடும். எப்போதும் படிக்கும் போது புருவ மத்தியில் நினைவை கொண்டு வந்து பழக்கும் போது மனம் புருவ மத்தியில் ஒருமைபடும். மனம் என்பது புருவ மத்தியில் spiral shape ல் எப்போதும் சுற்றி கொண்டே இருக்கும். அந்த அலை சுழல் அதிகமாகும் போது மனதின் இயக்கம் அதிகமாகும் அந்த நேரத்தில் என்னதான் படித்தாலும் மனதில் நிற்காது. எப்போது மன அலைசுழல் குறைந்து ஆல்பா நிலைக்கு வருகிறதோ அப்போது என்ன படித்தாலும் மனதில் அப்படியே பதியும்.
★மன அலை சுழல் குறையும் போது மட்டுமே நினைவு திறன் அதிகரிக்கும். சுவாமி விவேகானந்தர் புத்தகத்தை படிக்கும் போது அவரது மனம் புத்தகத்தில் ஒன்றி இருக்கும். ஒரே ஒரு முறை மட்டுமே படிப்பார் படித்ததை அப்படியே மனப்பாடமாக எப்போது வேண்டுமானாலும் சொல்லுவார். மனம் ஆழ்ந்த தியான நிலைக்கு செல்லும் போது மனதின் அலைசுழல் குறைந்து நினைவு திறன் அதிகரிக்கும்.
அவரை பார்க்க வருபவர்கள் அவர் பக்கத்தில் இருந்தாலும் கவனிக்க மாட்டார். அவரது கவனம் புத்தகத்தில் மட்டுமே இருக்கும். நினைவு திறன் குறைவாக இருந்தால் நினைவு திறனை வளர்த்து கொள்ளலாம்.
வேலை:
●●●●●●●
★பணத்தை சம்பாதிக்க ஒவ்வொரு மனிதனும் வேலையை தேடி செல்கிறான். படிக்காதவன் தினமும் கூலி வேலை செய்து பிழைக்கிறான். ஒரு கூலி தொழிலாளி உடல் உழைப்பு அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் பெறுகிறான். படித்தவன் சற்றே சிந்தித்து படிக்காதவர்களை வேலை வாங்குகிறான். எனவே படித்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒவ்வொரு நாளும் பணத்தின் தேவை அதிகரிக்கிறது. நம் தேவையை நிறைவு செய்ய ஒரு மனிதனிடமிருந்து நமக்கு தேவையானதை வாங்கிகொள்ள பணம் பயன்படுத்தபடுகிறது.
★பணம் சம்பாதிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை தேவைப்படுகிறது அந்த வேலை அவன் அறிவை பொருத்து உள்ளது. ஒருவரின் கல்வி திறனை வைத்து வேலை மற்றும் சம்பளம் நிர்ணயிக்கபடுகிறது. ஆசை நமக்கு அளவில்லை . எனவே நாம் பணத்திற்காக ஒரு வேலையை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் . பணத்தின் தேவை எப்பொழுது நிறைவடைகிறது என்றால் அது கேள்வி குறியே!!!!!!
★நாம் சேமித்து வைத்துள்ள பணத்தை செலவு செய்ய ஒரு பொருளை உற்பத்தி செய்து அது நம்மை ஈர்க்கும் படி செய்கிறோம்.
பணம்:
●●●●●
★ பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறோம். பணம் அதல பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்கள். பணம் என்பது மனிதனின் அடிப்படை தேவையில் ஒன்றாகும்.
★இந்த படிப்பு மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே உதவும். மனிதன் வாழ்க்கை முடிந்த பிறகு சேமித்த பணம், எதுவும் கூட வருவதில்லை. ஒரு மனிதனுக்கு பசி என்ற தேவை எழவில்லை எனில் யாரும் பணத்தை நாடி செல்ல மாட்டார்கள் . பசி என்ற ஒரு உணர்வு இருக்கும் வரை ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் என்ற அத்தியாவசிய தேவை இருந்து கொண்டே இருக்கும். பணம் என்பது அத்தியாவசிய தேவைதான். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையாக மாறிவிட கூடாது. மனிதன் ஆயுள் முழுதும் பணத்தை சம்பாதித்து கொண்டே இருந்தால் நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
★மனித பிறவி என்பது அரிதானது. மனதை சரியான முறையில் பயன்படுத்தினால் உயர்வு.மனதை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லையெனில் தாழ்வு. உடல் நலம்,மன நலம், நீள்ஆயுள், நிறை செல்வம், உயிர் புகழோடு வாழ்ந்து முழுமைப்பேரு அடைவதே மனித பிறவியின் நோக்கம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி
PM id: U8147466