நாம் அனைவரும் நன்றாகப் பேசுகிறோம், சம்பாதிக்கிறோமா?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நாம் அனைவரும் நன்றாகப் பேசுகிறோம், சம்பாதிக்கிறோமா?

Post by ஆதித்தன் » Tue Feb 10, 2015 5:25 pm

எல்லோரும் மிகவும் நன்றாகப் பேசுகிறோம் ... தினமும் 1 மணி நேரத்திற்கு மேல் ஒவ்வொருவரும் பேசுகிறோம். என்ன பேசுகிறோம்... ஏது பேசுகிறோம் என்பதனையும் தாண்டி... பணம் வேண்டும் என்று கூட தினம் 30 நிமிடத்திற்கும் மேல் எல்லோரும் பேசுகிறோம்.

பேசிப் பேசி அதற்கு உரு கொடுத்து சாதித்தவர்கள் பலருண்டு. அச்சாதனையாளர்களில் நீங்களும் ஒருவராக வேண்டும் என்றுச் சொன்னால்... பேச்சினை பேச்சோடு பேச்சாக காற்றில் பறக்க விடாமல், பறந்து வரும் பேச்சுக்களையும் உள்வாங்கி பேச்சுக்கு பேச்சாய், பொய்யாது சில காரியங்களையும் செய்திடப் பேச்சும் காகிதப் பணமாகி பாக்கெட்டுக்குள் அடங்கிடும்.

மனதில் எண்ணுவதனை எல்லாம் பேசினேன் பேசினேன் என்று கடந்து, எண்ணியதை எல்லாம் அடுக்கி எழுதினேன் எழுதினேன் என்றுச் சொன்னால், பணம் பணம்.

இருவருக்குள்ளோ... நான்கு நபர்களுக்குள் மட்டுமோ அடைத்து வைத்துக் கொள்ள பணம் பற்றியப் பேச்சு ஒன்றும் அத்தனை இரகசியமான தேடல் அல்ல, மற்றொருவர் தெரிந்தால் நமக்கு முன் முழுமையாய் அள்ளிடுவாரோ என்றுச் சொல்ல புதையலும் அல்ல. அதனையும் தாண்டிய தேவைக்குத் தேவை. குவிக்க குவிக்க தேவைக்கு அச்சடிக்கப்படும் அரசு கஜானாப் பணம்.

தேவை தேவை என்று தேடும் பணத்தினை வேலை வேலை என்று சொல்லியும்... தொழில் தொழில் என்றுச் சொல்லியும் ... சேவை சேவை என்றுச் சொல்லியும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். அதனை எழுதிப் பரப்ப பரப்ப அதிக பணம் பணம்.

பணம் வரும் வேலையில் வெட்டியாய் பேசும் பேச்சுக்கு இடமில்லை என்றுச் சொன்னாலும், பல வேளைகளில் வெட்டியாய் பேசித்தான் நறுக்கென்று கொத்துப் பணமாய் அள்ளிக் கொண்டோம் என்பதும் உண்மை.

ஒரு மருத்துவமனையில் எப்பொழுதும் பெரும் கூட்டம், இது எப்படி? கண்டிப்பாக அது ஒர் பேச்சால் தான் இருக்க முடியும். நீ சொல்லி நான் சொல்லி என்று அவர் கைராசி டாக்டர் என்ற கூடுதல் பட்டத்தினை பெற்றிருக்கலாம்.

பேச்சு பேச்சு... என்று பேசிப் பேசி பலரை நாம் பெரிய ஆளாக மாற்றிவிட்டிருக்கிறோம், நீங்களும் பெரிய ஆளாக மாற நிறைய திட்டங்களை பேசியிருக்கலாம்.

நீங்கள் பேசிய பேச்சுக்கள் ஒர் தெருக்குள்ளும் ஊருக்குள்ளும் திண்ணைப் பேச்சாய் முடங்கிப்போய் பெரிய ஆள் என்ற மாற்றத்தினை கொடுக்காமல் போயிருக்கலாம் அல்லது குட்டிச் சுவற்றில் அமர்ந்து பேசிக் காற்றில் கூட மறைந்திருக்கலாம்.

இனி அவ்வாறு இல்லாமல் பேச்சுக்களை எழுத்துக்களாக மாற்றுங்கள். இன்று இல்லாவிட்டாலும் நாளை எழும்பக்கூடிய நல்ல எழுத்துக்களாக எழுதுங்கள். மேடைப் பேச்சானாலும் அச்சானால் தான் மதிப்பு என்று தெரிந்திருக்க எழுதுங்கள்.

பெரிய ஆளாக ஆசை இல்லாவிட்டாலும் பணம் சம்பாதிக்க வேண்டும், நாளைய செலவுக்கு பணம் வேண்டும் என்ற உண்மை தெரிகிறது அல்லவா? அதற்காகவாவது எழுதுங்கள்.

உங்களுடைய எழுத்துகள், ஆன்லைன் வேலை என்பது நிஜம் நிஜம் என்று எங்கும் பேசும்படி இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் PayPal, PerfectMoney, BitCoin அக்கவுண்ட் வைத்திருக்கும் அளவிற்கு எட்டுத்திக்கும் ஒலிக்க வேண்டும்.

சிறிய பணியினைச் செய்து கூட்டணி அமைப்பின் மூலம் பெரிய தொகையினை இணையத்தின் மூலம் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அந்த கூட்டணியினை எப்படி உருவாக்குவது என்ற குழப்பம் மட்டும் இருந்து கொண்டே இருக்கலாம்.

இனி அந்த குழப்பத்தினை விட்டு ஒழியுங்கள். பேச்சினை எழுத்துகளாய் தீட்டினால் முடியும் என்பதனை நம்புங்கள்.

படுகை இதுவரையிலும் பலபேர்களுக்கு ஆன்லைன் வேலைப் பற்றிக் கற்றுக் கொடுத்துவிட்டது...இனிமேலும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதில் 30+ நபர்கள் ஆன்லைன் வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்.

சம்பாதிப்பவர்களில் எத்தனை நபர்கள், மேலும் அதனை உறுதிப்படுத்தவும், வருவாயினை அதிகப்படுத்தவும் எழுத்துக்களாக செய்கிறார்கள் என்றால் மிக மிகக் குறைவு.

30 நபர்கள் படுகையை சுற்றி வந்து ஆன்லைன் ஜாப் செய்வதன் மூலமே இவ்வளவு சம்பாதிக்க முடிகிறது என்றுச் சொன்னால்... 1000 நபர்கள் படுகையை சுற்றி வந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம், கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.

க்ளிக்சென்ஸில் மட்டுமே தினம் 10$ சம்பாதிக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங்க் மூலம் தினம் 100$ சம்பாதிக்க முடியும்.

நான் மட்டுமா பலனடைவேன்??? இல்லை. கண்டிப்பாக நீங்களும் பயன் அடையப்போகிறீர்கள். எழுத்து உங்களுடையதுதானே ஆகையால் கண்டிப்பாக பலன் உங்களுக்கே அதிகம், எழுதுபவர்க்கே அதிகம்.

ஒவ்வொரு நாளும் புதுப் புது ஆன்லைன் வேலைத் தளங்கள் வருவதனால்... அதில் ஒன்றினை முதலில் எழுதிவிட்டால்... உங்களுக்கு கீழ் 100 பேர் என்று உடனுக்கூடன் நபர்கள் இணைவதன் மூலம் ஒவ்வொருவரும் கைநிறைய சம்பாதிக்க முடியும்.

எழுதுங்கள் ... தினம் தினம் எழுதுங்கள்.

நான் எழுதுகிறேன் என்பது இல்லை. படுகை உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் வாசகர்களின் கவனம். ஆகையால், ஒவ்வொரு படுகை உறுப்பினர்களும் ஆன்லைன் ஜாப் என்பது நிஜம் நிஜம்... நானும் கண்டிப்பாக நிறைய சம்பாதிப்பேன் ... சம்பாதிக்கிறேன் என்று எழுத ஆரம்பித்தீர்கள் என்றுச் சொன்னால்... வாசகர்கள் உறுப்பினர்கள் ஆவார்கள். உறுப்பினர்கள் பணியாட்களாய் மாறுவார்கள்... பணி நடந்தால் கையில் பணம் பணம்.

எழுதுவது கடினமாக இருக்கிறது என்று நினையாதீர்கள், உடனே வருவாய் கொடுப்பதில்லை என்றும் வருத்தம் கொள்ளாதீர்கள். அந்த எழுத்து கொடுக்கும் வருவாய் என்பது நாம் செய்த கடின உழைப்பினைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

என்னுடைய ஒவ்வொரு பதிவும் 1$ என்ற எண்ணத்தோடு நிறைய தெளிவாக எழுதுங்கள்... கண்டிப்பாக அது நிஜமாகும்.

எழுத்து கைவசம் ஆகும் பொழுது, இணையதளத்தினை கைவசம் கொள்ளுங்கள், அது உங்களது வருவாயினை இரட்டிப்பு செய்யும்.

முதலீடே அதிக வருவாயினைக் கொடுக்கக் கூடிய ஒன்று. கொஞ்சம் கொஞ்சம் முதலீட்டினையும் செய்து முயற்சிப்பதற்கு தயங்க வேண்டாம். நாம் கொஞ்சம் முதலீடு செய்யும் பொழுது, நம்மோடு சேர்வோரும் முதலீடு செய்ய என்று பணம் பெருகத்தான் செய்யும்.

புதிய கோல்டன் உறுப்பினர்களுக்கு நான் தான் பதில் கொடுக்க வேண்டும் என்று காத்திராமல்... நீங்களும் பதில் சொல்லி நட்பு பாராட்டுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு கீழ் ஒர் நல்ல டவுன்லைனாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல டவுன்லைனாக கிடைத்தால் ஆயுளுக்கும் கிடைக்கும் தொகை மிக அதிகம்.

சிலர் பயிற்சிக்கான கட்டணம் பற்றி தேவையற்ற கருத்தினையும், ஆன்லைன் ஜாப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி நேரத்தினை வீணடிக்க வேண்டாம்... ஏனெனில் பலர் நம்மிடம் பதில் சொல்லச் சொல்லி நேரத்தினை வீணடித்துவிட்டு, ஒர் செண்ட் ... இரண்டு செண்ட் என்றுச் சொல்லி போய்விடுவதோடு...ஊர்ல நாலுபேரிடம் அதனையே பேசிப் பேசி.. நம்மை நாடி வருவோரையும் கெடுத்துவிடுவார்கள். ஆகையால் அவர்களுக்கு பதில் கொடுப்பதனைக் காட்டிலும், நான் சம்பாதித்த ஆதாரம் என்று வாங்கிய பண ஆதாரத்தினை மட்டும் காட்டிவிட்டால் போதும்.

இவ்வளவு எப்படி சம்பாதித்தார்கள் ... இவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் ... என்ற உணர்வு ஆன்லைன் ஜாப் பற்றித் தெரியாதவர்களைக் கூட கண்டிப்பாக ஆன்லைன் ஜாப் உலகிற்குள் தள்ளிவிடும். பின் தெளிய வைத்து தெரிவித்தால் கண்டிப்பாக நம்மோடு ஒருவராய் முயற்சிப்பவர்கள் வருவது உறுதி.

ஆனால், நாமும் அவரைப்போல் சம்பாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு தேடும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக எழுத வேண்டும். நான் ஆரம்பத்தில் ஒர் பைசா கூட சம்பாதிக்காமலே ஆன்லைன் ஜாப் பற்றி பல தன்னம்பிக்கைப் பதிவுகளை எழுதிய காரணத்தினால்... அதனையே மூலதனமாகக் கொண்டு அடுத்தடுத்து சம்பாதிக்க முடிந்தது.

எழுதுங்கள் ... ஒர் செண்ட் .. இரண்டு செண்ட் என்றுப் பார்த்து துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: நாம் அனைவரும் நன்றாகப் பேசுகிறோம், சம்பாதிக்கிறோமா?

Post by கிருஷ்ணன் » Tue Feb 10, 2015 8:51 pm

அருமையான பதிவு சார். :great: :great: :ros:

உண்மைதான்.கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் ஜாப்பில் எனது 50% வருமானம் ஆர்ட்டிக்கிள் ரைட்டிங் மூலம்தான் வருகிறது.ஆரம்பத்தில் 10000 பதிவுகள் என்ற டார்கெட்டினை படுகை வைத்த போது இது எப்படி சாத்தியமாகும் என்றுதான் நானும் தயங்கியுள்ளேன்.ஆனால் சுமார் 500 பதிவுகளைக் கடந்த போதே போதுமான வருமானம் வர ஆரம்பித்துவிட்டது.இப்போது ஆன்லைன் ஜாப் தளங்களில் மட்டுமே மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் ஆதாரங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறேன்.இது எனது பகுதி நேர வருமானமே,இது போக பங்குச் சந்தை,பொருட் சந்தை ,ரியல் எஸ்டேட்,வலைத்தள வருமானம் என எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டே இந்த வருமானத்தினப் பார்க்கத் தோதாக அமைந்தது ஆன்லைன் ஜாப்தான்.பத்தாயிரம் பதிவுகள் என்பதைத் தொடும்போது எவ்வளவு வருமானம் வர ஆரம்பிக்கும் என எண்ணிப் பாருங்கள்.நீங்களும் களத்தில் இறங்கி கலக்க ஆரம்பித்து விடுவீர்கள்.எப்போதும் பண ஆதாரங்களுடன் முதல் ஆளாக ஒரு புதிய தளத்தினை நீங்கள் அறிமுகப்படுத்திவிட்டால் போதும்.அனைவரும் உங்களை பின் தொடர்வார்கள்.

வீட்டிலிருந்தே வேலை,எந்த முதலாளியும் இல்லை,கேள்வி கேட்க ஆளில்லை,விடுமுறை பிரச்சினை இல்லை என எல்லா சௌகரியங்களையும் ஆன்லைன் ஜாப் கொடுப்பதால் சுயக் கட்டுப்பாட்டினை இழக்காமல் உங்கள் உழைப்பைக் காட்டுங்கள்.ஆன்லைன் என்பது ஒரு கடல் எல்லோருக்கும் மீன்கள் கிடைக்கும்.

ஒரு குட்டிக் கதையுடன் முடிக்கிறேன்.(அனைவருக்கும் தெரிந்த கதைதான் ஆனால் இங்கே அவசியம்)

ஒரு செருப்பு விற்கும் நிறுவனத்தின் முதலாளி தன் பணியாளரை அருகில் உள்ள கிராமத்தில் சென்று செருப்பு விற்பனைக்கான சர்வேயினை எடுத்து வரச் சொன்னார்.கிராமமோ ஆதிவாசிகள் அதிகம் வசிக்கும் கிராமம்.ஆனாலும் சற்று புதுமை விரும்பிகள்.முன்னேற வேண்டும் என ஆர்வமுள்ளவர்கள்.சென்ற பணியாளரோ வேலையில் அதிக ஆர்வம் இல்லாதவர்.என்னடா வேலை இது?தெருத் தெருவாக செருப்பு விற்பதும் ஒரு தொழிலா?சீக்கிரமே வேலையினை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்.கிராமத்திற்குச் சென்றவர் பகல் முழுவதும் கிராமத்தில் பொழுதினைக் கழித்துவிட்டு இரவில் வந்து முதலாளிக்குத் தந்த ஒரே ஒரு வரி ரிப்போர்ட்" அந்தக் கிராமத்தில் யாரும் செருப்பே அணிவதில்லை.எனவே விற்பனை வாய்ப்பே இல்லை".பணியாளரின் பதிலைக் கேட்ட மற்றுமொரு புதிய பணியாளர் முதலாளியிடம்"ஐயா! எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.நாளை நான் செல்கிறேன்"என்றார்.முதலாளியும் சம்மதித்தார்.

மறுநாள் அங்கு சென்ற பணியாளர் முதல் நாளே சுமார் 50 ஜோடி செருப்புகளுக்கு ஆர்டரைக் கையோடு கொண்டு வந்தார்.முதலாளிக்கு ஆச்சரியம்.இது எப்படிச் சாத்தியம்? அங்குதான் யாரும் செருப்பு அணிவதில்லையே? எனக் கேட்டார்.பணியாளர் சொன்ன அதே ஒரு வரி பதில்"அதுதான் நமக்குச் சாதகம்".அந்தப் பணியாளர் தன் திறமையால் பழமை விரும்பிகளான ஆதிவாசிகளை எப்படிப் புதுமைக்குள் புகுத்தியிருக்கிறார் எனப் பார்த்தீர்கள் அல்லவா? ஆன்லைன் ஜாப்புடன் இந்தக் கதையினை ஒப்பிட்டு உணருங்கள்.இன்று எல்லா ஆன்லைன் ஜாப் தளங்களிலும் இந்தியர்களின் சதவீதம்தான் அதிகம் உள்ளது.அனைத்துத் துறைகளின் எதிர்காலமே ஆன்லைனில்தான் என்ற நிலை வந்துவிட்டபோது ஆன்லைன் ஜாப் மட்டும் சாத்தியமல்ல என புலம்புகிறவர்களை ஒதுக்கிவிட்டு இறங்கிக் கலக்குங்கள்.வாழ்த்துக்கள்.
:rock: :rock: :rock: :rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நாம் அனைவரும் நன்றாகப் பேசுகிறோம், சம்பாதிக்கிறோமா?

Post by ஆதித்தன் » Tue Feb 10, 2015 9:49 pm

efgroups wrote::great: sir ....!
:thanks:
கிருஷ்ணன் wrote:

அருமையான பதிவு சார். :great: :great: :ros:

:thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”