நாங்க மட்டும் தான் பணம் வாங்குறோம், நீங்க வாங்கலையா???

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நாங்க மட்டும் தான் பணம் வாங்குறோம், நீங்க வாங்கலையா???

Post by ஆதித்தன் » Sun Dec 14, 2014 5:09 pm

படுகையில் ஆன்லைன் ஜாப் செய்து பேமண்ட் வாங்கிய சிலர் பேமண்ட் ப்ரூப் பதிவிடுகிறார்கள்.

ஆனால், படுகை உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது மிக அதிகம். அதனை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பேமண்ட் ப்ரூப் பதிவு என்பது மிகக் குறைவாக உள்ளது. ஏன் இவர்கள் பணம் வாங்கியச் செய்தியினை பதிவு செய்வதில் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை/.

நாம் பணம் வாங்கியச் செய்திகள் ஒவ்வொன்றினையும் பதிவு செய்தால் மட்டுமே வரும் புதிய உறுப்பினர்களுக்கு உற்சாகம் கிடைப்பதோடு, நம்பிக்கையாக பின் தொடர்ந்து செய்வார்கள்.

10 தளங்களில் நாம் வேலை செய்து கிடைக்கும் வருவாயினைக் காட்டிலும்.... ஒர் தளத்தில் நமக்குக் கீழ் 30 நபர்கள் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது அதிகம்.

ஆகையால் தான் நான் ஆர்ட்டிகள் ரைட்டிங்க் + பேமண்ட் ப்ரூப் ஆகிய இரண்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எனது பணியினைச் செய்து வருகிறேன்.

ஒர் தளத்தில் சேர்வது பெரிய விடயமில்லை.... அதிலிருந்து ஒர் குறைந்தப்பற்ற வருவாயாவது கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் அதனை பிறருக்கு அறிமுகம் செய்வதில் ஒர் அர்த்தம் இருக்கும்.

தினம் தினம் புதியவர்கள் படுகைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் எப்படி தனது பணியினைத் தொடங்குவது என்று தெரியாமல் பின் வாங்கிச் செல்கின்றனர் என்பதனைத் தவிர... பணம் சம்பாதிக்க வழியில்லை என்பது இல்லை.

எத்தனையோ வருவாய் வாய்ப்புகள் படுகையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றினை பார்க்க பொறுமையும் இல்லை... சரியான திட்டமிடுதலின்படி செய்யவும் புரியவில்லை... ஒர் சிலர்க்கு நல்ல வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துவது என்பதும் விளங்கவில்லை.

சுருங்கச் சொன்னால்... ஒர் குழுத் தலைவராக செயல்பட்டால் தினம் ரூ.1000 என்பது மிக எளிதான ஒன்று.

நீங்கள் தினம் தினம் பல சைட்களைத் தேடித் தேடி கண்டுபிடித்தாலும்.... அதன் அனைத்திலிருந்து வருவாய் வந்தாலும் ஒர் பெரிய தொகை என்பது எளிமையான ஆன்லைன் ஜாப்புக்கு பொறுந்தாது. அதே நேரத்தில் ஒர் குழுத் தலைவானகச் செயல்பட்டால் கண்டிப்பாக முடியும்.

அதற்கு, ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு விவரமான ஆர்ட்டிகள் எழுதி... புதியவர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும். அவ்வாறு புதியவர்களைக் கவர... நம்மிடம் நிலையான நல்ல ஆன்லைன் ஜாப் சைட்கள் மட்டும் இருந்தால் போதும். ஏனெனில் நமக்கே தெரியும் பெரும்பான்மையான தளங்கள் சரியாக பணம் வழங்குவதில்லை என்று.... அப்படியிருக்கையில், தவறான தளங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் நமது வாசகர்களை ஒர் பக்கம் இழக்கும் சூழல் ஏற்படலாம்.

ஒர் நல்ல தளத்தினைச் சுட்டிக்காட்டி 30 நபர்களை குழுவுக்குள் கொண்டுவந்துவிட்டால்... அவர்களைக் கொண்டே மற்றொரு தளத்திற்கும் குழுவினை உருவாக்கிவிடலாம்... ஆனால்.. அந்த அடுத்த தளம் நல்ல தளமாக இருக்க வேண்டும்.

இப்போதைக்கு நீங்கள் ஒர் சிறிய குழுவினை அமைத்துக் கொண்டால் படுகையில் சொல்லப்பட்டுள்ள சில ஆன்லைன் ஜாப் தளங்களில் வேலை செய்தாலே தினம் 2 டாலர்க்கும் மேல் வருவாய் பார்த்துவிடலாம்.

நான் தினம் 3 டாலர் வரை... இலவச ஆன்லைன் ஜாப் மூலமே பெற்றுவிடுகிறேன் .... அதிலும் சில நாட்கள் 10 டாலரினையும் தாண்டி வருவாய் வருகிறது. எல்லாமே முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்கும் இலவச ஆன்லைன் ஜாப் தளங்கள் தான்.


என்னைப் பொறுத்த வரைக்கும், /// 10 செண்ட் காசாக இருந்தாலும், செய்யும் பணிக்கு சரியாக கொடுக்கிறார்கள் என்றால் ஒகே... அப்படி ஒர் செண்ட்... இரண்டு செண்ட் என்று சேர்த்துத்தான் ... பின் க்ளிக்சென்ஸில் தினம் டாலர் கணக்கில் வருவாய் பார்க்கும் அளவில் உயர்ந்திருக்கிறேன். காரணம் 20 டவுன்லைன் மெம்பர்.

எனது டவுன்லைன் மெம்பர்களில் பலர் தொடர்ச்சியாக இல்லாமல் போய்விட்டாலும் ... எனது தொடர்ச்சியான பேமண்ட் ப்ரூப்பினைப் பார்த்து தினம் தினம் புதியவர்கள் இணைந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

எனக்கு கீழே டவுன்லைன் சேர்வதற்கு உறுதுணையாக இருப்பதும் பேமண்ட் ப்ரூப்தான் .... நான் அடுத்தடுத்து பேமண்ட் வாங்க துணையாக இருப்பதும் பேமண்ட் ப்ரூப்தான். நடுவில்.... கொஞ்சம் பணி வாய்ப்புகளை கொஞ்சம் சொல்லிட வேண்டும். அப்பொழுதுதான் கொஞ்சம் விவரமானவர்கள்...அப்பணிகளைச் செய்து... நமக்கு வருவாய் அமைத்துக் கொடுப்பார்கள்.

ஆகையால்... பேமண்ட் ப்ரூப் பதிவிடுவதனையும் .... ஆன்லைன் ஜாப் தளத்தில் எப்படி பணி செய்வது என்று பதிவிடுவது என்பதிலும் ஒவ்வொருவரும் அதிகம் கவனம் செலுத்துங்கள் ... கண்டிப்பாக தினம் ஆயிரம் சம்பாதிக்கலாம்.

அதிலும் குறிப்பாக, உங்களது பேமண்ட் ப்ரூப் தான் .... உங்களுக்கு அந்தப் பணியினைப் பற்றி தெரியும்... உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என்று பிறர் உங்களிடம் வர ஏதுவாக அமைகிறது. ஆகையால், உங்களுக்கு ஆன்லைன் ஜாப்கள் விவரம் தெரியும் என்பதனை பணம் வாங்கிய ஆதாரத்தினை உடனுக்கூடன் பதிவாகச் செய்து காட்டுங்கள் ... டவுன்லைன் குழுவினை உருவாக்குங்கள்.

வாழ்த்துகள்.
fredsolomon
Posts: 18
Joined: Thu May 26, 2016 8:54 am
Cash on hand: Locked

Re: நாங்க மட்டும் தான் பணம் வாங்குறோம், நீங்க வாங்கலையா???

Post by fredsolomon » Wed Jun 01, 2016 1:12 pm

வணக்கம் திரு .செல்வா ஆதித்தன்

இந்த கட்டுரை மிக நன்றாக உள்ளது,நன்றாக உங்கள் கருத்துகளை பதிவிட் டீர்கள்
இருந்தாலும் நான் என்னுடைய கருத்துகளை பகிர ஆசைபடுகிறேன் ..

பொதுவாக Online job ,Online business என்று வந்தால் வீட்டிளிருபவர்கள் தான் செய்கிறார்கள் மாற்று திரநா ளிகள் பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்,. நன்கு படித்தவர்கள் செய்வதில்லை அவர்கள் தங்கள் படிபிர்கேற்ப தங்கள் துறைகளை சார்ந்த வேலைகளை தேடி சென்று விடுகிறார்கள் குறப்பாக computer science மாணவர்கள் B .E மாணவர்கள் IT field சென்று கை நிறைய சம்பாதிக்கிறார்கள் மற்றும் வெளிநாடு சென்றும் கைநிறைய சம்பாதிக்கிறர்கள்.
இவளவு படிப்பு படித்து வீட்டில் நான் online job செய்கிறேன் என்றல் பெற்றோர்கள் சும்மா விடுவார்களா.

இரண்டாவது

online job செய்வதில் சொற்ப வருமானம் தான் வருகிறது நன்றாக சம்பதிபவர்களிடம் சம்பாதிக்க சொல்லி தாருங்கள் என்று கேட்டல் மறுக்கிறார்கள் இல்லையென்றால் 10$ அனுப்பு 30$ அனுப்பு 50$ எனக்கு பீஸ் குடுங்க என்று கேட்டல் என்ன செய்வார்கள் அந்த பணத்தை சம்பாதிகத்தான் உங்களை நாடுகிறார்கள் அதுக்கே அவர்கள் பணம் கேட்டால்.

மூன்றாவது

இதிலே இவளவு சம்பாதித்தேன் இதுதான் proof ,அதிலே அவளவு சம்பாதித்தேன் இதுதான் proof என்கிறார்கள் அந்த website பெயரை சொல்லி பதிவிட்டால் நன்றாக இருக்கும் அதை மறைத்து வைத்து இப்படி சம்பாதிக்க எனக்கு PM அனுப்புங்கள் என்கிறார்கள் அப்படி அனுபினால் ஒரு response கூட இல்ல இதனால்தான் இத்தளத்தில் மெம்பராக இருந்தும் active -ஆக இல்லை காரணம் அவர்களுக்கு யாரும் கண்டுகொள்வதில்லை அவர்களுக்கு அசையும் விட் டுபோய்விடுகிறது padugai க்கு திரும்ப எட்டிகூட பார்பதில்லை

நான்காவது

நானே உங்களிடம் PM அனுபிப் னேன் அதற்கு நீங்கள் response பண்ணவில்லை எண்ணை போல் எத்தனை நபர் இருப்பார்கள். உங்கள் padugai தலத்தில் ஒரு நான்கு அல்லது ஐந்து நபர்மட்டும் தான் மாற்றி மாற்றி உரையாடுகிறீர்கள் "நான் இதில் இவளவு $ சம்பாதித்தேன் அதில் இதில் இவளவு $ தான் சம்பாதித்தேன் சொல்கீறீர்கள் ஒழிய யாரும் புதிதாக வந்தபாடில்லை .... :wai: :wai: :wai: :ino: :ino: :ino: :( :(
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நாங்க மட்டும் தான் பணம் வாங்குறோம், நீங்க வாங்கலையா???

Post by ஆதித்தன் » Fri Jun 03, 2016 5:31 am

fredsolomon wrote:வணக்கம் திரு .செல்வா ஆதித்தன்

இந்த கட்டுரை மிக நன்றாக உள்ளது,நன்றாக உங்கள் கருத்துகளை பதிவிட் டீர்கள்
இருந்தாலும் நான் என்னுடைய கருத்துகளை பகிர ஆசைபடுகிறேன் ..

பொதுவாக Online job ,Online business என்று வந்தால் வீட்டிளிருபவர்கள் தான் செய்கிறார்கள் மாற்று திரநா ளிகள் பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்,. நன்கு படித்தவர்கள் செய்வதில்லை அவர்கள் தங்கள் படிபிர்கேற்ப தங்கள் துறைகளை சார்ந்த வேலைகளை தேடி சென்று விடுகிறார்கள் குறப்பாக computer science மாணவர்கள் B .E மாணவர்கள் IT field சென்று கை நிறைய சம்பாதிக்கிறார்கள் மற்றும் வெளிநாடு சென்றும் கைநிறைய சம்பாதிக்கிறர்கள்.
இவளவு படிப்பு படித்து வீட்டில் நான் online job செய்கிறேன் என்றல் பெற்றோர்கள் சும்மா விடுவார்களா.

இரண்டாவது

online job செய்வதில் சொற்ப வருமானம் தான் வருகிறது நன்றாக சம்பதிபவர்களிடம் சம்பாதிக்க சொல்லி தாருங்கள் என்று கேட்டல் மறுக்கிறார்கள் இல்லையென்றால் 10$ அனுப்பு 30$ அனுப்பு 50$ எனக்கு பீஸ் குடுங்க என்று கேட்டல் என்ன செய்வார்கள் அந்த பணத்தை சம்பாதிகத்தான் உங்களை நாடுகிறார்கள் அதுக்கே அவர்கள் பணம் கேட்டால்.

மூன்றாவது

இதிலே இவளவு சம்பாதித்தேன் இதுதான் proof ,அதிலே அவளவு சம்பாதித்தேன் இதுதான் proof என்கிறார்கள் அந்த website பெயரை சொல்லி பதிவிட்டால் நன்றாக இருக்கும் அதை மறைத்து வைத்து இப்படி சம்பாதிக்க எனக்கு PM அனுப்புங்கள் என்கிறார்கள் அப்படி அனுபினால் ஒரு response கூட இல்ல இதனால்தான் இத்தளத்தில் மெம்பராக இருந்தும் active -ஆக இல்லை காரணம் அவர்களுக்கு யாரும் கண்டுகொள்வதில்லை அவர்களுக்கு அசையும் விட் டுபோய்விடுகிறது padugai க்கு திரும்ப எட்டிகூட பார்பதில்லை

நான்காவது

நானே உங்களிடம் PM அனுபிப் னேன் அதற்கு நீங்கள் response பண்ணவில்லை எண்ணை போல் எத்தனை நபர் இருப்பார்கள். உங்கள் padugai தலத்தில் ஒரு நான்கு அல்லது ஐந்து நபர்மட்டும் தான் மாற்றி மாற்றி உரையாடுகிறீர்கள் "நான் இதில் இவளவு $ சம்பாதித்தேன் அதில் இதில் இவளவு $ தான் சம்பாதித்தேன் சொல்கீறீர்கள் ஒழிய யாரும் புதிதாக வந்தபாடில்லை .... :wai: :wai: :wai: :ino: :ino: :ino: :( :(

உங்களது பதிவிலேயே உங்களுக்கான பதில் உள்ளது. அதனை முதலில் நன்றாகப் புரிந்து கொண்டால் நல்லது.

இங்கு நான் கொடுத்திருக்கும் பதில் இரண்டு இரண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.... அவ்வப்பொழுது எழுதியதில் எழுதியதையே அடுத்த முறையும் எழுதியிருப்பேன்.. படித்து புரிந்து கொள்ளுங்கள்.... மற்ற பதிவுகளையும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். எனக்கு மீண்டும் படித்து வரிசைப்படுத்திக் கொடுக்க நேரமில்லை.

ஆன்லைன் ஜாப் என்பது ஒர் சிறுதொழிலுக்கு உகந்தது. ஆகையால், படித்திருக்க வேண்டும்.. இளமையாக இருக்க வேண்டும் என்றில்லை... நல்ல புத்திசாலித்தனுமும் அறிவுக்கூர்மையும் இருந்தால் போதும்...இலட்சம் இலட்சமாக, படித்தவர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பாதிக்க முடியும். படிக்காத எத்தனையோ பேர் தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால்,

1. நீங்கள் குறிப்பிட்டது என்பது தன்னை குறை கூறாமல், மற்றவர்களையும் தனக்கு இணையாக சேர்த்து மிகைப்படுத்திச் சொல்பவர்கள் கூற்று போல் இருப்பதாக அமைகிறது என்றாலும், உண்மை மாறாது. அறிவுக் கூர்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

2. யாருக்கு வேலை செய்யப் போகிறீர்கள்? அவரது ஆசை வருவாய்க்கு உழைத்துக் கொண்டு இருக்கும் நபர் ஒருவரிடம்.. எனக்கும் சம்பாதிக்க சொல்லிக் கொடுங்கள் என்றுக் கேட்டுக் கொண்டால்... அவரது இழப்பிடை யார் கொடுப்பது? பின்னாளில் கொடுக்கிறேன் என்று சொல்வதனை இவ்வுலகில் ஏற்றுக் கொண்டுள்ளார்களா?

கற்றுக் கொடுப்பதற்கு அறிவுதான் செலவிடப்படுகிறது. அது மிகை ஆகக்கூடியது என்றுச் சொன்னால்... ஏன் பயிற்சிக்கூடத்தில் வேலை செய்யும் அனைவரும் சம்பளம் இல்லாமல் வேலை செய்து கொடுக்கலாமே??? ஏன் செய்வதில்லை.... பயிற்சிக்கு மட்டுமே ஒவ்வொருவரும் இலட்சம் இலட்சமாக செலவு செய்கிறார்களே, ஏன்?

அதற்காக பணம் இருப்பவன் தான் படித்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும் என்று சொல்லவரவில்லை.

நான் சம்பாதிக்கிறேன் என்ற ஆதாரமும், எப்படிச் சம்பாதித்தேன் என்ற விவரமும், எந்தத் தளம் என்ற விவரமும் படுகையில் தெளிவாக எனக்கு ஒய்வு நேரம் இருக்கும் பொழுது கொடுத்துள்ளேன். அதனைப் படித்து செய்து கொள்ளலாம்.

நான் கட்டணமில்லாமல் தான் அனைத்துப் பதிவுகளும் படித்துக் கற்றுக் கொள்ள கொடுத்துள்ளேன். அதனைப் படித்தே செய்து கொள்ளலாம் என்னை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. பதிவில் சந்தேகம் இருந்தால் அதில் Reply Post கொடுத்துக் கேட்டுக் கொள்ளலாம்.

யார் வேண்டும் என்றாலும் கொடுக்கப்பட்ட தகவல்களை நன்றாகப் படித்து புரிந்து செய்யலாம். தெரியாததை பின்னூட்டமாக கேட்டால்.... பதிவர் தனக்கான ஒய்வு நேரத்தில் விரும்பினால் சொல்லித் தருவார்.

இங்கு இருக்கும் பதிவுகள் அனைத்தினையும் படிக்க ஆகும் நேரத்தினை உங்களால் ஏன் செலவு செய்ய முடியவில்லை??? ஒர் நாளில் படிக்க முடியவில்லை என்றால்.. 10 நாள் எடுத்துக் கொள்ளுங்கள்... இல்லை, 1 வருடம் எடுத்து நன்றாகப் படித்து புரிந்து செயல்பட்டு வருவாய் பார்க்கப் பாருங்கள்.

உங்கள் நேரத்தினை செலவழித்து கற்றுக் கொள்ள விரும்பாமல், ஏன், அடுத்தவர் தன் நேரத்தினை செலவழித்து உங்களுக்கு உடனே கற்றுக் கொடுத்திட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?

தன் நேரத்தினை முதலில் இலவசமாகக் கொடுக்கப் பழகுங்கள்... மற்றவரது நேரத்திற்கு ஆசைப்படாதீர்கள். அவரவர்க்கு என்ற ஆசைப்படி அவரவர் நடந்து கொள்வார்.. அதனை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தன் ஆசைக்கே மற்றவர்கள் செயல்பட வேண்டும் என்பது தவறான கொள்கை.

பீஸ் கேட்டால் கொடுங்கள்... இல்லை என்றால் தவிர்த்து செல்லுங்கள்.. இதில் பீஸ் கேட்பது தவறு என்பது இல்லவே இல்லை. அவர்க்கான நேர மதிப்பினை அவர் கேட்கிறார், அது சரி எனப்பட்டால் கொடுங்கள்... தகுதியில்லாதவர்க்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தகுதியினை சரியாக ஆராய்வதும் உங்கள் கடமை.. இதில் ஏமாற்றுவதும் ஏமாறுவதும் நிகழ்வாய் காணும் பொழுது ஏதும் இல்லை.


3) அவ்வாறு PM தான் அனுப்வேன் என்பவர்களிடம் நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு அவர் பதில் தரவில்லை என்றால் அடுத்து அவர்க்கு PM செய்வதனை தவிர்த்துக் கொள்ளலாம்... வருத்தப்பட ஏதுமில்லை. அவர் அவரது வருவாய் காரியத்திற்காக போயிருப்பார்..

இருப்பதனை விட்டு, இல்லாததை மட்டுமே ஆசையாகக் கொண்டால் ஏமாற்றம் கிடைக்கலாம். இதில் அவர் தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர... எனக்கு எந்தவொரு பிழையும் தெரியவில்லை.

ஆன்லைன் ஜாப் என்பதன் என்ற அடிப்படை அனைத்தினையும் நான் முழுமையாக படுகையில் கொடுத்துள்ளேன். அதனைப் படித்துக் கற்றுக் கொள்ள விரும்பாதவர், நேரடியாக காசு கொடுக்கும் தளத்தில் தான் நான் செய்வேன் எனக்கு காசு வரவேண்டும் என்று நினைத்து ஒடுவதில், ஏமாற்றங்கள் பலவற்றினை சந்திக்கத்தான் நேரிடும்.. இதில் ஆசை குறையுது ஆர்வம் குறையுது என்பதற்காக, உங்களுக்காக யாருமே இங்கு இல்லை.

எப்பொழுது நான் இவ்வளவு பதிவுகளை இலவசமாகக் கொடுத்தும், அதன் மதிப்பு தெரியாமல்... எனக்கு நேரடியாகத்தான் சொல்லித் தர வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டால்.... எவ்வாறு தனித்தனியாக என்னால் சொல்லிக் கொடுக்க முடியும். அதிலும் எல்லோருக்கும் இலவசமாகத்தான் வேண்டுமாம். ஆனால் கொடுத்ததை வாங்க மாட்டார்கள். கேட்பதனைத்தான் கொடுக்கணுமாம்...

இல்லாத என்னிடம் கேட்பதனால் கேட்பது கிடைக்காது. இருப்பவரிடம் கேளுங்கள் ஒர் வேளை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்.


4) கண்டிப்பாக பதில் கொடுக்காமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அர்த்தமில்லா கேள்விக்கு பதில் கொடுப்பதில் எந்தவொரு பலனும் இல்லை. என்னை தனிமடலில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவும் இல்லை.... திறந்தவெளியில் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தப் பழகுங்கள்.

உங்களுக்கு நான் சொல்லிக் கொடுத்தால் கண்டிப்பாக நீங்கள் சம்பாதிப்பீர்கள் என்று நம்பும் அளவிற்கு செயல்பட வேண்டும் என்று படுகையில் பயிற்சிப் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை செய்ய உங்களுக்கு நேரமில்லை. கேள்வி கேட்பதற்கும்... உங்கள் கேள்விகளுக்கு மட்டுமே பதில் வேண்டும் என்று கேட்பதற்கும் தெரிகிறது. ஆனால், அந்த கேள்விகளுக்கான விடைகள் தான் இப்படுகையில் எங்கும் நான் கொடுத்துள்ள பதிவுகள் என்று புரியவில்லை.

நீங்கள் எனக்கு கீழ் வேலை செய்கிறீர்கள்... அதற்கு ரெபரல் கமிஷன் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்க, இது ஒன்றும் கையிலிருக்கும் பணத்தினைக் கொடுப்பதல்ல. இப்படித்தான் பணத்தினைக் கொடுங்க என்று எளிதாகச் சொல்லிக் கொடுக்க.

இது பணி. பணிக்கு போதிய அடிப்படிய கற்றலும் அறிவும் இருக்க வேண்டும். இதனை புரிந்து கற்று அறிவினை வளர்க்கவும் தகுதி இருக்க வேண்டும். இது எல்லோர்க்கும் இருப்பதில்லை என்பதனை அடிப்படை பள்ளியிலேயே தெளிவாக காண்பிப்பதனால் தான், கல்லூரியில் கூட நீங்கள் படிச்சி நிறைய சம்பாதிப்பீர்கள் எங்களுக்கு கொடுப்பீர்கள் என்று எந்தவொரு கற்பிக்கும் நிறுவனமும் மாணவர்களை நம்புவதில்லை... இங்கு நீங்கள் சொல்லித்தாருங்கள் என்று கேட்கும் பொழுதே மாணவர் ஆகிவிடுகிறீர்கள் என்பதனை புரியும் என நம்புகிறேன்.

ஆன்லைன் பணிகள் என்பதில் பலகட்ட அறிதலும் புரிதலும் இருக்கிறது. இதனைக் கற்றுக் கொண்டால்தான் தினம் ஆயிரம் பல்லாயிரம் என்று சம்பாதிக்க முடியும்.

நானும் செய்வேன் என்று சொல்லிக் கொண்டாலும், சொல்லிக் கொடுப்பதனை செய்ய முடியுமா முடியாதா என்பதனை அறிந்து கொள்ளத்தான் படுகையில் பயிற்சிப் பணிகள் எனக் கொடுத்துள்ளேன். அதில் ஒன்றினைக்கூட செய்ய முடியாத நபர்க்கு, நான் என் நேரத்தினை வீணடித்து சொல்லிக் கொடுப்பதனால் எனது வருவாய் இழப்புதான் நடக்குமே தவிர வேறொன்றுமில்லை. இதனை நான் என் அனுபவத்திலேயே கற்றுக் கொண்டுவிட்டேன்... மீண்டும் ஒவ்வொருவருக்காக PM message, email என அவர்க்கு என்று தனித்தனியாக 6 மாத படிப்பினை கற்றுக் கொடுக்ககூடிய நிலையில் நான் இல்லை.

அவ்வாறு அவரையே பின் தொடர்ந்து ஒவ்வொரு கேள்விக்காய் பதில் என படுகையில் சேரும் ஒவ்வொரு நபர்க்கும் தனித்தனியாக பதிலே கொடுத்துக் கொண்டிருந்தால். .... எல்லார்க்கும் நல்லா பதில் கொடுத்துக் கொண்டே இருக்கலாம்... அதுவும் அடிப்படை பயிற்சிகூட செய்யாத நபர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அவ்வாறு உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதனால் என்ன வருவாய் வரும்? அப்படி வருவாய் இல்லாமல் என்னால் எப்படி இந்த நெட் உலகில் உலா வர முடியும்??

எல்லோரும் வருவாய்க்கா உழைக்கும் பொழுது, தன் நேரத்தினை செலவழிக்கும் பொழுது இவ்வாறு வருவாய் இழப்பின் சூழலில் கட்டணமில்லாமல் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மற்றொருவர் விரும்புவது என்பதும் பெரிய தவறு.

கற்றுக் கொடுத்தால் சம்பாதிக்க முடியும் என நம்புபவர், தான் கற்றுக் கொடுப்பவரின் திறனை ஆராய்ந்துவிட்டு அவர்க்கான கட்டணத்தினைக் கொடுத்து கற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.... இதனைத்தானே ஆதிகாலத்தில் இருந்தே குரு தட்சணை என்று கொடுத்து கற்றுக் கொள்கிறார்கள்.

இங்கு மட்டும் சொல்லித்தர பணம் கேட்கிறார்கள் என்று சொல்வதில் என்ன இருக்கிறது?


ஆன்லைன் ஜாப்னா.... வாப்பா.... அந்த செங்கலை எடுத்து இந்தப்பக்கம் அடிக்கி வை என்பது போன்று எளிதானது என்றால்..... அட்ஸ் கிளிக் பண்றது... பிட்காயின் கலெக்ட் பண்றது என்று இருக்கிறது.. அதனை தெளிவாக விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.. பார்த்து கற்றுக் கொண்டு செய்யலாம்.

அதற்கும் மேல் சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால், அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்காகத்தான் இங்கே நிறைய கட்டுரைகள் கொடுத்துள்ளேன்.. அவற்றினைப் படித்து செயல்படலாம்.

எல்லாத்தையும் விடுத்து, எனக்கு தனியாக ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுங்கள் என்பதனால் அந்த நபரின் நேரம் விரயம் ஆகிறது என்பதனோடு, அந்த நேரத்தில் அவர் எவ்வளவு வருவாய் எடுப்பார் என்பதனையும் சிந்திக்க வேண்டும்.

உங்களுக்கு வேண்டும் என்றால், ஒர் 5 நிமிடம் பதில் சொல்லக்கூடாதா என்று தோன்றும்... அந்த 5 நிமிடத்தால் மனம் எத்தனை மாற்றம் அடையும் என்பது உங்களுக்குத் தெரியாது... அவர் தனது பணியில் வைத்திருந்த சிந்தனைச் சிதறலால் எத்தனை பாதிப்பு ஏற்படும் என்பதும் உங்களுக்குத் தெரியாது.

இந்த ஜனவரி மாதத்தில், எவ்வளவோ செய்ய மனதில் தயார் செய்து வைத்திருந்தேன்... ஜஸ்ட் ஊர்க்கு என்று கொடைக்குப் போனதில்.... நான் செய்ய தயார் செய்து வைத்திருந்த அத்தனையும் மனதில் இல்லாமல் போனது. இப்படித்தான் மற்றொரு நபர் தேவையில்லாமல் குறிக்கிடும் பொழுது மாற்றம் ஆகிவிடும்... இந்த இழப்பு உங்களுக்குத் தெரியாது.

ஒவ்வொருவருக்கும் தன் விருப்பம் மட்டுமே தெரிகிறதே தவிர, எதிஅவர் விருப்பத்திற்கும் நாம் உகந்து செல்ல வேண்டும் என்று தெரியாதது வியப்பிலும் வியப்பு.

இந்தப் பதிவில் இது சொல்லப்பட்டிருக்கிறதா... அதனைப் பற்றிக் கேட்டோமா என்றால் ஒகே.... தேவையில்லாமல் அது இது என்று கேட்பவர்கள், தனக்கும் தெரியாது.... தான் யாரிடம் கேட்கிறோம் என்று அவரது மதிப்பும் தெரியாது.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்...

படுகையில் இலவசமாக தேவையான அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தனையையும் கொடுத்தவன் நான் தான்... மேலும் நான் எனது ஒய்வு நேரத்தில் பல பயனுள்ள தகவல் கொடுத்து வருகிறேன். அதனை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், இங்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் என்பவை ஆயிரம் ஆயிரமாய் கட்டணம் கட்டி படிக்கப்படுவதனைக் காட்டிலும், மிகவும் பயனுள்ளத் தகவல்களே எந்தவொரு கட்டணமும் இல்லாமல் படிக்கக் கிடைப்பதோடு, சரியான கேள்விக்கு பதிலும் கொடுத்து உதவவும் நிகழ்வில் உள்ளோம்.

அவசியம் மற்ற கேள்விகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும், தவிர்க்கப்படும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”