ஆன்லைன் ஜாப் தோல்விக்கு காரணம் கட்டுப்பாடற்ற சுதந்திரம்!

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் ஜாப் தோல்விக்கு காரணம் கட்டுப்பாடற்ற சுதந்திரம்!

Post by ஆதித்தன் » Tue Sep 04, 2012 7:47 pm

ஆன்லைன் ஜாப் செய்பவர்கள் பலர் தோல்வியுற்று வரும் வேலையில் அதற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டியது, ஆன்லைனில் வெற்றி தேட விரும்புவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதற்காகவே இன்று சிறிது நேரத்தை ஒதுக்கி, தோல்விக்கான காரணங்களைப் பற்றி சிந்தித்து பார்த்த பொழுது கிடைத்த காரணங்கள் இரண்டு 1. கட்டுப்பாடற்ற சுதந்திரம் மற்றும் 2. முடியாமை.

பெரும்பான்மையான ஆன்லைன் ஜாப்களில் இதுதான் நேரம், இந்த நேரத்தில் நீங்கள் இந்த பணியினைச் செய்து முடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்படுவதில்லை. கிடைக்கும் 24 மணி நேரத்தில் எந்த நேரத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அல்லது வாரத்தில் கிடைக்கும் பொழுதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும், நம்மை கண்டு கொள்வதே இல்லை. என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும், நமக்கு பயன் கொடுப்பதாக இருந்தால் அதனை ஏற்றுக் கொண்டு பணம் கொடுப்போம், இல்லாவிட்டால் தள்ளிடுவோம் என்பதுதான் ஆன்லைன் ஜாப் கொடுக்கும் தளங்களின் பாங்கு.

அப்படி இருக்கும் பொழுது, ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களின் எதிர்பார்ப்பை நாமே முன்வந்து பூர்த்தி செய்யும்படி பணியினைச் செய்தால் பணம் கிடைக்கும், இல்லாவிட்டால் இல்லை. இப்படித்தான் எல்லா ஆன்லைன் ஜாப் தளங்களும் என்று கூடச் சொல்லிவிடலாம். இதற்கு விதிவிலக்கான தளங்களை நான் பார்த்தது இல்லை. சம்பளம் ரீதியாக சேர்த்துக் கொண்டால் கூட, சில மாதங்களுக்குள் தேவையான தங்களது திறமையை வெளிப்படுத்த தவறினால், கலட்டி விடப்படுவீர்கள் என்பதும் நாம் அறியாதது இல்லை. ஆகையால், ஆன்லைன் ஜாப் என்பதில் நாம் விரும்பும் நேரத்தில் பணி செய்தாலும், செய்யும் நேரத்தில் அந்த தளம் நோக்கும் பணியினைச் செய்துவிட வேண்டும். இல்லாது நம் விருப்பப்படி எதையாவது செய்து வைத்தால், செய்தவையில் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை தள்ளிவிடுவார்கள். கடைசியில் நாம் அவ்ளவு செய்தோம், ஒன்றும் கிடைக்கவில்லையே!!! என்றால் ஏமாற்றம் என்பது நாம் கொண்டதே தவிர அவர்கள் கொடுத்தது இல்லை. குறிப்பாக, கூகுள் அட்சன்ஸ் எனப்படும் மிக அதிக வருவாய் தரும் பணியில் கூட அப்படித்தான். நான் இத்தனை மாதம் கஷ்டப்பட்டேன்... இவ்ள நேரம் கஷ்டப்பட்டேன்.. ஆனால், ஒர் பணமும் வரவில்லை என்று ஆதங்கம் படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது... அதாவது, 95-ல் தொடங்கிய ஆன்லைன் ஜாப்பில் இறங்கியவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என்பதால் இன்றும் பழையதை மறக்காமலும்...நாளும் புதியதாய் ஆன்லைனில் உலகத்திற்குள் புகும் புதியவர்களாலும்... ஆன்லைன் ஜாப்பில் தோல்விதான்/ ஏமாற்றம் தான் கிடைத்தது என்று சொல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதைப்போல், வெற்றியாளர்களும் இருக்கிறது என்பதும், ஆன்லைன் வருவாய் தொழிலையே அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் விதமாக செய்யும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகையால் உண்மை, நீங்கள் சரியாக தங்களது பணியினைச் செய்யவில்லை என்பதுதான் சரி.

படுகை.காம்-ல் நீங்கள் வருவாய் பார்க்க கோல்டு மெம்பராக சேர்ந்தாலும் சரி, இங்கும் உங்களுக்கு மிகையான சுதந்திரம் வழங்கப்படுகிறது. அதாவது, ஏன் இன்று படுகைக்கு வரவில்லை என்றோ! ஏன் இன்று பதிவிடவில்லை ஏன்றோ! ஏன் இப்பணியினைச் செய்யவில்லை என்றோ!! இப்படித்தான் செய்ய வேண்டும் என்றோ!! எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை. ஆனால், நீங்கள் இவ்வாறு செயல்பட வேண்டும் என்று பயிற்சிப் பணிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி தாங்களே முன்வந்து சரியாக செய்து பண வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

யாருமே கேட்கவில்லை என்பதற்காக, எந்தவொரு பதிவும் செய்யாமல் இருந்தாலும் நமக்குத்தான் பாதிப்பு!
பதிவுகளைத் தாறுமாறாக, அர்த்தமற்று செய்வதனை யாரும் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக காப்பி பேஸ்ட்டாக செய்துவிட்டுச் செல்வதும் நமக்குத்தான் இழப்பு. இவ்வாறக பாதிப்புகளையும் எடுத்துச் சொல்லி, இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று சொல்வதும் ஆன்லைன் ஜாப் பயிற்சிப் பணிகள். ஆகையால் பயிற்சிப் பணிகளை தெளிவாகப் படித்துவிட்டு செயல்பட ஆரம்பிக்க வேண்டும். என்னை தொடர்பு கொள்வோரையும் அதனையே சொல்கிறேன், ஆனாலும் புரிந்து கொள்ளாமல் ஏதோ எதிர்பார்த்து ஏமாறுவதனை பார்க்கும் பொழுது, அது அவர்களுது முடியாமை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதாவது பயிற்சிப்பணிகளுக்கிடையே, ஏதேனும் புரியவில்லை, அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள உதவிக்களம் இருக்கிறது. ஆனால், அவர்கள் எதனையும் பயன்படுத்திக் கொள்வதில்லை. தனக்கு எல்லாம் தெரியும் என்று ஏதோ செய்கிறார்கள், எதனையோ தாமே முடிவு செய்து வெளியேறுகிறார்கள். சில நேரம், இப்படி வேண்டாம், இவ்வாறு செய்யுங்கள் என்று சொன்னாலும் சிலர் கேட்பதில்லை, அவர்களது ஆசையின் தேடலில் போக்கிலே செல்வதும் உண்டு. இது எல்லாம், படுகை மீது கொண்டுள்ள, அவ நம்பிக்கையும், தன் உழைப்பில் நம்பிக்கை இல்லாத முடியாமையுமே ஆகும்.

முடியாமை என்பது எல்லோர்க்கும் உண்டு. என்னால் கூட எனது பழைய படுகையை சரி செய்து கொண்டு வர முடியவில்லை. அதற்காக, என்னால் எது முடியும் என்று பார்த்து செயல்படாமல் இல்லை, இழந்ததை மீட்பு செய்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அதைப்போல், நம்மால் என்ன முடியும் என்று செயல்பட வேண்டும். முடியாத ஒன்றிற்காக ஆசைப்பட்டு, தோல்வி என்று நம்மை நாமே இழந்துவிடக்கூடாது. நம்மால் இது முடியும் என்று தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும், அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும். இது ஆன்லைன் ஜாப் என்பதற்கு மட்டும் அல்ல, எல்லாத்துறைக்கும் அதே தான் இலவச அறிவுரை.

அடுத்ததாக சுதந்திரம்!
ஆன்லைன் ஜாப்பில் மிக முக்கியமே சுதந்திரம் தான். எனக்கு என்ன தோன்றுகிறதோ! அதனைச் செய்கிறேன். இன்று எதுவும் பதிவிட விருப்பம் இல்லை என்றால் நண்பர்கள் இருந்தால் பின்னூட்டமிட்டு மகிழ்கிறேன். எவரும் இல்லை என்றால் வெளியேறி பேஸ்புக்கிற்கு சென்றுவிடுகிறேன். அதற்காக என் பணியினை மறப்பதில்லை. கண்டிப்பாக ஒர் புதிய பதிவை இட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஒர் கடமையாக செய்து வருகிறேன். அதைப்போல் பிறருக்கு உபயோகமாக இருக்கும் ஒர் சிறப்புத் தொடரை வழிநடத்த வேண்டும் என்று செயலாற்றுகிறேன். இவ்வாறு நான் பணிக்காக நான் ஒதுக்கும் நேரம் ஒர் நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே! அதே நேரத்தில் இதுதான் செய் என்று சொன்னால் தெரியாததை எப்படி என்னால் செய்ய முடியும்? ஆகையால் எனக்குத் தெரிந்ததை அந்த மூன்று மணி நேரத்தில் செய்கிறேன். அப்படி செய்தாலும், அதனையும் பயன் கொடுக்கும் வகையில் விளம்பரம் வாயிலை அமைத்திருக்கிறேன். அவ்ளதான். ஆக நானும் சுதந்திரமாகத்தான் சுயகட்டுப்பாடோடும், இந்த மாதம் இவ்வளவு வருவாய் எடுக்க வேண்டும் என்ற ஒர் நோக்கத்தோடும் செயல்படுகிறேன்.

அதைப்போல் நீங்களும், உங்களுக்குப் பிடித்தமான பணியினைச் செய்வதோடு, கண்டிப்பாக இன்று செய்ய வேண்டும், இவ்வளவு வருவாய் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடும் செயல்பட்டால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். இந்த சுதந்திரத்தை நம் சுயகட்டுப்பாடுடன் தான் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, படுகை விதிக்க வேண்டும் என்பதை நானே எதிர்க்கிறேன்.

உண்மையாக சரியாக பயிற்சிப்பணிகளை ஒர் முறைக்கு தெளிவுறக் கற்று செயல்படுங்கள், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

:thanks:
வெங்கட்
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப் தோல்விக்கு காரணம் கட்டுப்பாடற்ற சுதந்திரம்!

Post by வெங்கட் » Thu Sep 08, 2016 7:11 pm

மிகவும் உண்மை.

நான் ஏற்கனவே இன்னொரு பதிவில் கூறியுள்ளேன். இதுபோன்ற கட்டுப்பாடு இல்லாத நிலையில் நம்மை நாம்தான் சூப்பர்வைஸ் செய்ய வேண்டும்.

ஒரு சிறிய டைரி அல்லது நோட்டுப் புத்தகத்தில் அன்றன்றைய இலக்குகளை நிர்ணயித்து, நாள் முடிவில் நமது செயல்பாடுகளை நாமே கண்காணித்து வந்தால் நல்ல பலன் காணலாம்.

ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு பிறர் கண்காணிப்பின்கீழ் வேலை செய்துதான் பழக்கம். என்ன செய்ய?
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”