[youtube]https://www.youtube.com/watch?v=Z5FBZvUdPWE[/youtube]
மாதச் சம்பளத்தில் இருக்கும் நபர்களே, கருப்புப்பணம் என்று விவதாம் செய்து அரசின் மறைமுக நடவடிக்கை தெரியாமல் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் மாதச் சம்பள உழைப்பாளிகளே!! தற்போதைய அரசு நடவடிக்கையால் ஆபத்து என்பது உங்களுக்குத்தான். இப்போது வேண்டும் என்றால், விவசாயிகளும் சிறு வணிகர்களும் பாதிக்கப்பட்டது போலவும் தெரியும்., ஆனால் உண்மை விலை குறைச்சலாக வேண்டும் என்றுச் சொல்லி நீங்களும் தனக்கு அடிமையாகவேண்டும் என்று ஆதிக்கச் சக்தியும் சேர்ந்தே விவசாயிகளை விலை கொடுக்காமலும், நீர் ஆதாரத்தினை வழிப்படுத்தாமலும் அழித்தீர்கள், அடுத்ததாக தற்பொழுது சிறுவணிகர்கள் பாதிக்கப்படும் பொழுது வரி கட்டாதவர்கள் என்று ஏளனமாகப் பார்த்து உங்களுக்கான நன்மையாயகவே வரி என்பதனை பிடித்தம் செய்யாமலே குறைந்த விலையில் கொடுத்தவர்களை தவறுகாக புரிந்து கொண்டு, தற்பொழுது அவர்களை ஒழிக்கும் திட்டமான வங்கிக்கணக்கு பரிவர்த்தனை என டிஜிட்டல் உலகுக்குள் பணத்தடை மூலம் அழைத்துச் சென்று ஒர் சில முதலாளிக்குள் கைக்குள் ஓப்படைப்பதனால், பாதிக்கப்படப்போவது நீங்கள்தான்.
ஏனெனில் சிறுவணிகர்கள் அடிப்படை உண்மையான விவசாயித்திற்குள் தெளிவாக இறங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு அரசியல்வாதிகளின் ஏமாற்றும் புரியும். அப்படி விவசாய பொருளை பணத்திற்கு மாற்றாமல் விட்டால் உங்கள்பாடு?
ஊழல் என்றும் வராக்கடன் என்றும் சொல்லும் பணம் எல்லாம் ஊழியர்களான உங்களுக்கே கொடுக்கப்பட்டது என்று கம்பெனி முதலாளிகளும், அரசியல்வாதிகளும் நன்றாக அறிந்தே கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியதனை திரும்ப கொடுங்க என்று திரும்பி வாங்கிக் கொண்டார்கள்.. மற்றப்படி அவர்களிடம் ஏதும் இல்லை .. நீங்கள் அவர்களுக்கு வேலையாட்களாக இருக்கும் வரை தேவையும் இல்லை.
ஏன்னா.. உங்களுக்கு வேலை கொடுப்பதற்கும், சம்பளம் கொடுப்பதற்கும் தானே, அத்தனை பெரிய கம்பெனி, அத்தனை பெரிய ஆடம்பரம்.. எல்லாத்தாக்கும் கடன் வாங்கி செய்வாங்க, கடன் வாங்கியே எல்லாம் செய்துக்குவாங்க.. அவங்களுக்கு பணம் எதற்கு?? பின்னே தள்ளுபடியும் செய்துக்குவாங்க!
உங்களுக்கு சம்பளம் கொடுக்க என்று பணம் சேமித்தவர்கள் உண்மை நிலையை ஒர் சில நாட்களில் புரிந்து கொள்வார்கள், அப்பொழுது அவர்கள் பண ஆசையினை விடடொழிந்து விவசாய ஆதாரத்தினை செய்துவிட்டால்.. விவசாயித்திற்கான நீரை கேட்காமல், வேலை என்று அடிமையான உங்கள் நிலைமையே அடுத்த 10 வருடத்தில் மிக்கவும் மோசமாகப் போகிறது.
உஷார் ... பெரிய கம்பெனி என்று வேலை செய்து கொண்டு சம்பளம் வாங்குபவர்களே உஷார்.. அடுத்து மக்கள் பணத்தினை மறந்துவிட்டால் வங்கிக்கு ஏதும் வரா! கடனும் இரா! சம்பளமும் தேரா!
வங்கிகளை மக்கள் ஒழிப்பது உறுதி
பெரிய கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked