Page 1 of 1

அவனவன் உபஜீவனம் செய்து ஜீவித்திருப்பதற்கு வேண்டியதான அவனவனுடைய சொந்த சொத்தை அவனவன் தானே திருடி நாசம் செய்வானா?

Posted: Fri Dec 06, 2019 2:44 am
by marmayogi
சுவாமி! அவனவன் உபஜீவனம் செய்து ஜீவித்திருப்பதற்கு வேண்டியதான அவனவனுடைய சொந்த சொத்தை அவனவன் தானே திருடி நாசம் செய்வான?

ஆம்! நாசம் செய்கிறான்.

உலகத்தில் இருக்கிற சர்வ ஜீவிகளும் அவரவர் என்றென்றைக்கும் உபஜீவனம் செய்து ஜீவித்திருப்பதற்கு வேண்டியதான சொத்தை அவரவர் திருடி நாசம் செய்து கொண்டிருப்பதாலாகும் செத்துப் போகின்றதற்கு காரணம் ஆகின்றது.

அது எப்படி என்றால் இப்பொழுது உலகத்தில் இருக்கின்ற சர்வ ஜீவிகளும் நிரம்பவும் ஆக்ரஹம் அதாவது ஆசைப்படுகின்றதும், ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றதும் மைதுனத்திலாகும் அதாவது ஸ்திரீ புருஷ சேர்க்கைக்காகும்.

எனில் உலகத்தில் எவ்வித தொழில் செய்யும் பொழுதும் மனம் அதில் நில்லாமல் பின்னம் பின்னமாய் அதாவது விட்டு விட்டு ஓடிக்கொண்டிருக்கிறது

ஆனால் ஸ்திரீ புருஷ சேர்க்கை சமயத்தில் மனம் யாதொன்றிலும் செல்லாமல் அதாவது காதுகளால் கேட்டறிவதற்கோ, கண்களால் பார்த்தறிவதற்கோ, மூக்கினால் நுகர்ந்தறிவதற்கோ, நாவினால் சுவைத்தறிவதற்கோ,தொக்கினால் அதாவது தோலினால் தொட்டறிவதற்கோ ஐந்து விதமாய் வெளியினுள்ளில் செல்லாமல் ஜீவனோடு சேர்ந்து தன்னுள்ளில் அடங்கி தன்னுள்ளில் கூடி மேலும் கீழுமாய் நடனம் அதாவது கதாகதம் செய்து கீழ் மேலாக சலித்து தன்னுடைய ஜீவசக்தி மேலே போய் பிரம்மரந்திரத்தில் இருக்கின்ற சுக்கிலத்தை தொடுகின்ற சமயம் உண்டாகிற நிலைமை இன்னதென்று விவரித்துச் சொல்ல யாருக்காகிலும் முடிவதுண்டா?

முடிவதில்லை

அதாகும் பிரம்மானந்தம்.

எப்படி என்றால் பிரம்மம் என்பது சுக்கிலம்.

அந்த சுக்கிலமாய் இருக்கின்ற பிரம்மத்தை ஜீவன் சென்று தொடுகின்ற சமயத்தில் மிகவும் சிறிய ஒரு நொடிப்பொழுது அதாவது கண் இமைப் பொழுதிலுள்ள நிலைமை அதாவது கண் இமைகள் மூடித் திறக்கிற சமயம் உள்ள நிலைமை இன்ன விதத்தில் என்று யாதொருவருக்கும் சொல்ல முடிவதில்லை.

அதாகும் ஆனந்தம்.

இதற்காகும் ஆனந்தத்தில் இருந்து உற்பத்தியாகிற தென்றும் ஆனந்தத்தில் இருக்க வேண்டியது என்றும் சொல்லக் காரணம்.

அதனால் மேற் சொன்னபடி உண்டாகிற ஆனந்தத்தில் ஜீவன் சென்று லயிக்கின்றதாகும் "பிரம்மானந்தம் "

அப்படி பிரம்ம சொரூபமாயிருக்கின்ற சுக்கிலத்தை பானம் செய்து, லயித்து என்றென்றைக்கும் உப ஜீவனம் செய்து ஜீவித்திருக்க வேண்டிய சொத்து சுக்கிலம் ஆகின்றது.

அதை நாம் நினைக்காமல் நிமிஷ நேரத்திலுள்ள சுகத்தை விரும்பி, தான் என்றென்றைக்கும் உபஜீவனம் செய்து ஜீவித்திருக்க வேண்டிய தன்னுடைய சொந்த சொத்தைத் தானே திருடி நாசம் செய்கிறோம்.

அதனால் மேற்சொன்ன சம்யோக சமயத்தில் எப்படி ஜீவன் நம் உள்ளில் தானே அடங்கி உள்ளிலேயே கீழும் மேலுமாய் நடந்து ஜீவன் சுக்கிலத்தைத் திருடப்போகின்றதோ, அப்படியே ஜீவன் உள்ளில் தானே கீழும் மேலுமாய் நடந்து மேலே உள்ள பிரம்மமாய் இருக்கின்ற சுக்கிலத்தில் லயித்தால் என்றென்றைக்கும் ஆனந்தமத்தனாய் இருக்கலாம்.

இதற்காகும் " பிரம்மானந்தம் " என்று சொல்கிறது.
;சுவாமி சிவானந்த பரமஹம்சர்