புதன் நரம்பு மண்டல அதிபதி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

புதன் நரம்பு மண்டல அதிபதி

Post by ஆதித்தன் » Wed Sep 19, 2018 6:20 am

புதன் கிரகம் உடலில் உள்ள நரம்புகளுக்கு சக்தி கொடுக்கும் சிறப்பு பணியினைச் செய்கிறது.

புதன் கிரக மின் காந்த சக்தியினை உட்கிரகித்துக் கொண்டால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

நரம்புகளின் தொகுப்பே மூளை ஆகும். ஆகையால், புதன் கிரக மின் காந்த சக்தி மிகுதி உடையவர்கள் புத்திசாலியாகவும் விளங்குவார்கள்.

புத்திசாலிகளாக நாம் இருக்க வேண்டும். அப்படியானால், புதன் கிரக சக்தியினை, புதன் கிழமை அதிகாலை சூரியன் உதயத்தின் பொழுது மூச்சினை நன்றாக இடகலையில் உள்வாங்கி, இடகலை உயிர்நாடி வழியாக வெளிவிட்டு என்று நிதானமாக ஆழ்ந்த சுவாசம் செய்வதன் அதிகப்படுத்தலாம்.

புதன் கிழமை என்பது செளபாக்கிய நாள். இந்த நாளில் புதன் ஓரையில் நற்காரியங்களை தொடங்கினால் நல்லபடியாக அமையும்.

காதலுக்கும் உகந்த நாள்.

புதனின் செயலுக்கு இடையூறாக இருக்கும் கிரகங்கள் செவ்வாய், குரு, சந்திரன்.

ஆகையால், புதன் கிழமை நல்லநாள் என்றுச் சொன்னாலும் செவ்வாய், குரு மற்றும் சந்திரன் ஓரையில் காரியங்களை ஒத்தி வைத்தல் நல்லது.

புதன் கிரக சக்தி அதிகம் உள்ளவர்களை நாடி பிற புதன் கிரக சக்தி நபர்களும் வருவார்கள். இது ஒர் இணைப்பு மண்டல கிரகம்.

புதன் கிழமை அதிகாலை நாடியானது, அம்பாளின் நாடியில் ஓட வேண்டும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”