Page 1 of 1

நிறைந்து கிடக்கும் பணத்தின் அதிபதி குரு

Posted: Thu Sep 13, 2018 10:39 am
by ஆதித்தன்
அதிர்ஷ்டத் தேவதை சுக்கிரன் என்றால், நிலையான பணத்தின் அதிபதி குரு ஆவார். குருவின் மின் காந்த சக்தி அதிகமாக இருப்பவர்கள் நிறந்தர பணக்காரர்களாக இருப்பார்கள். ஆசிரியர் போன்ற மற்றவர்களுக்கு அறிவுரை, போதனை செய்யும் பதவிகளிலும் இருப்பர்.

சூரியனும் குருவும் இணைந்த மின்காந்த சக்தி அதிகம் உள்ளவும் மிகப்பெரிய தலைவர்களாக இருப்பார்கள்.

குருவின் மின் காந்த சக்தியினை வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்தின் பொழுது 12 நிமிடம் மூச்சினை உள்வாங்கும் பொழுது குருவின் மின் சக்தி தனக்குள் புகுந்து நிறைவதாக மனதார நினைத்து வேண்டி தியானம் செய்யுங்கள். குருவின் அருள் , தியானத்தினை ஒவ்வொரு வாரமும் செய்யச் செய்ய கிடைக்க ஆரம்பிக்கும்.