உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெயிஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
========== திருமூலர் - திருமந்திரம்
தன் உடம்பால் உயிரை வளர்க்க முடிகிறதோ இல்லையோ, நாம் உண்ணும் பிற உடம்பால் நம் உடல் வளம் பெறுகிறது. ஆகையால் ஒர் அறிவு முதல் ஐந்தறிவு வரை என நாம் உண்ணும் உயிரினங்களை நல் ஆரோக்கியமாக வளர்த்தால் நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
நம்மால் உயிரை வளர்க்க முடியாது, உடலை மட்டுமே வளர்க்க முடியும். உடலை ஆரோக்கியமாக வளர்த்தால் உயிரும் நீண்டு தங்கும்.