வாழ்த்தின் மூலம் “அட்லாப் ஹிட்லரை” மாற்றியிருக்க முடியுமா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வாழ்த்தின் மூலம் “அட்லாப் ஹிட்லரை” மாற்றியிருக்க முடியுமா?

Post by marmayogi » Fri Sep 02, 2016 11:04 am

கேள்வி: வாழ்த்தின் மூலம் “அட்லாப் ஹிட்லரை” மாற்றியிருக்க முடியுமா?

பதில்: ஆம். சந்தேகத்திற்கு இடமின்றி மாற்றிருக்க முடியும். நீங்கள் எல்லைகட்டிய மனதுடன் ஹிட்லர் என்கிற தனி மனிதனைப் பார்கிறீர்கள்.
ஒரு தனி மனிதன் ஆயிரக்கணக்கான மனிதர்களை விஷ வாயுவை பயன்படுதி ஒரு அறைக்குள் அடைத்து கொன்றிருக்க முடியாது.
மனிதர்களின் எதிர்மறையான எண்ணங்கள் ஒன்று சேர்ந்து, காலத்தால் வலுப்பெற்று ஒரு தனி மனிதன் மூலம் செயலுக்கு வந்துவிட்டது. ஹிட்லர் என்கிற தனி மனிதன் அதற்கு கருவியாக, ஒரு மீடியமாக அமைந்தான். அவ்வளவே.

ஹிட்லரின் அல்லது முசோலினியின் வீழ்ச்சி மற்றும் இறப்பு மிக்க கொடுமையானததாக அமைந்தது அல்லவா? ஏன் இப்படி நடந்தது என்று எண்ணிப்பாருங்கள். அவர்களின் கொடூரமான செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சாப அலைகள் உச்சம் பெற்று இந்த கோரமான இறப்புக்கு காரணமாக அமைந்தது.
மனிதனின் அறிவின் தெளிவிலேதான் இந்த தவறன செயல்கள் மற்றும் பழிவாங்கும் போக்கு மேலும் பழிக்கு பழி வாங்குதல் என்கிற தொடர் வினைகள் முடிவுக்கு வரும்.

வாழ்த்துதல், பழிக்கு பழி என்பதிலிருந்து மனித குலம் மீள, ஒரு மிக அற்புதமான முறையாகும். அனைவரும் எளிதில் நடைமுறைப்படுத்தக் கூடியதாகும். வாழ்த்துபவருக்கும், மனிதகுலம் முழுமைக்கும் அது முன்னேற்றத்தை அளிக்கும்.
வாழ்க வளமுடன்.

;-யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”