பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Fri May 11, 2012 11:49 pm

மெலிந்த உடல் குண்டாக...


அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்... உடலில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மனசு நன்றாக இருந்தால் புன்னகை முகமாக... எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக... அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே... மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உடலும் குளிர்ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.

உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மனதும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப்பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக்கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படும்.

அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத் தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்கலாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங்களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.

இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோப்பு இல்லை என்றாலும் அந்த தன்மை உடைய ஷாம்புவோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்றனர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச்சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

இது அழகு தருவதோடு... உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளித்தால் சருமம் மெருகேறும். அழகு என்றால் அதில் தலைமுடிதான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதற்காக இப்போதெல்லாம் டை அடிக்கின்றனர் பலர்.

டை அடிப்பதற்கு பதிலாக 100 கிராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்­ர் சேர்த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல்லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.

கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகுக்கு காரணம். சீப்பு, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண்ணை தேய்த்து தலைமுடியை அலசவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.

இன்றைக்கு நடுத்தர வயதுள்ளவர்களில் பெரும்பாலும் டை அடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும். இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடிகள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண் மையை பயன்படுத்தி முடியை கறுப்பாக்கலாம்.

நிறைய காய்கறிகள் சாப்பிடுவோருக்கு சருமம் பளபளப்பாக இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் அழகாக இருப்பார்கள். கேரட், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.

உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்... 101 நாளில் எளிதாக குண்டாகலாம்.

50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு.

குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய... 50 கிராம் கொள்ளை வறுத்து... பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ­ரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லதே. :great: :great: :great:

:thanks: :thanks: :thanks: :thanks: :thanks:
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Fri May 11, 2012 11:54 pm

முகத்தை பாதுகாக்கும் முறைகள்


ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான சருமம் உள்ளது. அதில் ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எண்ணை வழியும் முகத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும். இவ்வாறு செய்து வந்தால் கறுத்துப் போவது, வறண்டு போவது, மற்றும் பருக்களிலிருந்து முகத்தைக் காப்பாற்றலாம்.

பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். அழகாக இருப்பதில் நம் சருமத்தின் பங்கு அதிகம். சருமத்தின் நிறத்தை நிர்ணயம் செய்வது மெலனின் எனப்படும் நிறமிகள். இவை சருமத்தின் அடியில் கூடக்கூட நிறம் குறையும். நிறம் குறைவதற்கு காரணம் என்னவென்றால் நாம் வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தின் கீழே உள்ள இந்த நிறமிகள் சருமத்தின் வெகு அருகில் வருகின்றன. அதனால் தான் வெயிலில் அலைபவர்களுக்கு உடம்பு கருக்கிறது.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Fri May 11, 2012 11:57 pm

பட்டுப்போன்ற முகத்திற்கு


முகம் பட்டுப்போல் மென்மையாக இருக்க...
வெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பஞ்சை இந்த சாற்றுக் கலவையில் முக்கி முகம் பூராவும் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். முகம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.

முகம் புது மெருகோடு இருக்க...
ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும்.

முகம் கவர்ச்சிகரமாக விளங்க...
கசகசாவில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும். முகம் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருக்கும்.

முகம் நல்ல நிறம் பெற...
முள்ளிக்கி சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்து வந்தால் முகம் நல்ல நிறம் பெறும்.

முகப்பருவைப் போக்க...
முகப்பரு உள்ள இடத்தில் சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகிய மூன்றையும் நீர்விட்டு இழைத்து போட்டு வந்தால் பரு தானே மறைந்து விடும். :great: :great: :great:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by umajana1950 » Sat May 12, 2012 9:28 am

ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும்.
இயற்கை தரும் இந்த அருமருந்து இருக்க ஃ பேர்னஸ் கிரீம்கள் எல்லாம் எதற்கு????
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Wed May 16, 2012 6:07 pm

Umajana wrote ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும்.

இயற்கை தரும் இந்த அருமருந்து இருக்க ஃ பேர்னஸ் கிரீம்கள் எல்லாம் எதற்கு????
மிகவும் சரியாக சொன்னீர்கள் உமஜனா!!!!!!
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Wed May 16, 2012 6:22 pm

அழகு குறிப்புகள்:தலைமுடியை மெயின்டெய்ன் செய்ய முடியலையா?


உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?

சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். 'வாட்டர் பேஸ்டு மேக்கப்' போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா?

இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.

சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா?

ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.

உங்கள் சருமத்தில் முகச் சுருக்கம் விழுந்து விட்டதா?

டோன்ட் வொர்ரி.... முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சீர் செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.

டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா?

கெமிக்கல் ஃபேஷியலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.

உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?

கவலையை விடுங்கள். விட்டமின் 'ஈ' ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.

செலவே இல்லாத ஈஸி ஸ்க்ரப்பர் வேண்டுமா உங்களுக்கு?

பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.

'ட்ரை ஸ்கின்' உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத 'வெஜிடபிள் ஃபேஸ்பேக்' இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?

பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Wed May 16, 2012 6:36 pm

ஆண்களுக்கான கோடை கால குறிப்புகள்!


ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:

வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும்.

வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள்.

பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.

அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள், இல்லை என்றால் பியூட்டி பின்க் பான்ஸே போதுமானது.

தலையில் கேப்போ, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.

அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலெட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும். ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அண்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரடக்ஷனும் கூட, அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம். அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதீங்க.. முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.

வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் "ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்" அது நிறைய பேருக்கு சிரிப்பு வரும். ஏன் சொல்கிறார்கள் என்று யோசிப்பது கிடையாது.
எண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.

எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவதும் எண்ணையாக்கி அடுத்து நுழைபவரை விழ வைத்து மண்டைய பிளந்துடாதீங்க...

துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.

வெயில் காலத்தில் பாலிஸ்டர் மிக்ஸ்டு காட்டன் போடாதீர்கள். 100% காட்டனே உபயோகப்படுத்துங்க.

கர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்பப்போ குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.

நிறைய பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வரலாம்.

அதற்கு, அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடலாம். இல்லை லஸ்ஸி அடித்து வகையா, மேங்கோ லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி, ஆரஞ்சு லஸ்ஸி என குடிக்கலாம்.

அதே போல் நீராகாரம் நிறைய சாப்பிடுவது நல்லது. தினம் மோர் குடிப்பதை (பீர் இல்ல( பழக்கத்தில் வைத்து கொள்ளுங்கள். ஜூஸ் வகைகள், பழங்கள் இது போல் வெயில் காலங்களில் நிறைய சாப்பிடுவது நல்லது.

தண்ணீர் நிறைய குடியுங்கள், முடிந்தால் இள நீர், தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள் சாப்பிடலாம். இவையெல்லாம் சாப்பிடுவதால் கொப்புளங்கள், வேனல் கட்டிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

பேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்

* கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, இவைகளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம்.. இது ஈசியன உடனடி சாலட்.

* அல்லது மாங்காய் சாலட் செய்து சாப்பிடலாம்.

* மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்.

* இதே போல் கொண்டைக்கடலையிலும் செய்யலாம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by muthulakshmi123 » Mon May 21, 2012 11:00 pm

பால்கி சார்,அத்தனை அழகு குறிப்புக்களும் நல்லா இருக்கு.....ப்யூட்டி பார்லருக்கு போக தேவையே இல்லை....நன்றி சார்
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by RJanaki » Sun Jun 03, 2012 6:44 pm

50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு.

முத்துலட்சுமி வெந்தயத்தை வேக வைத்தால் கசப்பு போய் விடுமா????????????
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Tue Aug 07, 2012 1:10 am

பெண்களின் வயிற்று சதை குறைய..!!!


நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”