மருந்தும் மதுவும் மயக்கம் கொடுக்கிறதா?

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மருந்தும் மதுவும் மயக்கம் கொடுக்கிறதா?

Post by ஆதித்தன் » Sun May 19, 2019 2:26 pm

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக, பசிக்காக மட்டும் உணவு உட்கொள்கிறேன். ஆசையான உணவுகளை, பசிக்கும் பொழுது உட்கொள்கிறேன், பசியளவுக்கு மட்டும் உட்கொள்கிறேன்.

நம் வாழ்வில் பெருமளவில் மகிழ்ச்சிகளை இழந்தமைக்கான காரணம் என்ன என்றுப் பார்த்தால், பிறர் என்ன நினைப்பார்களோ என்ற ஒர் சிந்தனையின் ஓட்டத்தில், தனக்கு பிடிச்சது என்பதுபோய், பிறர்க்கு பிடிக்குமா? என்ற கோணத்தில் சுழல்வதுதான்.

அதைப்போல், உணவு என்பதும், தனக்கு பசிக்கல, தனக்கு பிடிக்கல என்பதுபோய், அவங்க சாப்பிடக் கொடுக்கிறாங்க, இந்த நேரத்தில்தான் சாப்பிட சொல்லியிருக்கிறாங்க, இப்பொழுதுதான் கிடைக்குது, நல்ல சாப்பாட்ட வீண் செய்யக்கூடாது, இப்படி பல காரணங்களால், உணவை வயிற்றில் அடைத்து வைத்துக் கொள்வதுதான், கெடுதலாகி, நோயாய் மாறுகிறது.

நோய் வந்துவிட்டது.. அதிலும் குறிப்பாக நோயே இல்லாவிட்டாலும் நோயாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் இன்று அதிகரித்துவிட்டார்கள்.

அதென்ன நோயே இல்லாமல் நோயாளிகள் ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்றுச் சொன்னால், அவர்கள் சுகர் பேசண்டாக இருப்பார்கள் அல்லது பிரசர் பேசண்டாக இருப்பார்கள்.

சுகரும் சரி, பிரசரும் சரி நோய் அல்ல.

சுகரும் பிரசரும் நேரத்திற்கு நேரம் மாறக்கூடிய மனம் சம்பந்தப்பட்ட, சுழல் சம்பந்தப்பட்ட விடயம். அது அவ்வாறு மாறினால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

ஆங்கில மருந்துகளை ட்ரக்ஸ் என்று சொல்வார்கள், அதாவது போதைப் பொருள் என்றும் சொல்வார்கள்.

சுகர் & பிரசர் என மருந்துகள் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் சாப்பிடுபவர்கள், பின்னர் மாத்திரையை நிப்பாட்டினால் கிறு கிறுன்னு தலைச்சுற்றுது, அடிக்கடி மயக்கம் வருது என்று சொல்கிறார்கள்.

மயக்கம் வந்தால், காற்றோட்டமான இடத்தில் படுத்து உறங்குங்கள் என்று சொன்னால்.... அப்படின்னா வேலைகளைச் செய்வது யார்?

வேலை முக்கியமா? உடல் ஆரோக்கியம் முக்கியமா?

வேலை செய்வது பணத்திற்காக, அந்த பணத்தினை பயன்படுத்த ஆரோக்கிய உடல் வேண்டும்.

ஆரோக்கிய உடலுக்குத்தான் பணம் என்றுச் சொன்னால், வேலையை விட உடல் ஆரோக்கியம்தான் முக்கியம். இதிலும் குறிப்பாக, நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தினைக் கொண்டு ஆரோக்கியத்தினை வாங்க முடியாது. ஆரோக்கியம் மிகவும் விலை உயர்ந்தது. எவ்வளவு கோடீ சம்பாதித்தாலும் ஆரோக்கியத்தினைக் கெடுத்துக் கொண்டால் வேதனைதான் மிஞ்சம். உதாரணத்திற்கு முன்னாள் தமிழக முதல்வர், முன்னாள் இந்திய பிரதமர் என பலர் இருக்கிறார்கள்.

போதை தரக்கூடிய டாஸ்மாக் மதுப்பொருட்கள் உட்கொண்டாலும் தலை சுற்றிக் கொண்டு போதையில் உறக்கம் நன்றாக வரும், அதைப்போல், ட்ரக்ஸ் எனக்கூடிய ஆங்கில மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டே இருந்தாலும் தலைச்சுற்று மயக்கம் வரும்.

இதற்கான காரணம், உடல் அந்த கெடுதலான போதைப் பொருளை நச்சுத்தன்மை நீக்கி வெளியேற்ற முயலும் முதன்மை செயல்பாடுதான். உயிருக்கு கேடான நச்சுப் பொருளை நீக்குவதே தனது முதன்மையாக செய்ய வேண்டிய பணிச் சூழலில் வேற எந்த வேலையும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் உடல் மயக்கத்தினை உருவாக்கி அந்தப் பணியினை செய்ய இருக்கிறது. இது உடலில் அனிச்சை செயல், இதயம் தானாக தேவைக்கு துடிப்பது போல, தானாக தேவைக்கு ஏற்ப சுவாசிப்பது போல, மயக்கம் என்பதும் உடல் தன் அவசரத்திற்காகச் செய்யக்கூடிய ஒர் அனிச்சை செயல்.

மயக்கத்திற்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவாக குணம் ஆகிவிடலாம்.

மயக்கத்தினை நிறுத்தி, குளுக்கோஸ் ஏற்றி உற்சாகமாக வேலை செய்ய முற்பட்டால், நச்சு உடலில் ஏதேனும் ஒர் பகுதியில் தேங்கிவிடும். ஒர் நாள் கூத்துக்கு திருவிழாவில், அல்லது கல்யாண வீட்டில் குடிச்ச குடியின் நச்சாக இருந்தால், அந்த சொத்த நச்சு, ஏதேனும் ஒர் நாளில் வெளியேறிவிடும்., பிரச்சனை இல்லை.

தினசரி குடிகாரனாக மாறினால், நச்சுகள் தேங்கி தேங்கி அதிகரித்து அடுதடுத்து உடல் உபாதைகள் தொடங்க ஆரம்பிக்கும்.

அதைப்போல்தான், சுகர் மாத்திரை, பிரசர் மாத்திரை என தினம் எடுப்பவர்களும், தினசரி உடலில் உயிர்கொல்லி மருந்து நச்சுகளை உடலில் சேர்க்கிறீர்கள் என்பதே நாளடைவில் உடல் உபாதைகள் அதிகரிக்கின்றன.

கால் விரல் கருத்தல், சிறிய புண் உண்டானாலும் ஆறாத நிலை, கால் விரலை எடுத்தல், காலையே எடுத்தல், இப்படி ஒவ்வொன்றாக சாகடிக்கச் செய்கிறீர்கள்.

உயிரோடு இருந்தாலும் வலியோடுதான் வாழ்கிறீர்கள்.

ஆரம்பத்தில் வலியினை பொறுத்துக் கொண்டால் கூட இன்பம் வந்துவிடும். ஆனால் வலியினை அடக்கினால், அந்த வலிக்காகவே காத்திருக்க வேண்டிய சூழல், வலி வந்துவிடுமோ என்றே வாழ வேண்டிய சூழல், அந்த வலியினை அனுபவிக்கவே வாழ வேண்டிய சூழல் என தொடர்கிறது வாழ்வு.

அதனைத்தான், பிறப்பில்லா வரம் கொடு இறைவா என்று துன்பத்தினை முழுமையாக முன்னோர்கள் அனுபவித்தனர்.

ஆனால் இன்றைய புதிய நவீன சமூகம், வலியும் துன்பமும் முதமையில் உண்டென்றால், 40 வயதுக்குள் வாழ்வினை அனுபவித்து இறந்துவிட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டது.

ஆனால், அவ்வாறு இறப்பது இறப்பல்ல, மரணம்... மா ரணம்... மா ரணத்திற்கும் பின்னும் பிறப்புண்டு. அப்பொழுதும் துன்பம் தொடரும்.

இறையிலிருந்து பிறந்து, இறையுடன் சேர்வதுதான், இறப்பு. இறப்பவர்கள் பிறப்பதில்லை. அதனை மற்றொரு வகையில் சமாதி அடைவதற்காகவே வாழ்வார்கள், அது, ஆதியாகியாக இறையிலிருந்து பிறந்து, அந்த ஆதியுடன் இணைவதே, சம ஆதி, சமாதி.

தூங்குவது போல் சாக்காடு தூங்கி
விழிப்பது போல் பிறப்பு

என்று வள்ளுவர் கூறுவது போல, நம் முன்னோர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து, தூங்கும் நேரத்திலேயே இறப்பதும், இறப்பு வருவதனை 3 மாதங்களுக்கு முன்னரே உணர்ந்து இறப்பதும் என இறப்பை, இறைவனுடன் சேரப்போவதனை உணர்ந்து மகிழ்வாக மேல் உலகம் சென்றார்கள்.

ஆகையால், மருந்து மாத்திரைகளை தூக்கி ஏறியுங்கள். உடலை கொஞ்சம் கவனியுங்கள்.

சுகர் மாத்திரை நிப்பாட்டினால் வரும் மயக்கம், தலைச்சுற்றலுக்கு எல்லாம் பயப்படாதீர்கள்.. மயக்கம் வந்தால் நன்றாக தூங்கி எழுங்கள். உடல் புத்துணர்ச்சி பெறும்.

மாத்திரை சாப்பிடுவதனை நிப்பாட்டிவிட்டால், உடலில் தேங்கிய நச்சுக்களை நீக்க அவ்வப்பொழுது மயக்கம் வரும், தன் நன்மைக்காக வரக்கூடிய மயக்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து தூங்கி எழுங்கள், விரைவில் ஆரோக்கியம் திரும்பும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”