வணக்கம்!
எனது கிராமம் தேவனூர் இந்த ஊர் தேவர்கள் வாழ்ந்த இடம் ஆகையால் தேவனூர் என்று அழைக்கப்படுகிறது என சொல்வார்கள் முழுக்க நஞ்சை பயிர் செய்யகூடிய மண்வளம் நிரய்ந்தது இங்கு மாவீரன் ராஜாதேசிங்கு ஆண்ட சிவன் கோவில் ஒன்று உள்ளது இந்த கோவில் சுமார் 1600 வருடம் பழமை வாய்ந்தது ஆற்காடு நவப்புடன்
இந்த தேவனூர் கோவிலில்தான் இறுதிகட்ட போரில் மாவீரன் ராஜாதேசிங்கு தனது உயிராய் நினைத்த பஞ்சகல்யாணி
குதிரையின் கால் வெட்டப்பட்டதை அறிந்து தன்னைதானே உயிரை மய்துக்கொண்டர் மாவீரன் ராஜதேசிங்கை செஞ்சி செல்லும் வழியில் நீலம்பூண்டி என்ற கிராமத்தில் அடைக்கலம் செய்துள்ளனர் அந்த போரின்போது
இந்த கோவில் சேதமடைந்தது தற்போது அரசால் சீர்செய்யப்பட்டு வருகிறது இந்த கோவிலை சுற்றித்தான் முதலில் எங்களது கிராமம் இருந்துள்ளது போரின்போது ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக அதன்பிறகு சிறிதுதூரம் நகர்ந்து குடியமர்ந்துள்ளனர் எனது கிராமம் உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயம் மட்டுமே செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்
எனது கிராமம் அறிமுகம்
-
- Posts: 146
- Joined: Wed Mar 06, 2013 4:27 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எனது கிராமம் அறிமுகம்
மக்கள் யாவருக்கும் பசி போக்கும் உணவினை வழங்கும் தொழிலின் கிராமமாக திகழும் கிராமம் மேலும் செலவச் செழிப்பாக வளரட்டும்..