பிச்சைகாரன் ஆன மக்கள், 50-100 நோட்டை காணோம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிச்சைகாரன் ஆன மக்கள், 50-100 நோட்டை காணோம்

Post by ஆதித்தன் » Fri Nov 11, 2016 2:02 am

[youtube]https://www.youtube.com/watch?v=gDZ8VrM1QH4[/youtube]

கறுப்பு பணம் எல்லாம் 100 ரூபாய் நோட்டு மற்றும் 50 ரூபாய் நோட்டிற்குள் புகுந்து கொண்டதா?

மக்கள் எல்லாம் நூறு ஐம்பது கையில் இல்லாமல் எந்தவொரு பொருளையும் வாங்க முடியாமல், 2000 இருந்தும் சரியாகப் பயன்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள் என்பது தற்போதைய செய்தி.

வளர்ந்த வல்லரசு நாட்டின் ஏழ்மையை ஒழிக்க எந்தவொரு புத்திசாலிகிட்டையும் ஆலோசனை கேட்கலையோ என்னவோ, எல்லோரும் இருந்தும் , நோட்டுகளை எல்லாம் தடை செய்து, ஊழலுக்கு சவால்விட்டு, மாபியாவுக்கு சிம்ம சொப்பனாக விளங்கினாலும் பிச்சைக்காரன் பிச்சைக்காரனாகவே இருக்கிறான் .. பல ஆண்டுகள் கடந்துமே வல்லராசுக்கு விடிவு கிடைக்கலையே, இன்று ஐநூறு ஆயிரம் தடை என்றுச் சொல்லி நாட்டில் உள்ள பொதுமக்களை எல்லாம் நூற்றுக்கும் ஐம்பதுக்குமாய் ஒவ்வொருவராய் கேட்க வைத்த நிலையினைப் பார்க்கும் பொழுது நவீன #பிச்சை நம்ம ஊர்க்கும் வந்துவிட்டதுபோல் கேவலமாக இருந்தது.. சரி.. இதெல்லாம் அரசியலில் சகஜம் தானே... 2020, 2020 என்றுச் சொன்னார்களே அன்றாவது ஏழ்மை கழிந்து, பொருளாதார வளர்ச்சியும் , விடுதலை மாற்றமும் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். #அதிபுத்திசாலி #யார்
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”