Page 1 of 1

பிறந்த ஊர்

Posted: Sun Jun 14, 2015 3:30 pm
by துவாரகநாத்
நான் பிறந்த ஊர் சென்னை. வாழும் ஊர் வேறாக இருந்தாலும் பிறந்த ஊர் என்றாலே மனதில் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நிலவுகிறது. என் ஊரை பற்றி நினைக்கும் பொது எனக்கு வெயில் படத்தில் வரும் "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி" என்ற பாடல் தான் ஜாபகத்திற்கு வரும். சிறு வயதில் அந்த அளவிற்கு வெயிலோடு விளையாடிய அந்த நாட்களை என்றுமே மறக்க இயலாது. நம்மை பெற்ற தாயை எப்படி மறக்க முடியாதோ அது போல நான் எங்கு சென்றாலும் நான் பிறந்த என் ஊரை மறக்க முடியாது.