Page 1 of 1

பிறந்த ஊர்

Posted: Sat May 16, 2015 1:52 pm
by Sirappu
வணக்கம்
நான் பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம்.நடுத்தர குடும்பதில் பிறந்து வளர்ந்தவன்.தந்தை பெரியார் பிறந்த ஊர் .இங்கு தான் கைத்தறி மற்றும் விசைத்தறிகள் அதிகம் உள்ளது.இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை என்று இருந்த பெயர் காலப்போக்கில் ஈரோடு என்று பெயர் வந்தது என்று கூறுவார்கள்.கந்த ஷஷ்டி அரங்கேறிய சென்னிமலை முருகன் கோவில் மற்றும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை இங்கு தான் உள்ளது.சுற்றுலா தலங்களாகிய பவானி சாகர் அணை,குண்டேரிப்பள்ளம் அணை , கொடிவெரி அனை இங்கு உள்ளது. மஞ்சள் அதிகம் விலையும் ஊர் இதுதான். சிறப்பு மிக்க பண்ணாரி அம்மன் கோவில் , சென்னிமலை பெட்ஷீட் மற்றும் பவானி ஜமுக்காளம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Re: பிறந்த ஊர்

Posted: Sat May 16, 2015 3:53 pm
by marmayogi
சேலம்- மேச்சேரி வந்தீங்கனா வீட்டுக்கு வந்துட்டு போங்க :amen: :amen:

Re: பிறந்த ஊர்

Posted: Sun May 17, 2015 12:35 pm
by Sirappu
கண்டிப்பாக வருகிரேன்.அழைத்ததற்கு நன்றி