நான் பிறந்த ஊருமான இரண்டாவது தாயூமான நான் பிறந்த மண்
நான் பிறந்த மண்ணின் பெயர் = கபிலர்மலை.
என் ஊரின் பெயரிலேயே அதற்கான அர்த்தம் உள்ளது.
நீங்கள் நெனைப்பது சரிதான். இது சங்க கால புலவர்களில் புகழ் பெற்றவர்களில் ஒருவரான கபிலர் வாழ்ந்த இடம் இங்கு உள்ளது.
இதனால் தான் இந்த மலைக்கு இப்பெயர் வந்தது.
இங்கு கபிலர் வாழ்ந்த குகை மற்றும் அவரது கல்வெட்டுகள் மற்றும்
இதில் பிரபலமான முருகன் கோவில் மலை மேல் அமைந்துள்ளது.
எங்கள் ஊர் காவிரி ஆற்றின் பக்கத்திலும் தொழிற்சாலைகளின் நடுவிலும் அமைந்த கிராமம் ஆகும்.
இதனை சுற்றி வேலுர், நாமக்கல், கருர், ஈரோடு, திருசெங்கோடு, போன்ற பகுதிகளின் நடுவில் அமைந்துள்ளது.
எங்கள் கிராமம் ஒர் அடிப்படை நிறைவுப் பெற்ற பெரிய கிராமம் ஆகும். ஏன் என்றால் இங்கு, Indian Bank, ஆரம்ப சுகாதர நிலையம், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்விக் கூடம், கல்லூரிகள் வரை அனைத்தும் உள்ளது. Telephone Exchange, Electricity Board, Veterinary Hospital, Post Office, Co-operative Bank, Library அண்டு கிராம பஞ்சாயத்து என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.
இது ஒரு ஊராட்சி ஒன்றியம் ஆகும்.
பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுப்பவள் தாய் என்றால்
அதன் பிறகு கடைசி காலம் வரை நம்மை சுமக்கும்
இந்த மண்ணும் என் இரண்டாவது தாய் தானே!!!!!
நான் பிறந்த ஊரும் இரண்டாவது தாயூமான நான் பிறந்த மண்
-
- Posts: 65
- Joined: Mon May 05, 2014 10:17 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: நான் பிறந்த ஊரும் இரண்டாவது தாயூமான நான் பிறந்த மண்
கபிலர் வாழ்ந்த மண்ணிலிருந்து வந்திருக்கும் ரவியை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.