இன்றைய காதல் தத்துவங்கள்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

இன்றைய காதல் தத்துவங்கள்

Post by cm nair » Mon Nov 11, 2013 10:00 am

போதையால் அழிந்த இளைஞர்களை விட

பேதையால் அழிந்த இளைஞர்களே அதிகம் ...!!!


காதலில் தோற்றவன்
மனஉறுதி மிக்கவன்
எல்லா தடைகளையும்
வெறியோடு கடப்பான்

காதலில் மன பக்குவம்
இல்லாதவன் -தான்
காதல் பைத்தியம் ஆகிறான்

காதலுக்கு கனவு தேவை
காதலே கனவாக்கி விடக்கூடாது


பெற்றோர் காதலிக்கலாம்
பிள்ளைகள் காதலித்தால்
கேட்டுவிடுவார்கள் -இதுதான்
காதல் வழக்காரோ ...?

காதலியிடம் எத்தனை
மணித்தியாலமும் பேசு
ஆனால் ,
ஒரு நிமிடம் கூட சந்தேகபடகூடாது ...!

கண்ணாடி முன் நின்று அழு
அதுதான் நீ அழும்போது அழும்
மற்றவை எல்லாம் போலிக்கு அழும்
நடிப்பு என்று சொல்லி விலகும் ....!!!

காதலில் கண்ணீரில் கவிதை எழுதினாலும்
இரத்தத்தால் எழுதினாலும் - துடிக்காது
உடலால் தோன்றிய காதல் ...!!!

ஆண்களை விட பெண்ணிடம்
தான் காதல் பொக்கிஷம் உண்டு
அந்த பொக்கிசத்தை கண்டுபிடிக்கும்
இளைஞன் அறிவாளி
அவனே சிறந்த காதலன்
பெண்கள் இவனையே
தேடுகிறார்கள் ....!!!

உயிருக்காக வாழாதீர்
உயிரே நீ என்று
வாழுங்கள்

காதல் தோற்றபின்
இதயம் கல்லாகலாம்
காதலே இல்லாமல்
கல்லாக்காதீர்

மாப்பிள்ளை பார்க்கும் போது
பெண்களே -நீங்கா யாரையும்
காதலித்தீர்களா ...?
என்று கேழுங்கள் -இல்லை
என்றால் அந்த திருமணத்தை
விரும்பாதீர்கள் -உன்னிடம்
ஒரு எந்திரன் வருகிறான் ....!

திருமணம் ஆகாவிட்டால்
பரவாயில்லை
காதலிக்காமல் இருந்துடாதீர்
பிறப்புக்கே அர்த்தமில்லாமல்
போய் விடுவீர் ....!!!

பெண்களே
விழிப்பாக இருங்கள்
ஆண்கள் உண்மையை விட
பொய்யை உண்மைபோல்
சொல்வதில் வல்லவர்கள் ....!!!

ஆண்களே
விழிப்பாக இருங்கள்
நிறைவேற்ற வேண்டியை பெண்கள்
அழுது கொண்டே சாதித்திடுவர் ...!!!

காதலர்கள் பகலில்
வெட்கப்படுவது அதிகம்
இரவில் வெட்கப்படுவது
மிக குறைவு ....!!!

உன் கண்ணில் தெரிகிறது
காதலிக்க வேண்டும் என்ற ஆசை ....
காதலித்துப்பார்
நிச்சயம் புனிதனாவாய் .....!!!

காதல் இருக்கும் வரைதான் இதயம்
இல்லாவிட்டால் மிரமிட் ...!!!

கவிஞர் கூறுவது பொய்யல்ல....!!!
கவிதை சொல்வதெல்லாம் மெய்யல்ல...!!!

பேனையால் மை கசிகிறது....!!!
கவிதையில் வரிகள் வலிக்கிறது ...!!!

மண்ணும் விண்ணும்
ஆணும் பெண்ணும்
என்பதால் தான்
பெண்ணின் மனதை புரியமுடியாது
என்கிறார்கள் ....!!!

இளவட்டங்களே...
காதல் என்பது
அடகு கடைதான்
முதலில் சிரிப்பின்
மூலம் அடகுக்கடை
திறக்கப்படும் ....!!!

அடுத்து நீ சிரிப்பை
அடகுவைப்பாய் ...!!!
இதயத்தை அடகுவைப்பாய் ...!!!
வாழ்க்கையை அடகுவைப்பாய் ...!!!
கடைசியில் வெறும்
கையுடன் நின்று விடாதே ....!!!

நடந்துபார்
தூரம் தெரியும்
காதலித்துப்பார்
துயரம் தெரியும்

காதலித்துப்பார்
கருங்கல் கூட
கற்கண்டாய் தெரியும்

சப்பாத்து இல்லையே
என்று கவலைப்படாதே
கால் இருக்கு என்று
சந்தோசப்படு - (ஜேர்மனிய
பழமொழி )

காதலி ஏமாற்றி விட்டாளே
என்று கவலைப்படாதே
காதலிக்க ஒருத்தி இருந்தாளே
என்று சந்தோசப்படு ....!!!

காதலிக்க முன் இதயம் இருக்கா ..?
என்று பார்க்கமுதல்
காதல் இருக்கா என்று பாருங்கள் ...!!

காதலில் ஆரம்பத்தில் சிரித்ததை
போல் இறுதிவரை சிரித்தவர் இல்லை

அப்படி சிரித்தால்
துன்பத்திலும் சிரிக்க கற்றுவிட்டவர்கள் ...!!!


காதலில் பூவை கொடுத்து

இதயத்தை வாட வைப்பவர்கள் தான்
அதிகம்

எதிலுமே நிறைவு என் மனம் ...
நீ வெறுத்த போது ..
நிறைவடைந்தது ...!!!

காதலில் தோற்றபின்

கண்ணாடிமுன் நின்றுபார் ..
உன்னையே நீ வெறுப்பாய்

காதல் தோல்வி கறையான் அறிப்பது போல் ..
வெளியில் நன்றாக இருக்கும் உள்ளுக்குள்
உக்குவது போல் வெளியில் மனிதனாக தெரிவான்
உள்ளுக்குள் பிணமாவான்

கண்ணில்வடியும் கண்ணீரை காண்பதில்லை . அதைக்கட்டும் கண்ணாடி அதைபற்றி கவலைபடுவாதில்லை .

காதலிக்கும் வரை அவஸ்தை எல்லாம் ஆனந்தம் ...
காதலித்த பின் ஆனந்தம் எல்லாம் அவஸ்தையானது ..!!!
Post Reply

Return to “படுகை ஓரம்”