அண்டார்டிகாவிலிருந்து வரும் ஏலியன்ஸ்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அண்டார்டிகாவிலிருந்து வரும் ஏலியன்ஸ்

Post by ஆதித்தன் » Fri Mar 10, 2017 9:24 am

மக்கள் வசிக்க முடியாத கண்டமாகச் சொல்லப்படும் அண்டார்டிகா கண்டத்திலிருந்துதான் பறக்கும் தட்டுகள் வெளிவருகின்றன என்ற உண்மையை ரஷ்யா உளவுத்துறை முன்னாள் அதிகாரிகள் வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

இன்று பரப்பாகச் சொல்லப்படும் ஏலியன்ஸ் திட்டத்தினை பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க உளவுத்துறை வகுத்துவிட்டதாகவும், 1947-ஆம் ஆண்டில் அண்டார்டிகா கண்டத்தில் அதற்கான ஆய்வுக்களத்தினை நிறுவுவதற்காக பனிப்பாறைகளை மட்டப்படுத்தி தயார் செய்துள்ளனர்.

அணு ஆய்வுக்கூடங்கள், ஹை-வோல்டேஜ் மின்சக்தி கூடங்கள், ஏவுகணை ஏவுதளம், பறக்கும் தட்டுகள் ஏவுதளம் என ஒர் பெரிய சதித்திட்டத்திற்கான அனைத்தும் அங்குதான் வகுக்கப்பட்டு வருகிறது.

குளோபல் வார்மிங் என்று வாய் கிளியக் கத்தும் சமூக ஆர்வலர்கள், இயற்கை அமைத்துக் கொடுத்த அண்டார்டிகா பனிக் கண்டத்தினை மட்டமாக்கிக் கொண்டிருக்கும் உலக வல்லரசு அமெரிக்காவுக்கு எதிராக மட்டும் குரல் கொடுத்தால் போதும்... அதனைவிடுத்து, உலக வெப்பமயமாதலை தடுக்க ஒர் நாள் வீட்டில் லைட் ஆப் பண்ணி வையுங்க... என்றெல்லாம் அட்டைய தூக்கிட்டு அழைவதும் எல்லாம் வேலை இல்லாதவர்கள் செய்கிற வெட்டிவேலையே தவிர,,,, அவர்கள் எல்லாம் சமூக நல ஆர்வலர்கள் அல்லவே அல்ல.

குளோபல் வார்மிங் கூட தாங்கிக்கலாம்... ஆனால் 2020-இல் ஏலியன்ஸ் பூமியை தாக்கி அழிக்கப்போறாங்க என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாங்க பாருங்க, அதுதான் ரொம்ப பயமா இருக்கு.

ஏலியன்ஸ் என்றப் போர்வையில் மேலை நாடுகளில் மட்டுமல்ல, தமிழகத்தில் கூட கடந்த 2015-ஆம் ஆண்டு ஒர் சோதனையை செய்துள்ளனர். அதாவது, எங்கிருந்தோ ஏவப்பட்ட ஒர் பொருள் எரிந்து கொண்டு நமது தமிழகத்தில் வந்து விழுந்தது.. அதனை ராக்கெட் உதிரிப்பாகம் என்று ஒத்துக்கொண்ட ஆய்வாளர்கள், எப்படி இது வந்தது என்றும்.... அவ்வாறு ராக்கெட் என்றால் எந்த நாட்டு ராக்கெட் உதிரிப்பொருள் என்பதற்கான கேள்விக்கு விடையினை தேடவே இல்லை என்பதனை மறந்துவிடக்கூடாது.

இப்படியான இரகசிய ஆய்வுகளை அண்டார்டிகா கண்டத்திலிருந்து கொண்டுதான் அமெரிக்க உளவுத்துறை செய்து கொண்டிருக்கிறது என்று இரஷ்யா உளவுத்துறை அதிகாரிகள் சில ஆதாரங்களுடன் தகவலை வெளியுட்டுள்ளன.

ஏலியன்ஸ் இலக்கு தமிழகத்தினையும் கொண்டுள்ளது என்பதனால், இப்பொழுதிலிருந்தே விழிப்புடன் இருந்து திட்டத்தினை தவிடு பொடியாக்க... நம் முன்னோர்களை வணக்கிக் கொள்ளுங்கள்.... அவர்கள் காக்கலாம்...
Post Reply

Return to “படுகை ஓரம்”